கபிலர் குன்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
சங்ககாலப் புலவர் [[கபிலர் (சங்ககாலம்)|கபிலர்]] [[பாரிமகளிர்|பாரிமகளிரைப்]] பார்ப்பான் ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு வடக்கிருந்து உயிர் துறந்தார். <ref>புறம் 236</ref>. '''கபிலர் குன்று''' என்பது [[கபிலர்]] [[வடக்கிருத்தல்|வடக்கிருந்து]] உயிர் துறந்த இடமாகும். இது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]] மாவட்டத்தில் [[திருக்கோவிலூர்]] பேரூராட்சி அருகே அமைந்துள்ளது. நண்பரும் வள்ளலும் ஆன மன்னன் [[பாரி]]யின் மறைவுக்கு பிறகு, [[பாரிமகளிர்]] [[அங்கவை சங்கவை]] என்பவர்களை [[திருக்கோவிலூர்]]பார்ப்பான் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, [[தென்பெண்ணை ஆறு|தென்பெண்ணை ஆற்றில்]] உள்ள ஒரு குன்றில் வடக்கு பக்கம் அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார்.
 
திருக்கோவிலூரின் [[தென்பெண்ணை ஆறு|தென் பெண்ணையாற்றில்]] அமைந்துள்ள "கபிலர் குன்று" (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். [[திருக்கோவிலூர்]] [[பேருந்து]] நிலையத்திலிருந்து இரண்டு கி.மீட்டரில் [[வீரட்டானம்|வீரட்டானேசுவரர் கோயிலின்]] அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் "கபிலர்குன்று" உள்ளது. கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் "கபிலக்கல்" என்றே இந்த இடத்தைக் [[கல்வெட்டு]]க் குறிப்பிடுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/கபிலர்_குன்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது