பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி fixing dead links |
No edit summary |
||
வரிசை 53:
== இரை ==
பறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை இரை தேடவும், உண்ணவுமே செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு இடைஞ்சல் என்பதால் பறவைகளால் உடலில் உணவைச் சேமித்து
பறவைகளில் சைவமும் அசைவமும் உண்டு. [[காக்கை]] போன்றன இரண்டையுமே உண்கின்றன. சில பறவைகள் சிறப்பாக குறிப்பிட்ட இரைகளை மட்டுமே உண்ணும். எடுத்துக்காட்டாக, [[எவர்கிளேட் கைட்]] என்ற பறவை [[நத்தை]]களை மட்டுமே உண்ணும். பறவைகளின் வயிறு சிறப்புத் திறன் பெற்றது. கடினமான கொட்டைகள், [[செல்பிஷ்]] போன்றவற்றைக் கூட நொறுக்கி செரிமானம் செய்துவிடும். சில பழக்கொட்டை தின்னும் பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்து தின்கின்றன. இவை வயிற்றில் கொட்டைகளை நொறுக்க உதவுகின்றன. குஞ்சுகளுக்கு இரை எடுத்துச் செல்ல பல பறவைகள் வாய்க்குள் சிறிய பை போன்ற உறுப்புக்களைக் கொண்டுள்ளன.
வரிசை 80:
[[படிமம்:Archaeopteryx-model.jpg|thumb|தொல்சிறகியின் ஒரு மாதிரி ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில்]]
விஞ்ஞானிகள் [[டைனசோர்|தொன்மாக்களிலிலிருந்து]] பறவைகள் தோன்றினவா என்று ஆய்ந்திருக்கிறார்கள். டினோசாரின் ஒரு வகையான தெரொபோட் (Theropod) இனத்திலிருந்து பறவைகள் தோன்றின என்று ஒரு சாராரும், அதற்கு முன்பே [[தெகோடோன்ட்லிருந்து]] (Thecodont) (இது டினோசாரின் மரபுவழி முன்னோடி) பறவைகள் உருவானது என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். பறவைகளின் [[படிமலர்ச்சி]] (பரிணாம வளர்ச்சி) பற்றிய ஆய்வுகளில் [[தொல்லுயிர் படிவம்|தொல்லுயிர் படிவங்கள்]] பெரிதும் துணையாயிருக்கின்றன. இவற்றுள் 1861-ம் ஆண்டு [[ஜெர்மனி|செருமனியிலுள்ள]] [[பவேரியா]]வில் ஒரு சுண்ணாம்புக் காளவாயில் கிடைத்த புதைபடிவம் குறிப்பிடத்தக்கது. அது 14 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வா்ழ்ந்த [[தொல்சிறகி]] (''Archeopteryx'') என்ற பறவையினுடையது. வாயில் பற்கள், அசைக்கத்தக்க மூன்று விரல்கள், சிறகில் நகங்கள் என மரக்கிளைகளில் தொற்றித்தாவும் வசதிகளையும் பெற்றிருந்த அவ்விலங்கு தொன்மாக்களுக்கும் இன்றைய பறவைகளுக்கும் இடைப்பட்ட படிமலர்ச்சிநிலையில் இருந்திருக்கக் கூடும்.<<ref name="இயற்கை">{{cite book|last=அலி |first=ச. முகமது|title=இயற்கை: செய்திகள் சிந்தனைகள்|publisher=இயற்கை வரலாறு அறக்கட்டளை|location=பொள்ளாச்சி|date=திசம்பர் 2007}}
பறப்பதைப் பற்றியும் இரு கருத்துக்கள் உள்ளன. பறவைகளின் முன்னோர்கள் மரத்துக்கு மரம் தாவி அப்படியே பறக்கத் துவங்கினர் என்று சிலர் சொன்னாலும், நிலத்திலிருந்து இரைக்காகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் தாவித் தாவி பறக்கத் துவங்கியதாக பொதுவாக நம்புகின்றனர்.
|