மகாராஜபுரம் விஸ்வநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
==அரங்கேற்றம்==
விசுவநாத ஐயரின் முதல் மேடைக் கச்சேரி எதிர்பாராத வகையில் அமைந்தது. இவரது இளமைக்காலத்தில் திருப்பாயணம் பஞ்சாபகேச பாகவதர் நடத்திய [[இராம நவமி]] விழாவுக்கு போயிருந்தார். பாகவதருக்கு விசுவநாத ஐயர் யார், அவர் யாருடைய மாணாக்கர் என்பது தெரிந்திருந்தது. பாகவதரின் கதாகாலட்சேபம் தொடங்க சற்றுத் தாமதமாகும் என்ற நிலையில், இளம் விசுவநாதனை அந்த இடைவேளையில் பாடும்படி பாகவதர் கேட்டார். விசுவநாத ஐயர் நான்கு [[இராகம்|இராகங்களில்]] நான்கு [[கீர்த்தனை]]கள் பாடினார். இராக ஆலாபனைக்கு கூடிய நேரம் கொடுத்தார். அவரது நல்ல குரல், இராகம், பாவம், கீர்த்தனங்களை சரியாகப் பாடியது, அனைத்தும் அங்கிருந்தோரின் பாராட்டுகளைப் பெற்றது. அடுத்து இரண்டு மூன்று ஆண்டுகள் கோவில் விழாக்களிலும், சங்கர மடத்தின் மாலை வேளை இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வந்தார். அப்போது காஞ்சி சங்கர மடம் [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] இருந்தது.
 
==இசை விற்பன்னர்==
இராக ஆலாபனை செய்வதில் இவர் சிறப்பு பெற்று விளங்கினார். அவரது இராக ஆலாபனையில் கற்பனை கரை கடந்து ஓடும். அவருக்கு மிகவும் பிடித்த இராகம் மோகனம். அதே போல ஆரபி, தர்பார், பந்துவராளி, கல்யாணி, ஹரிகாம்போதி, கமாஸ், காம்போதி மற்றும் தோடி இராகங்களில் அவரது ஆலாபனை சிறப்பாக இருக்கும். இந்த இராகங்களில் அமைந்த, தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி, பட்னம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் கீர்த்தனைகளையும், கோபால கிருஷ்ண பாரதியின் தமிழ் பாடல்களையும் அவர் முழுவதுமாக கற்றுக் கொண்டார்.
 
தியாகராஜர் கீர்த்தனைகளில் மிக்க கடினமானவற்றை அவர் மிகுந்த அக்கறையுடன் பயின்றார். ஒரு காலகட்டத்தில் தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் ஐந்தையும் சரியாகப் பாடக்கூடியவர் இவர் ஒருவரே என்ற நிலை இருந்தது.
 
பஞ்சரத்தின கீர்த்தனைகளில் ஒன்றான கனகனருசிரா என்ற வராளி இராக கீர்த்தனையை ஒருவரும் தனது சீடர்களுக்கு கற்றுக் கொடுப்பதில்லை. சீடர்கள் கேள்வி ஞானத்தின் மூலம் கற்றுக் கொள்ளவேண்டும். இதனைக் கற்றுக் கொடுத்தால் உறவில் பாதிப்பு ஏற்படும் என்ற ஒரு எண்ணம் நிலவியது.
 
தியாகராஜ ஆராதனையில் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடப்பட வேண்டுமென 1940ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. அப்போது இந்த வராளி இராக கீர்த்தனையை நன்கு அறிந்தவர் விசுவநாத ஐயர் ஒருவரே! எனவே எல்லா வித்துவான்களும் அவரது பாணியை பின்பற்றி இக்கீர்த்தனையை பாடினார்கள். இன்றளவும் விசுவநாத ஐயரின் பாணியே பின்பற்றப் பட்டு வருகிறது.<ref>[http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=8216&ncat=23&Print=1 மகாராஜபுரம் ஸ்ரீவிஸ்வநாத ஐயர் (1896-1970)]</ref>
 
==பாடிய பிரபல பாடல்கள்==
ஈச பாகிமாம் - கல்யாணி
உண்டத்தே ராமுடு - ஹரிகாம்போதி
ஏதுலப்ரோதுவா - சக்கரவாகம்
யெவரிக்கையே அவதாரம் - தேவமனோகரி
மோகன ராமா - மோகனம்
கருணா சமுத்ர - தேவகாந்தாரி
நின்கு வின்ஹ - கல்யாணி
நாரத கான லோல - அடானா
நாரத குரு ஸ்வாமி - தர்பார்
பாராமுகமேலரா - சுருட்டி
 
==திரைப்பட நடிகராக==
1935 ஆம் ஆண்டு சனவரி 1 வெளியான பக்த நந்தனார் என்ற திரைப்படத்தில் வேதியர் வேடத்தில் நடித்தார். இத்திரைப் படத்தில் நந்தனாராக நடித்தவர் [[கே._பி._சுந்தராம்பாள்|கே.பி. சுந்தராம்பாள்]].<ref>[http://www.vellitthirai.com/actor/மகாராஜபுரம்-விஸ்வநாத-ஐயர மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்]</ref>
 
==மிருதங்க வித்துவானாக==
மகாராஜபுரம் விசுவநாத ஐயர் [[மிருதங்கம்]] வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். புல்லாங்குழல் மேதை மாலிக்கு இவர் மிருதங்கம் வாசித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் [[வயலின்]] வாசித்தவர் மற்றொரு வாய்ப்பாட்டு வித்துவானான [[செம்பை_வைத்தியநாத_பாகவதர்|செம்பை வைத்தியநாத ஐயர்]] ஆவார்.<ref>[http://www.youtube.com/watch?v=k1NuSn8brIM T.R.Mali with Chembai & Vishwanatha Iyer]</ref>
 
==விருதுகள்==
வரி 15 ⟶ 42:
== மேற்கோள்கள் ==
<references />
 
==வெளி இணைப்புகள்==
[http://www.carnaticcorner.com/articles/mvi.txt Era of "Sangeetha Kalanidhi", Sangeetha Bhoopathy" Maharajapuram Viswanatha Iyer]
[http://www.dinamani.com/specials/kannottam/article976038.ece?service பாவம் செஞ்ச பணம்டா!]
 
[[பகுப்பு:1896 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மகாராஜபுரம்_விஸ்வநாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது