மகாராஜபுரம் விஸ்வநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மகாராஜபுரம் விசுவநாத ஐ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
வரிசை 10:
==அரங்கேற்றம்==
விசுவநாத ஐயரின் முதல் மேடை கச்சேரி எதிர்பாராத வகையில் அமைந்தது. இவரது இளமைக்காலத்தில் திருப்பாயணம் பஞ்சாபகேச பாகவதர் நடத்திய இராம நவமி விழாவுக்கு போயிருந்தார். பாகவதருக்கு விசுவநாத ஐயர் யார் யாருடைய மாணாக்கர் என்பது தெரிந்திருந்தது.
பாகவதரின் கதாகாலட்சேபம் தொடங்க சற்று தாமதமாகும் என்ற நிலையில், இளம் விசுவநாதனை அந்த இடைவேளயில் பாடும்படி பாகவதர் கேட்டார்.
விசுவநாத ஐயர் நான்கு இராகங்களில் நான்கு கீர்த்தனைகள் பாடினார். இராக ஆலாபனைக்கு கூடிய நேரம் கொடுத்தார். அவரது நல்ல குரல், இராகம், பாவம், கீர்த்தனங்களை சரியாகப் பாடியது, அனைத்தும் சேர்ந்து கும்பகோணத்தின் மிக உயர்ந்த இரசிகர்கள் மத்தியில் பாராட்டுதலைப் பெற்றது. பாகவதர் பாராட்டினார்.
அடுத்து இரன்டு மூன்று வருடங்கள் கோவில் விழாக்களிலும், சங்கர மடத்தின் மாலை வேளை இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வந்தார். (அப்போது காஞ்சி சங்கர மடம் கும்பகோணத்தில் இருந்தது.)
|