'''வைசேடிகம்வைசேஷிகம்''' (''Vaiśeṣika'', {{lang-sa|वैशेषिक}}) என்பது [[இந்திய மெய்யியல்|இந்திய மெய்யியலில்]] [[வேதம்|வேதத்தை]] ஏற்கும் ஆறு முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும். கணாதரர், கானடா அல்லது கணபுஜா என்கின்ற குரு உருவாக்கிய சாத்திரம். ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்து அடையாளம் கண்டு கொள்வதற்கு அதன் சிறப்புத் தன்மையே இதன் அடிப்படை. அதன் சிறப்புத் தன்மையை ஆராய்வதால் இதற்கு வைசேடிகம் அல்லது வைசேஷிகம் என்று பெயர் பெற்றது. இந்திய தத்துவவியலில் `தர்சனம்` எனும் சொல் முதனமுதலில் வைசேடிக தத்துவ நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தத்துவ அறிஞர் தாஸ் குப்தா கூறுகிறார்.<ref name=dasgupta>எஸ். என். தாஸ்குப்தா, இந்தியத் தத்துவ இயலின் வரலாறு i, 68, ii.</ref>