இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாண குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனத்தின் மிகமுக்கியமானமிகப்பெரிய தொழிற்சாலையும் அமைந்த மிக முக்கிய்மான சிறு நகரமாகும். தற்போது இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் அகப்பட்டிருக்கிறது. இலங்கையின் மிக நீண்ட புகையிரத சேவையான (256 மைல்) கொழும்பு - காங்கேசந்துறை சேவை 1990 இலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு விமான நிலையமான பலாலி விமான நிலையமும், வர்லாற்று, சமய முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலையும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.