'''புத்த காயாகயா''' அல்லது உள்ளூர் உச்சரிப்பின்படி '''போத்காயாபோத்கயா''' (ஹிந்தி: बोधगया), இந்திய மாநிலமான [[பீகார்|பீகாரின்]] [[காயாகயா மாவட்டம்|காயாகயா மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[நகரம்]]. [[கௌதம புத்தர்]] இங்குள்ள அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்ற இடம் என்பதால், இதுஉலகம் புகழ்முழுவதுமுள்ள பெற்றபெளத்தர்களுக்கு புத்தகயா புனித தலமக இடமாகத் திகழ்கிறது. முற்காலத்தில் ''போதிமண்டா'' எனப்பட்ட இவ்விடத்தில் பெரிய [[துறவிமடம்|துறவிமடக்]] குடியேற்றம் ஒன்று இருந்தது. புத்த காயாவில் உள்ள முதன்மையான துறவிமடம் போதிமண்டா விகாரையாகும். இது இப்போது [[மகாபோதி கோயில், புத்த காயா|மகாபோதி கோயில்]] என அழைக்கப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய நான்கு யாத்திரைத் தலங்களில் புத்த காயாவே முதன்மையானதாகப் புத்த மதத்தினர் கருதுகின்றனர். [[குஷிநகர்]], [[லும்பினி]], [[சாரநாத்]] என்பன ஏனைய மூன்றும் ஆகும். 2002 ஆம் ஆண்டில் மகாபோதி கோயில் [[யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்|யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டது.