வேளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
இவர்களைச் சூத்திரர் என்ற பெயராலும் குறித்து வந்தனர். `நம்பு வாய்மையின் நீடு சூத்திர நற்குலம் செய்தவத்தினால், இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப்பதி மாறனார்' (தி.12 பு.4 பா.1). `தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல, நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார், தன்மை வாயிலார் என்னுந் தபோதனர்' எனவரும் ஆசிரியர் திருவாக்கால் இவ்வுண்மை அறியலாம். சூத்திரர் என்னும் சொற்கு முன்னும் பின்னும் வரும் அடை மொழிகளைக் காண இச்சொல் உயர்பொருளைக் குறித்து வந்தமை அறியலாம். `சூத்ரா சுத்த குலோத்பவா' எனச் சிவாகமமும் கூறும் என்பர். எனினும் இச்சொல் இழிநிலையில் வந்த பிறப்பைக் குறிக்கும் என்றும், மேழியர் என்பதற்கு மாறாக இச்சொல் இடைச் செருகலாய்ப் புகுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுவாரும் உளர். எனினும் ஆசிரியர் திருவாக்கின் அமைதியைக் காண இக்கருத்து மேலும் எண்ணத் தக்கதாகவே உள்ளது.<ref>[http://www.thevaaram.org/thirumurai_1/ani/121aaraichi%20munnurai6.htm ஆராய்ச்சி முன்னுரை கட்டுரையின் 8.வாழ்வியல் அமைதிகள் என்பதில் வேளாளர்:8.7]</ref>
 
வேளாளன் எனும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் எனும் பொருளுடையது என்பர் சிலர். இவர்கள் மன்னர்களுக்குப் பின்னராய் நாடுகாத்து வந்தனர் என்பது, ஊரன், கிழவன், மூப்பன், குடும்பன், சேக்கிழார், புரிசைகிழார், மள்ளர், குளப்பாகிழார், காலாடி,மண்ணாடி என்பனவற்றால் அறிய முடிகிறது. மேலும் இந்த வேளாளர் ஒரு காலத்தில் மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனுக்கு இந்திரன் பொருட்டு பிணை நின்று காத்தாராதலின் [[கார்காத்தார்]] என்றும், நாகக்கண்ணி மணந்த சோழன் கொணர்ந்த நாகவல்லி எனும் வெற்றிலைக் கொடியினை இப்பூமியில் உற்பத்தி செய்ததால் “கொடிக்கால் வேளாளர்” எனவும், துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர். <ref> சிங்காரவேலு முதலியார் எழுதிய “அபிதான சிந்தாமணி” நூல் பக்கம். 614.</ref>{{Failed verification}}{{Verify source}}
 
== பட்டங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வேளாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது