பியூனிக் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
==முதலாம் பியூனிக் போர் (கி.மு. 264 முதல் 241 வரை)==
முதலாம் பியூனிக் போர் சிசிலி மற்றும் ஆப்பிரிக்க பகுதியில் போரிடப்பட்டாலும், இந்த போர் கடற்போராகவே அமைந்தது. சைரக்கூஸ் நாட்டின் அரசன் இரண்டாம் ஹேய்ரோவிற்கும் மெசீனா கூலிப்படையினரிற்கும் நடுவே ஏற்பட்ட மோதலே முதல் பியூனிக் போரின் மூலாதாரமாக கருதப்படுகிறது. மெசீனாவிற்கு உதவிட ரோமன் அரசு தனது காலாட்படையை அனுப்பயதால் சீற்றம் கொண்ட கார்தீசிய அரசு சைரக்கூயுசிற்கு உதவியது. இதனால் இரு பெரும் அரசிற்கும், சிசிலியை எவர் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது என்பதில் மோதல் ஏற்பட்டு அதன் விளைவாக போர் மூண்டது.
கி.மு.262-இல் அக்ரிஜென்தத்தில் நடைப்பெற்ற போரில் தோல்வியை தழுவியதால் கார்தீசிய அரசு, ரோமன் அரசுடன் தரைப்படையின் மோதலை தவிர்த்து, தன்னுடைய பலமான கப்பற்படையால் ரோமனை தாக்க தீர்மானித்தது.
முதலில் கார்தீசிய அரசின் கைமேலோங்கி இருந்தது. கி.மு.260-இல் லிபாரியில் நடைப்பெற்ற போரில் கார்தீசிய அரசு ரோமன் அரசை தோற்கடித்தது. ஆயினும் இரண்டே மாதத்தில், 100 கப்பல்களை கொண்ட கப்பற்படையை ரோமன் அரசு உருவாக்கியது. தூக்குப்பாலம் மூலம் எதிரியின் கப்பலை அடைந்து, அதன் மூலம் கார்தீசிய கப்பலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக உத்தி கையாளப்பட்டது. இந்த நூதன உத்தியின் மூலம், கார்தீசிய கப்பற்படையை, தன்னுடைய, காலாட்படை மூலமே எதிர்கொள்ள ரோமன் அரசிற்கு ஏதுவாக அமைந்தது. தூக்குப்பாலம் சிக்கலாகவும், அபாயகரமானதாகவும் இருந்த போதிலும், கப்பற்படை வெகுவிரைடவாக பலம் பெற்றதால், இந்த அபாயம் தவிர்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பியூனிக்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது