மகா சிவராத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சிவராத்திரி விரத நியதிகள்: பதிப்புரிமை மீறல் (தரம் ஒன்பது சமய நூல்)
வரிசை 15:
 
சிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
 
==சிவராத்திரி விரத நியதிகள்==
 
* சிவரத்திரி தினத்தின் முதல் நாளில் ஒருவேளை உணவு உண்ணுதல் வேண்டும்.
 
* சிவரத்திரி தினத்தில் [[இந்து சமய விரதங்கள்|உபவாசம்]] இருந்து இரவு நான்கு சாமமும் நித்திரையின்றி சிவபூசை செய்தல் வேண்டும்.
 
* சிவபூசை செய்ய இயலாதவர் நித்திரையின்றி, நான்கு சாமமும் சிவாலய தரிசனம் செய்தல் வேண்டும்.[[திருநீறு]] தரித்து, [[உருத்திராட்சம்|உருத்திராக்கம்]] அணிந்து ஸ்ரீ பஞ்சாட்சரம் செபித்தல், ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்தல், சிவராத்திரி புராணம், சிவபுராணம், என்பவற்றையும் [[சிவன்|சிவபெருமானைப்]] பற்றிக் கூறும் கதைகளையும் படித்தல், கேட்டல் என்பவற்றில் ஈடுபட வேண்டும்.
 
* இலிங்கோற்பவ காலத்தில் சிவனை விசேடமாக வழிபடுதல் வேண்டும். இலிங்கோற்பவ காலம் என்பது [[திருமால்]], [[பிரம்மா|பிரம்மன்]] அறியாதபடி சோதியாக நின்ற பரம்பொருள், குளிர்ந்து [[இலிங்கம்|இலிங்க]] வடிவில் காட்சி தந்த காலத்தைக் குறிப்பது. சிவராத்திரி இரவில் பதினான்கு [[நாழிகை|நாழிகைக்கு]] மேல் (11.30 - 12.15) இரு [[நாழிகை]] (1 [[நாழிகை]]=24 நிமிடங்கள்) பரம்பொருள் [[இலிங்கம்|இலிங்கத்தில்]] தோன்றியருளினார். அதனால், அக்காலத்தில் சிவபூசை செய்து வழிபடுதல் வேண்டும்.
 
* சிவராத்திரியின் மறுநாள் அதிகாலையில் நீராடி, பாறணை செய்தலும் சிவனடியார்களுக்கு மாகேசுர பூசை செய்தலும் வேண்டும்.
 
* சிவராத்திரி விரதத்தைத் தொடர்ந்து பன்னிரண்டு அல்லது இருபத்தினான்கு வருடங்கள் அனுட்டித்தல் வேண்டும். சிவராத்திரி விரத நாளில் [[இந்து சமய விரதங்கள்|உபவாசம்]] உத்தமம்; [[நீர்|நீரேனும்]] [[பால் (பானம்)|பாலேனும்]] அருந்துதல் மத்திமம்; [[பழம்]] உண்பது அதமம். சிவராத்திரி தினத்தில் நான்கு சாமமும் நித்திரை ஒழிக்க இயலாதவர், இலிங்கோற்பவ காலம் நீங்கும் வரையாயினும் நித்திரை ஒழித்தல் வேண்டும்.
 
== நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகா_சிவராத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது