குருகுல கல்வி முறையானது [[வேதம்|வேத காலத்திலிருந்தே]] இருந்து வருகிறது. [[உபநிட்தம்உபநிடதம்|உபநிடதங்கள்]] பல குருகுலங்களைப் பற்றி கூறுகிறது. [[யாக்ஞவல்கியர்]], வசிட்டர், வியாசர், வாருணி போன்ற குருக்கள், குருகுலங்கள் நடத்தி வந்ததை உபநிடதங்கள் விரிவாக கூறுகிறது. 8 முதல் 12 வயதிற்குள் குழந்தைகளுக்கு [[உபநயனம்]] எனும் சமயச் சடங்கு செய்து முடித்த பின்பே குருகுலத்திற்கு தங்கள் குழந்தைகளை கல்வி கற்க அனுப்புவர். கல்வி பயின்று முடியும் வரை மாணவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் [[பிரம்மச்சர்யம்|பிரம்மச்சர்ய விரதம்]] கடைபிடிக்க வேண்டும்.
குருகுலங்களின் மேம்பாட்டிற்கு அரசர்கள், வணிகர்கள், மற்றவர்கள் பொருள் வழங்கினர்.