மகாராஜபுரம் சந்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 9:
சுவாமி தயானந்த சரஸ்வதி இயற்றிய "போ சம்போ" (ரேவதி), "மதுர மதுர" (பாகேஸ்ரீ), ஆகிய இரண்டு பாடல்களும் "உன்னை அல்லால்" (கல்யாணி), "சதா நின் பாதமே கதி, வரம் ஒன்று" (ஷண்முகப்ரியா), "ஸ்ரீசக்ர ராஜ" (ராகமாலிகா), "நளின காந்தி மதிம்" (ராகமாலிகா), "க்ஷீராப்தி கன்னிகே" (ராகமாலிகா) ஆகிய பாடல்கள் இவர் பாடி பிரபலமான பல பாடல்களில் அடங்கும். 'மகாராஜபுரம் சந்தானம் தினம்' ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.
1992ம் வருடம் ஜூன் மாதம் 24ம் தேதி இவர் கார் விபத்தில் காலமானார். இவரைத் தொடர்ந்து இவரது மகன்கள் மகாராஜபுரம் எஸ். ஸ்ரீநிவாசன் மற்றும் மகாராஜபுரம் எஸ். ராமச்சந்திரன் ஆகியோரும் இவரது முதன்மை சிஷ்யர் டாக்டர் ஆர். கணேஷ் அவர்களும் இவரது இசைக் கலையை வளர்த்து வருகின்றனர்.
புரந்தரதாசரின் க்ருதிகளான "நாராயண நின்ன" (சுத்த தன்யாசி) மற்றும் "கோவிந்த நின்ன" ஆகியவை இவரின் மற்ற சில பிரபலமான பாடல்களாகும். இவரின் "விளையாட இது நேரமா முருகா" என்ற பாடல் எதனுடனும் ஒப்பிடமுடியாதது. இவரின் பாடல்கள் பக்தி மார்கமாகவே இருந்தன.
இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், சென்னை த்யாகரய நகரில் உள்ள கிரிபித் சாலை, கருணாநிதி மற்றும் ஸ்டாலினால் "மகாராஜபுரம் சந்தானம் சாலை" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மிகப் பிரபலமான கிருஷ்ண கான சபாவும் முப்பாத்தம்மன் கோவிலும் இந்த சாலையில் உள்ளன.
== இயற்றிய பாடல்களின் பட்டியல் ==
வரி 31 ⟶ 34:
== விருதுகள் ==
பத்ம ஸ்ரீ -- 1990
சென்னை மியூசிக் அகாடமி அளித்த சங்கீத கலாநிதி -- 1989
சங்கீத நாடக அகாடமி விருது -- 1984
ரிஷிகேஷில் உள்ள யோகா வேதாந்த பல்கலைக்கழகம் அளித்த "சங்கீத சுதாகரா" விருது
ஸ்ருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதி அவர்களால் அளிக்கப்பட "கான கலாநிதி" விருது
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் அளிக்கப்பட "சங்கீத சங்கமித்ரா வர்ஷி" விருது
மேலும் இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், காஞ்சி காமகோடி பீடம், பிட்ஸ்பெர்க் வெங்கடாசலபதி கோவில் மற்றும் கணபதி சச்சிதானந்த ஆஸ்ரமம் ஆகியவற்றில் ஆஸ்தான வித்வானாகவும் இருந்துள்ளார்.
==மேற்கோள்கள்==
<references />
|