ஐம்பூதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
" '''பஞ்சபூதங்கள்''' அல்லது '''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''ஐம்பூதங்கள்''' எனப்படுபவை [[நீர்]], [[நிலம்]], [[நெருப்பு]], [[காற்று]], [[வானம்|ஆகாயம்]] என்பன. இப்பிரபஞ்சத்திலுள்ள பல [[சூரிய மண்டலம்|சூரிய மண்டல]]ங்களில் ஒன்றான நாம் வாழும் இப்[[பூமி]]யில் இவற்றின் உதவியின்றி எந்தவொரு ஜீவராசியாலும் உயிர் வாழமுடியாது. உதாரணத்திற்கு நம் உடலை எடுத்துக்கொள்வோம்: [[இரத்தம்|இரத்த]]ச் சுற்றோட்டத்திற்கும் கலங்கள் இயங்குவதற்கும் [[நீர்|நீரு]]ம், தாது [[உப்பு]]க்களுக்கு நிலமும், உடல் வெப்பத்தைப் பாதுகாக்க [[நெருப்பு]]ம், சுவாசிப்பதற்கு வசதியாகக் [[காற்று]]ம், காந்தகதிருக்கு ஆகாயமும் உறுதுணையாய் நிற்கின்றன.
 
'''பஞ்சபூதங்கள்''' அல்லது '''ஐம்பூதங்கள்''' ஆகியவைகளின் சேர்கையினால் ஆனது இப் [[பிரபஞ்சம்]] மற்றும் அனைத்து சீவராசிகள். ஆகாயம், காற்று, தீ, நீர் மற்றும் மண் ஆகிய கூட்டுப் பொருட்களின் பகுதியே [[பிரபஞ்சம்]] மற்றும் சீவராசிகள். பஞ்சபூதங்கள், [[சிவன்|சிவனுடன்]] தொடர்புடையதாக கருதப்படுகிறது.<ref>The Pratyabhijñā Philosophy, G.V.Tagare, 2002, pag. 25</ref> பஞ்சபூதங்களின் சேர்க்கையால் பிரபஞ்சமும் சீவராசிகளும் எவ்வாறு தோண்றியது என [[சாங்கியம்|சாங்கிய சாத்திரங்கள்]] தெளிவாக உணர்த்துகிறது. பஞ்சபூதங்கள் [[மாயை|மாயையின்]] வெளிப்படாக தோண்றியது. படைப்பின் துவக்கத்தில், [[முக்குணங்கள்|முக்குணங்களின்]] நிலைகுலைவினால் சடப்பிரபஞ்சமும் உணர்வுடன் கூடிய சீவராசிகளும் தோண்றியது என்றும் [[சாங்கியம்|சாங்கிய தத்துவம்]] கூறுகிறது.
[[நெல்]] வளர இவ்வைந்து பூதங்களும் உதவுகின்றன. நெல்லைக் குற்றி [[அரிசி]]யும் [[தவிடு]]ம் எடுக்கிறோம். இவற்றை நாம் உண்ணும்போது அவற்றிலுள்ள தாது உப்புக்களும், அரிய பூதியங்களும் மற்றும் ஜீவசத்துக்களும் எமதுடலை சென்றடைகின்றன. இதே போன்றே ஐம்பூதங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாமுயிர் வாழ்வதற்கு ஏற்ற துணையாய் நிற்கின்றன.
 
==ஆகாயம் (விண்வெளி)==
[[பகுப்பு:மெய்யியல்]]
முதலில் ’ஆகாயம்’ (விண்வெளி) எனும் பூதம் ’ஒலி’ எனும் ஒரே குணத்துடன் தோண்றியது. ஆகாயத்திற்கு தன்னில் அனைத்து சடப்பொருள்களுக்கு இடமளிக்கும் தன்மை உள்ளது. ஆகாயம் மற்ற நான்கு பூதங்களான காற்று, தீ, நீர் மற்றும் மண் ஆகியவைகள் தோண்றக் காரணமாக உள்ளது. ஆகாயம் எனும் பூதத்தை யாராலும் தொட முடியாது பார்க்கவும் முடியாது. ஆகாயத்தை எவராலும் தொட முடியாது, குளிர், வெப்பம், உலர்தல், மணம் போன்ற குணங்கள் அற்றது. ஆகாயம் என்பது வெற்றிடம் ஆகும். எனவே ஆகாயம் எனும் பூதம் எதனாலும் கரை படாதது. ஆகாயத்தை உலகப் படைப்புக்கு காரணமான [[ஹிரண்யகர்பன்]] (பிரம்மாண்டம்) (தங்க முட்டை) (Golden Egg) என [[வேதம்]] உரைக்கிறது. சில [[உபநிடதம்|உபநிடதங்கள்]] ஆகாயம் ஒரு உருவமற்ற, குணங்களற்ற, எதனுடனும் சேர்க்கை இல்லாத காரணத்தினாலும், வெற்றிடம் என்பதாலும் [[பிரம்மம்|பிரம்ம தத்துவத்திற்கு]] எடுத்துக்காடாக ஆகாயத்தை கூறுகிறது.
 
==காற்று (வாயு)==
’ஆகாயம்’ எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து ’காற்று’ (வாயு) எனும் பூதம், ’தொடு உணர்வு’ (ஸ்பர்சம்) எனும் குணத்துடனும், ஆகாயத்தின் சொந்த குணமாக ஒலி எனும் குணத்துடனும் தோண்றியது. எனவே காற்று தன் சொந்த குணமான தொடு உணர்வுடன், ஆகாயத்தின் ஒலி எனும் குணத்துடன் இரண்டு குணங்கள் கொண்டுள்ளது. காற்று எனும் பூதத்தின் இயல்பு ஒரு பொருளை உலர்த்தும் சக்தி படைத்தது. காற்றில் பிராணன் எனும் பிராணவாயு ஒரு சீவனை காப்பதால், அதையும் [[பிரம்ம்ம்|பிரம்ம த்த்துவமாக]] சில உபநிடதங்கள் காற்று எனும் பூதத்தின் சிறப்பை விளக்குகிறது.
 
வாயு தத்துவமானது அலைந்து திரியும் குணம், பொருட்களை உலர்த்தும் தன்மை, சூட்சுமமான தன்மை, அறிவு, மனம், பார்க்க இயலாமை, ஆத்மா, சுவாசிக்கும் பிராண வாயு மற்றும் உயிர் ஆகிய தன்மைகளுடன் போற்றப்படுகிறது. காற்றின் வடிவம் வட்டம் என்றும் அதன் நிறம் நீலம் என்று சாத்திரங்கள் கூறுகிறது.
 
===தீ (அக்னி)===
காற்று எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து ’தீ’ எனும் பூதம் ’உருவம்’ (ரூபம்) எனும் குணத்துடன் தோண்றியது. அத்துடன் ஆகாயம் மற்றும் காற்றின் குணங்களான ஒலி மற்றும் தொடு உணர்வு குணங்களுடன் தன் சொந்த குணமான உருவம் எனும் குணத்துடன் ’தீ’ எனும் பூதம் மூன்று குணங்கள் கொண்டுள்ளது. [[யாகம்]] அக்னி ஹோத்திரம் போன்ற சமயச் சடங்குகளில் அக்னியின் பங்கு சிறப்பானது. [[யாகம்|யாகத்தில்]] சொறியப்படும் ஹவிஸ் எனும் சிறப்பான உணவுப் பொருட்களை அக்னி எனும் பூதம்தான் தேவர்களுக்கும் இறந்த முன்னோர்களுக்கும் கொண்டு செல்கிறது. அதனால் தேவர்களும், இறந்த்த நமது முன்னோர்களும் மனம் மகிழ்ந்து நம்மை வாழ்த்துவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தீயின் குணம் தேஜஸ், நிறம் சிவப்பு.
 
==நீர்==
தீ எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து திரவ நிலையில் உள்ள ‘நீர்’ எனும் பூதம் ’சுவை’ எனும் குணத்துடன் உண்டானது. அத்துடன் ஆகாயம், காற்று, தீ எனும் பூதங்களின் குணங்களான ஒலி, தொடு உணர்வு மற்றும் உருவம் (ரூபம்) எனும் மூன்று குணங்களுடன் தன் சொந்த குணமான சுவை எனும் குணத்துடன், நான்கு குணங்களுடன் நீர் எனும் பூதம் விளங்குகிறது.
 
ஓடும் ஆற்று நீரில் முக்கிக் குளிப்பதால், செய்த பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே [[கங்கை]], [[காவேரி]] போன்ற ஆறுகளை இந்துக்கள் புனிதமானவைகள் என்று நம்பிக்கையுடன் ஆறுகளில் முக்கிக் குளிக்கின்றனர். மேலும் தானம், சத்தியம் செய்யும் போது நீரைச் சொரிந்து சாட்சியாக வைத்து செய்கின்றனர். நீர் எனும் பூதம் இந்துக்களின் புனிதமான ஒன்றாகும்.<ref>Symbolism of Place, John Fraim, http://www.symbolism.org/writing/books/sp/home.html, cap. 7</ref> தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்கக்கூடாது என்ற பழமொழி மூலம் நீர் எனும் பூதத்தின் சிறப்பு அறியப்படுகிறது. நீரின் குணம் பொருட்களை தூய்மைப் படுத்துவது.
 
 
==மண் (பிருதிவி)==
நீர் எனும் பூதத்திலிருந்து ’மண்’ எனும் பூதம் ’வாசனை’ எனும் குணத்துடன் தோண்றியது. அத்துடன் ஆகாயம், காற்று, தீ, நீர் எனும் நான்கு பூதங்களின் குணங்களான ஒலி, தொடு உணர்வு, உருவம் (ரூபம்), சுவை எனும் நான்கு குணங்களுடன், தன் சொந்த குணமான வாசனை எனும் குணத்துடன் ஐந்து குணங்களைக் கொண்டது மண் (பிருதிவி) எனும் பூதம்.
 
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஐம்பூதங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது