குழாய்வேலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{merge | குழாய்வேலை}} |
சி {{merge | குழாய் சீர் செய்தல்}} |
||
வரிசை 1:
{{merge | குழாய் சீர் செய்தல்}}
{{merge | குழாய்வேலை}}▼
[[Image:Pipes various.jpg|thumb|250px|right|ஒரு கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ள சிக்கலான குழாய்வேலை]]
'''குழாய்வேலை''' என்பது, கட்டிடங்களில் [[நீர்வழங்கல்]], [[கழிவகற்றல்]] போன்றவற்றுக்காகக் [[குழாய்]]களையும், அவற்றோடிணைந்த [[பொருத்துபொருள்|பொருத்துபொருட்களையும்]] பொருத்துதல் அவற்றைப் பேணுதல், [[பழுதுபார்த்தல்]] என்பவற்றை உள்ளடக்கிய திறன்சார் தொழில் துறை ஆகும். இன்றைய நகர வாழ்க்கை முறையில், நீர்வழங்கல், கழிவகற்றல் போன்றவை இன்றியமையாத பங்கு வகிப்பதால், குழாய்வேலை தற்காலப் பொருளாதாரத்தின் முக்கியமான ஒரு துறையாக விளங்குகிறது. பொதுவாகக் குழாய்வேலை எனும்போது அது ஒரு கட்டிடம் தொடர்பான குழாய்வேலையையே குறிக்கிறது. பல கட்டிடங்களிடையே அல்லது ஒரு [[குடியேற்றம்]], [[நகரம்]] என்பவை தொடர்பில் நீர்வழங்கல், [[வடிகாலமைப்பு]] போன்றவற்றுக்கான குழாய்களை அமைத்தல் "குழாய்வேலை" என்னும் துறைக்குள் அடங்குவதில்லை.
==வரலாறு==
கி.மு 2700 ஆண்டுக் காலப் பகுதியிலேயே சிந்துவெளி நகரங்களில் தரப்படுத்திய அளவுகளைக்கொண்ட குழாய்களைப் பயன்படுத்திக் குழாய்வேலைகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர், பொதுக் குளியல் கூடங்களின் அறிமுகம், நீர்வழங்கலுக்கும் கழிவகற்றுவதற்குமான தேவைகள் அதிகரித்தமை ஆகியவற்றால் [[கிரேக்க நாகரிகம்|கிரேக்க]], [[உரோம நாகரிகம்|உரோம]], [[பாரசீக நாகரிகம்|பாரசீக]], [[சீன நாகரிகம்|சீன நாகரிகங்களைச்]] சேர்ந்த நகரங்களிலும் விரிவான குழாய்வேலைகள் செய்யப்பட்டன. மிகப் பழங்காலத்திலேயே தோன்றியிருப்பினும், 19 ஆம் நூற்றாண்டு வரை குழாய்வேலைத் துறையில் முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே இருந்தது.
பழங்காலத்தில் குழாய்வேலைகளுக்கான குழாய்களும், [[வாய்க்கால்]]களும், [[களிமண்]], [[கல்]], [[மூங்கில்]], [[ஈயம்]] போன்றவற்றால் செய்யப்பட்டன. இவற்றினூடாக நீரினதும், கழிவுப் பொருட்களினதும் ஓட்டம் [[புவியீர்ப்பு]] விசையையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. தற்காலத்தில் குழாய்கள், பெரும்பாலும் [[இரும்பு]], [[பித்தளை]], [[செப்பு]], [[பிளாஸ்டிக்கு]]ப் பொருட்கள் போன்றவற்றினால் செய்யப்படுகின்றன. ஈயக் குழாய்கள் உற்பத்தியின்போதும், பயன்பாட்டின்போதும் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை வெளிவிடக்கூடியன ஆதலால் தற்போது ஈயக் குழாய்கள் விரும்பப்படுவதில்லை. இன்றைய கட்டிடங்கள் நிலத்தின் மேல் பல தளங்களைக் கொண்டனவாகவும், நிலத்தின் கீழும் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை உடையனவாகவும் கட்டப்படுவதால், மேல் தளங்களுக்கு நீர்வழங்குவதற்கும், நிலக்கீழ் தளங்களிலிருந்து கழிவுநீரை அகற்றுவதற்கும் புவியீர்ப்பைப் பயன்படுத்த முடியாது. இதனால் உயர் அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய நீர் செலுத்திகள் (pump) பயன்படுத்தப்படுகின்றன.
▲==பொருட்கள்==
[[fa:لولهکشی]]
[[pl:Armatura wodna]]
[[ru:Арматура]]
[[uk:Арматура]]
|