அம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: மகாபாரதக் கதை மாந்தர்கள்‎ பகுப்பு இணைத்தல்
No edit summary
வரிசை 1:
'''அம்பை (Ambai)''' என்கிற '''சி. எஸ். லக்ஷ்மி''' [[தமிழ்|தமிழின்]] சிறந்த பெண் [[படைப்பாளி|படைப்பாளிகளுள்]] ஒருவர். [[1960]]களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர். ​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதரணமாய் தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாய் படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் ​பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.
 
இவர் SPARROW”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் சி. எஸ் லட்சுமி ((Dr. C. S. Lakshmi) என்ற தன்னுடைய இயற்பெயரில் The[[தி Hinduஇந்து]], Theதி Economicsஎக்னாமிக்ஸ் andஅண்ட் Politicalபொலிடிக்கல் Weeklyவீக்லி, The[[தி Timesடைம்ஸ் ofஆஃப் Indiaஇந்தியா]] போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.
 
== வாழ்க்கை வரலாறு ==
[[1976]]இல் விஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார். பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி படைப்பு, மற்றும் தான் தேர்ந்தெடுத்த சமூகப் பணிகளுக்குக் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு தடையாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருந்தது. வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். [[தமிழ் ]], [[ஆங்கிலம்]], [[இந்தி]] மற்றும் [[கன்னடம்|கன்னடத்தில்]] புலமை பெற்றவர். ‘தங்கராஜ் எங்கேஎங்கே‘ ‘சிறுவர்சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் . ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைபடமாகத்திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.
 
== வெளிவந்த நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அம்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது