{{Nihongo|'''ஹிரூ ஒனோடா'''|小野田 寛郎|Onoda Hiroo|மார்ச் 19, 1922 – சனவரி 16, 2014}} இரண்டாம் உலக யுத்தத்தில் சப்பானிய படை சார்பாக போரிட்ட ஒரு போர் வீரானாவார். ஆயினும் 1945இல் உலகயுத்தம் இரண்டின் முடிவில் பிலிப்பைன்சில்பிலிப்பைன்சை அமெரிக்காவின் நேசப் படைகள் கைப்பற்றிக்கொண்டன. இதன் போது இவர் அமெரிக்கப் படைகளினால்படைகளில் தாக்குதலினால் சிறு சப்பானிய படைக் குழுவுடன் துண்டிக்கப்பட்டு தனித்துவிடப்பட்டார். இதேவேளை பிலிப்பைன்சில் இருந்த சப்பானிய படைகள் சரணடைந்தாலும் ஹிரூ ஓனோடா நேசப் படைகளிடம் சரணடய மறுப்புத் தெரிவித்தார். 1974இல் இவரது நேரடி கட்டளை அதிகாரியாக இருந்தவர் நேரடியாக பிலிப்பைன்ஸ் சென்று ஹிரூ ஒனோடாவிடம் அவரது பணியிலிருந்து அவர் விடுவிக்கப்படுகின்றார் என்று அறிவுறுத்தல் வழங்கும் வரை சுமார் 30 வருடங்களாக தனித்துஅவரது குழுவினருடனும் பின்னர் தனித்தும் பிலிப்பைன்ஸ் காடுகளில் ஹிரூ ஒனோடா வசித்து வந்தார்.