'''சுண்டிக்குளம் தொடுவாய்கடல் நீரேரி''' (''Chundikkulam Lagoon'') என்பது [[இலங்கை]]யின் வடக்கே [[யாழ்ப்பாண மாவட்டம்]], மற்றும் [[கிளிநொச்சி மாவட்டம்]] ஆகியவற்றில் காணப்படும் ஒரு [[கடற்காயல்]] ஆகும். [[சுண்டிக்குளம்]] கிராமம் இந்தக் கடற்காயலுக்கும், [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலுக்கும்]] இடையேயுள்ள குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. இக்கடற்காயல் '''ஆனையிறவு தொடுவாய்கடல் நீரேரி''' (''Elephant Pass lagoon''), அல்லது '''சுண்டிக்குளம் கடல் நீரேரி''' அல்லது '''சுண்டிக்குளம் தொடுவாய்''' எனவும் அழைக்கப்படுகிறது..
கனகராயன் ஆறு, நெதெலி ஆறு, தேராவில் ஆறு போன்ற தெற்குப் பகுதி [[ஆறு]]களில் இருந்து இத்தொடுவாய்க்குஇக்கடல் நீரேரிக்கு நீர் வருகிறது. இத்தொடுவாய்இது [[யாழ்ப்பாணக் கடல் நீரேரி]]யுடன் இணைந்திருந்தது, ஆனாலும் [[ஆனையிறவு|ஆனையிறவில்]] [[தரைப்பாலம்]] கட்டப்பட்டதில் இருந்து இது ஒர் [[ஏரி]]யாகவே கணிக்கப்படுகிறது. இங்குள்ள நீர் உவர் நீர் ஆகும்.
சுண்டிக்குளம் தொடுவாய்ப்கடல் நீரேரிப் பகுதி [[ஆசியப் பனை|பனை]] மரங்களினாலும், புதர் நிலத்தினாலும் சூழப்பட்டுள்ளது. இந்நிலம் [[இறால்]] பண்ணைகளுக்காகவும் [[உப்பு]] தயாரிப்புக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இக்கடற்காயலில் [[அலையாத்திக் காடு]] மற்றும் கடற்புல் பாத்திகளும் காணப்படுகின்றன. இத்தொடுவாயின்இங்குள்ள பெரும்பாலான பகுதி 1938 ஆம் ஆண்டில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. [[அரிவாள் மூக்கன்]], [[வாத்து]], நாமக்கோழிகள், [[ஆலா]] போன்ற நீர்பறவைகள்நீர்ப்பறவைகள் ஏராளமாக இங்கு வருகின்றன.