ஹிரூ ஒனோடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
==யுத்தத்தின் பின்னர்==
சப்பான் திரும்பிய ஹிரூ ஒனோடா பெரும் செல்வாக்குடையவரானார். மக்கள் இவரைப் பெரும் மரியாதையுடன் போற்றிப் புகழ்ந்தனர். தாய் நாடு திரும்பிய ஹிரூ ஒனோடா தன்னுடைய 30 வருட கரில்லா யுத்தம் பற்றி நோ சரண்டர் : மை தேர்ட்டி இயர் வோர் எனும் புத்தகத்தை எழுதினார். இதேவேளை பிலிப்பைன்சில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி ஹிரூ ஒனோடா தனது 30 வருட நடவடிக்கையின் போது பல பொது மக்களைக் கொலை செய்துள்ளார் எனும் செய்தியை வெளியிட்டது. சப்பானிய அரசு மற்றும் பொது நலன் விரும்பிகள் இவர் நாடுதிரும்பியதும் இவரிற்குப் பெரும் தொகைப் பணத்தை வழங்கினர். ஆயினும் அனைத்தையும் ஹிரூ ஒனோடா மறுத்துவிட்டார். மிகக் கட்டாயப்படுத்தப்பட்ட வேளைகளில் அந்தப் பணத்தை யசூகுனி ஸ்ரைனிற்கு வழங்கினார். யசூகுனி ஸ்ரைன் எனப்படுவது சப்பானிய அரசாட்சிக் காலத்தில் போரிட்டு மாய்த போர்வீர்களுக்கான ஞாபகார்த்த நினைவிடம்.
 
சப்பான் திரும்பிய ஹிரூ ஒனோடாவிற்கு சப்பானின் புதிய போக்கும் அதன் மக்களின் மேலைத்தேயம் சார் நடவடிக்கைகளும் அவ்வளவாக விருப்பைத் தரவில்லை. ஆகவே 1975 இல் தன் சகோதரன் வழியில் [[பிரேசில்]] நாட்டிற்குச் சென்று அங்கு [[கால்நடை]] வளர்ப்பில் ஈடுபட்டார். மேலும் 1976 இல் திருமணம் செய்துகொண்டதுடன் பிரேசில் நாட்டில் உள்ள சப்பானிய குடியேற்றக்காரர் மத்தியில் பெரும் செல்வாக்குடன் விளங்கினார். ஆயினும் ஓனோடா 80களில் மீளவும் சப்பான் திரும்பிவந்தார். குறிப்பாக ஒனோடா ஷிசென் ஜூகு எனும் இளவயதினர்க்கான பயிற்சிப் பட்டறையை நடத்துவதில் ஆர்வம் காட்டினார்.
 
1996இல் ஹிரூ ஒனோடா லுபாங் தீவை மீளச் சென்றடைந்தார். அங்குள்ள பாடசாலை ஒன்றிற்கு சுமார் 10,000 அமெரிக்க டாலர்கள் பெறுமதியான அன்பளிப்பை வழங்கினார்.
 
சனவரி 16, 2014 இல் இதய செயலிழப்பு காரணமாக ஹிரூ ஒனோடா உயிரிழந்தார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஹிரூ_ஒனோடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது