லட்சுமிகாந்தன் கொலை வழக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
*திருத்தம்*
வரிசை 1:
'''லட்சுமிகாந்தன் கொலை வழக்கு''' அப்போதைய [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] நவம்பர் 1944 முதல் 1947 வரை மிகவும் பரபரப்பாக நடந்த குற்றவியல் வழக்காகும். [[சி. என். லட்சுமிகாந்தன்]] எனும் தமிழ் பத்திரிக்கையாளர் [[சென்னை]], வேப்பேரியில் நவம்பர் 78, 1944இல் கத்தியால் குத்தப்பட்டு அடுத்தநாள் காலையில் சென்னை பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் நடந்த புலன் விசாரணையை அடுத்து ஐயத்திற்குட்பட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்றிருந்த நடிகர்கள் [[தியாகராஜ பாகவதர்]], [[என். எஸ். கிருஷ்ணன்]] மற்றும் இயக்குனர் [[எஸ். எம். சிரீராமுலு நாயுடு]]வும் அடக்கம். வழக்கில் இயக்குனர் நாயுடு விடுவிக்கப்பட்டு நடிகர்கள் தியாகராஜ பாகவதரும் கிருஷ்ணனும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் [[சென்னை உயர் நீதிமன்றம்|சென்னை உயர் நீதிமன்றத்தில்]] மேல் முறையீடு செய்தனர். அந்த அறமன்றத்திலும் இவர்களது மேல்முறையீடு தோல்வியடைந்தது. 1947 வரை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அப்போது நாட்டின் உயரிய முறையீடு அமைப்பாக இருந்த பிரைவி கௌன்சிலுக்கு விண்ணப்பித்தனர். பிரைவி கௌன்சில் வழக்கை மீண்டும் விசாரிக்க அமர்வு நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தது. இச்சமயம் இருவரும் குற்றமற்றவர்களாக தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை ஆனார்கள். இதுவரை இக்குற்றத்தை இழைத்தவர்கள் யாரென்ற மர்மம் தீர்க்கப்படவில்லை.
 
இந்த வழக்கினால் பாகவதர் மிகவும் மனமொடிந்ததுடன் தமது செல்வத்தையும் இழந்தார். 1959இல் [[வறுமை]]யில் இறந்தார். கிருஷ்ணன் தமது மரணம் வரை சில திரைப்படங்களில் நடித்து மீண்டும் புகழ்பெற்றார்.
==பின்னணி==
 
சி.என். இலட்சுமிகாந்தன் 1940இல் [[சென்னை|சென்னையில்]] சினிமாதூது என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார். அக்காலத்தில் [[இரண்டாம் உலகப் போரினால்போர்]]ச் சூழலில் காகித பற்றாக்குறையினால் அக்காலத்தில் புது பத்திரிக்கைகளை ஆரம்பிக்கதுவக்க அப்போதைய பிரித்தானிய அரசு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. சினிமாதூது பத்திரிக்கை [[சினிமாதிரைப்படம்|திரைப்பட]]வின் பெரும்புள்ளிகளை பற்றி தாறுமாறாக எழுதியதால், சிலர் அரசாங்கத்தின் கவனத்திற்க்கு அனுமதியில்லாமல் சினிமாதூது வந்ததைவெளியிடுப்படுவதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து, அதை மூடும் படி செய்தனர். அடுத்ததுஅடுத்து லட்சுமிகாந்தன், [[இந்து நேசன்]] எனும் ஏற்கனெவே சென்றிருந்தவிற்பனையாகிவந்த பத்திரிக்கையை வாங்கி, அதில் சினிமா புள்ளிகளின் கெட்ட நடத்தையை அநாமதேய செய்திகளாக பதித்தார். அதிலும் முக்கியமாக ஆண், பெண் நட்சத்திரங்களின் காம சல்லாபங்களையும், ஜல்சாக்களையும், கோணங்கித்தனங்களையும் பச்சையாக எழுத ஆரம்பித்தார். பிறகு சமுதாயத்தின் எல்லாஅனைத்துக் கலைகளிலிருந்த பெரும் புள்ளிகள்கலைஞர்களும், இவரின் பத்திரிக்கைச் செய்திகளுக்கு இலக்கானார்கள். தனி நபர்களின் மீது அவதூறு பரப்புவதில் கவனம் செலுத்தும் [[மஞ்சள் ஏடு]]களின் முன்னோடிமுன்னோடியாக இந்துநேசன் விளங்கியது. அதனால் அவர் பல எதிரிகளை சம்பாதித்தார்பெற்றார்.
 
== கொலைச் சம்பவம் ==
"https://ta.wikipedia.org/wiki/லட்சுமிகாந்தன்_கொலை_வழக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது