[[கார்த்திகை]] தீபதினத்தன்று மாலை வள்ளி தெய்வாணை சமேதராய் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் முன்புள்ள திடலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சுவாமி நகர்வலம் நடைபெறும்.
[[மார்கழி|மார்கழி மாதத்தில்]] வரும் பவுர்னமியன்றுபவுர்ணமியன்று காலை விடியும் முன்பு, கோவிலின் உள் மணடபத்தில் பத்திரகாளியம்மன் சிம்ம வாகனத்திலும் மற்றும் மாரியம்மன் ரிஷப வாகனத்திலும் அலங்காரமாகி பூசை நடைபெற்று செவ்வந்திப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பாடாகி நகர்வலம் வருவர். இதனால் இத்திருவிழாவை, '''செவ்வந்திப்பூ திருவிழா''' என்று அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.
[[தை|தை மாதத்தில்]] வரும் பவுர்னமியன்றும்பவுர்ணமியன்றும், [[பங்குனி|பங்குனி மாதத்தில்]] வரும் பவுர்னமியன்றுபவுர்ணமியன்று திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று மாலை வள்ளி தெய்வாணை சமேதராய் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் கிழக்கு வாசலில் எழுந்தருளுவார். பின்னர் உற்சவருக்கு பூசை நடைபெற்று சுவாமி நகர்வலம் நடைபெறும்.