சு. திருநாவுக்கரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:தமிழக அரசியல்வாதிகள் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வரிசையில் ஒருவரான முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் '''''சு.திருநாவுக்கரசர்(முன்பு'' எஸ்.திருநாவுக்கரசு)''' புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் தாலுகா
''அரசியல் வாழ்க்கை''
கல்லுாரிக் காலங்களிலேயே திராவிட முன்னேற்றக் கழக மாணவரணியில் இணைந்து பணியாற்றி திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆர்மீது கொண்ட பற்றின் காரணமாக எம்.ஜி.ஆர்--- அதிமுகவை தொடங்கியபோது, தனது தந்தையின் எதிர்ப்பையும் மீறி தீயத்துாரில் அதிமுக கிளையை தொடங்கினார்.
பின்னர் 1977-ல் அப்போதைய எம்.ஜி.ஆரின் நெருங்கிய சகாவான எஸ்.டி.சோமசுந்தரம் பரிந்துரையின்பேரில், அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக திருநாவுக்கரசு போட்டியிட்டார். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசரை, முதல்வர் பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆக்கினார். 3 ஆண்டுகள் துணை சபாநாயகராக திறம்பட பணியாற்றிய திருநாவுக்கரசர், மீண்டும் 1980 மற்றும் 1985 ஆகிய தேர்தலில்களில் அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்று, தமிழக அமைச்சரவையில் சத்துணவு, வீட்டுவசதி, பெருந்தொழி்ல்கள் துறை அமைச்சராகவும், அ.தி.மு.கவில் மாநில இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களையும் வகித்தார்.
எம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோருடன் இணைந்து அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக கொண்டுவந்து, அவரை முதல்வர் ஆக்கவும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் மற்றொரு அமைச்சராக இருந்த ராம.வீரப்பன் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியம்மாளை முதல்வர் ஆக்கினர். ஆனால் திருநாவுக்கரசர், ஜெயலலிதா போன்றவர்களின் எதிர்ப்பால் ஜானகியம்மாளின் ஆட்சி கவிழ்ந்தது.
|