சார்லஸ் தெ ஃபூக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
இவர் இளமையிலேயே பெற்றோரை இழந்தவர். இவரின் தாத்தா இவரை வளர்த்தார். இவர் பிரஞ்சு இராணுவத்தில் ஒரு அதிகாரியாக வடஆப்பிரிக்காவில் இருந்தபோது இவருக்கு தனிமையில் இறைவனைக்காண வேண்டும் என வலுவான உணர்வுகள் உண்டானது. ஆதலால் இவர் பிரான்சுக்குத் திரும்பிவந்து தனது 28ஆம் வயதில் மனம்மாறினார்.
 
1890இல் சிஸ்டேரியன் டிராப்பிஸ்ட் துறவற சபையில் சேர்ந்த இவர், அங்கு மனநிறைவு அடையாத்தால் அங்கிருந்து வெளியேறி 1897இல் [[நாசரேத்து]]க்கு சென்றார். அங்கே தனிமையிலும் தபம் மற்றும் செபத்திலும் தன் வாழ்வைக்கழித்தார். பின்னைபின்னர் 1901இல் பிரான்சுக்குத்திரும்பி தனது 43ஆம் அகவையில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இதன் பின்னர் [[அல்சீரியா]]வில் உள்ள [[சகாரா]]வில் வனவாசியைப்போல வாழ்ந்துவந்தார். பின்னர் [[துவாரெக் மக்கள்|துவாரெக் மக்களுக்கு]] பணிசெய்ய அவர்களோடு பத்துவருடம் தங்கியிருந்து அவர்களின் மொழி, கலாச்சாரம் முதவியவைகளைக் கற்று அவர்களின் மொழிக்கு ஒரு [[அகராதி]]யினை எழுதினார். ஆனால் இவ்வகராதி இவரின் இறப்புக்குப்பின்னரே அச்சாகி வெளியானது.
 
துவாரெக் மக்களின் பாதுகாப்புக்காக இவரே கட்டிய கோட்டையின் கதவின் வெளியே 1916ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் [[கத்தோலிக்க திருச்சபை]]யினால் ஒரு [[மறைசாட்சி]] என கருதப்படுகிறார்.<ref>[http://cathnews.acu.edu.au/511/74.php Charles de Foucauld beatified in Rome]</ref>. இவருக்கு 13 நவம்பர் 2005 அன்று [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] அருளாளர் பட்டம் அளித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சார்லஸ்_தெ_ஃபூக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது