நவராத்திரி நோன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎பூசை முறை: பதிப்புரிமை மீறல் (தரம் ஒன்பது சமய நூல்)
வரிசை 20:
ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும்.
=== கும்பம் வைத்தல் ===
நவராத்திரியின் முதல் நாள் காலையில் (பிரதமைத் திதியில்) ஒரு பாத்திரத்தில் மண் நிரப்பி, நவதானியங்களைத் தூவி நீர் தெளிப்பர். அப்பாத்திரத்தின் மேல் கும்பம் வைப்பர். அதன் பின் அக்கும்பத்தில் எழுந்தருள (அதிட்டித்து நிற்க)ச் செய்வர். நறுமணமுள்ள சந்தனம், பூ (மலர்), இவைகளுடன் [[மாதுளை]], [[வாழை]], [[பலா]], [[மா]] முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், [[வடை]], [[பாயாசம்]] முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். [[புனுகு]] கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தணம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்யவேண்டும்.
 
=== கொலு வைத்தல் ===
 
சைவ சமயத்தவர் நவராத்திரி காலங்களில் ஆலயங்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து பூசைகள் செய்து வழிபடுவர். இவ்வாறு கொலு வைத்தலில் தத்துவம் உள்ளது. [[ஆதிசக்தி|சக்தி]] ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய், அனைத்துப் பொருட்களிலும் ஜீவராசிகளிலும் ஊருடுவி நிற்கின்றார். அத்தத்துவத்தைச் சுட்டும் ஒரு செயல் வடிவமே பலவிதப் பொம்மைகள், பாவைகள் முதலானவற்றைக் கொலு வைத்து நவரத்திரியில் வழிபடுதலாகும்.
 
=== குமாரி பூசை ===
"https://ta.wikipedia.org/wiki/நவராத்திரி_நோன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது