வேளிர் (தமிழகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
வேளாண்மை செய்தற் பொருட்டு' திருக்குறள்</ref> எனவே, இவர்களைக் '''கொடையாளிகள்''' என்றுகூடச் சொல்லலாம். சங்ககாலத்தில் இவர்கள் மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர். அவ்வப்போது சில வேந்தர்கள் இவர்களை அடக்கி ஆண்டிருக்கிறார்கள்.
 
 
சங்காலத்து வேளிர்கள் 20 பேர் இதுவரை அறியப்பட்டுள்ளனர்.<ref>சங்ககால அரச வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613005, பக்கம்-258</ref> அவர்களை மூவேந்தர் நாட்டைக் கொண்டு மூன்று வகையாக பிரிக்கலாம். அவை,
===தோற்றம்===
செந்தமிழ் வளர்த்த பெருமையிற் சேர சோழ பாண்டியர்க்கு எவ்வளவு பாகமுண்டோ, அதற்கு அதிகமில்லாமற்போயினும், அவரளவு சமபாகம் பெற்றுநின்ற ஒரு பெருங்கூட்டத்தார் முற்காலத்தே தமிழ்நாட்டில் விளங்கியிருந்தனர் எனின், அது சிலர்க்கு வியப்பாகத் தோற்றலாம். ஆனால் பழைய நூலாராய்ச்சியுடைய செந்தமிழறிஞர்க்கு அது சிறிதும் வியப்பன்று. பண்டையிலக்கியங்களை ஆராயுமிடத்து, மூவேந்தர் படைத்த தமிழ்ப்பெருமையளவு தாமும் படைத்து நின்ற ஒரு கூட்டத்தார் தமிழகத்தே விளக்கமுற்றிருந்த செய்தி வெளியாகும். இன்னோர் தாம் வேளிர் என்றழைக்கப்படுவார்கள். இரவாமலீந்த கடையேழுவள்ளல்களிற் பலர் இவர்களே. “கொடுக்கிலா தானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரிலை” என்னும் திருவாக்கில், வள்ளன்மைக்கே ஓரெல்லையாக வைத்துப் பாராட்டப் பெற்றவன் இவருள் ஒருவனேயாவன். வரையாவண்மையால் தானடைந்த ஒப்பற்ற புகழைக்கண்டு மூவேந்தரும்$ அழுக்காறு கொள்ளும்படி நின்ற இப்பெருவள்ளல் விளங்கியது வேளிர் குலமெனின், அதற்கு வேறொரு பெருமையும் வேண்டுமோ?
வரிசை 34:
இச்செய்திகளால், யாதவ குலத்தார்க்குப் பலதேசங்களிலும் அடுத்தடுத்துக் குடியேறும்படி நேர்ந்துவந்ததென்றும், அம்முறையில், அன்னோர் முதலிற் கங்கை பாயும் நாடுகளினின்று மேல்கடலோரங்குடியேறிக் காலாந்தரத்தில் மஹாராஷ்டிரமென வழங்கும் தேசமுழுதும் பரவியிருந்தனரென்றும் விளங்கலாம். இவ்வாறாயின், அவ்யாதவர்கள் தாம் பரவியிருந்த நாட்டுக்கு தெற்க்கேயிருந்த முல்லை நிலத்தில் குடி அமர்ந்து பின் தமிழகத்துக் காடுகளைத் திருத்தி, ஆண்டனர் என்று கொள்வதில் புதுமை யொன்றுமில்லை என்க. யாதவர் தெற்கே வந்ததைப்பற்றிய நச்சினார்க்கினியர் எழுத்துக்களை முழுதும் ஆதரிக்கக் கூடிய பிரமாணம் இப்போது கிடைப்பதரிதேனும், அவற்றைக் குறிப்பிக்கக் கூடிய பிரமாணமும் இல்லாமற் போகவில்லை என்பதை இதனால் அறியலாம். யாதவர் தென்னாட்டுங் குடியேறினர் என்ற இவ்வூகத்துக்குப் பிரசித்தரான சரித்திராசிரியர் ஒருவரும் சம்மதமளித்தல் கவனிக்கத்தக்கது:
ஸ்ரீரோமேச சந்த்ர தத்தர் எழுதிய "பழைய இந்திய நாகரீகம்" என்ற அரியநூலின் முதற்றொகுதியில்* யாதவரைப்பற்றி எழுதப் பட்டிருப்பதாவது:-"கண்ணனைத் தலைமையாகக்கொண்ட யாதவர்கள் (வட) மதுரையைவிட்டு நீங்கிக் கூர்ச்சரத்துள்ள துவாரகையிற் குடியேறினார்கள். அங்கே அவர்கள் அதிககாலம் தங்கவில்லை. அவர்கள் தங்கட்குள்ளே பெருங்கலகம் விளைக்க, (அவருட்பலர்) துவாரகையை நீங்கிக் கடல்வழியே பிரயாணித்தனர். அங்ஙனம் பிரயாணித்தவர்கள் தென்னிந்தியாவை அடைந்து ஆங்குப் புதுராஜ்யம் ஸ்தாபித்ததாக நம்பப்படுகிறது" என்பதே. இவ்வாறு தத்தரவர்கள் எழுதுவது நச்சினார்க்கினியர் எழுதிய வேளிர் வரலாற்றோடு சில அமிசங்களில் ஒத்திருக்கின்றமை காணலாம். "வேளிர் யாதவரே" எனக்கண்டு தமிழறிஞர் ஆங்கிலத்தில் வியாசமெழுத, அதனை நோக்கி "யாதவர் தென்னிந்தியாவில் ராஜ்யம் ஸ்தாபித்ததாக நம்பப்படுகின்றது"
 
சங்காலத்து வேளிர்கள் 20 பேர் இதுவரை அறியப்பட்டுள்ளனர்.<ref>சங்ககால அரச வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613005, பக்கம்-258</ref> அவர்களை மூவேந்தர் நாட்டைக் கொண்டு மூன்று வகையாக பிரிக்கலாம். அவை,
 
===பாண்டிநாட்டு வேளிர்கள்===
"https://ta.wikipedia.org/wiki/வேளிர்_(தமிழகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது