மனோதத்துவ அறிஞர் '''ப்ராய்ட்''', "பாலுணர்வு நடத்தை என்பது [[உயிரியல்]] சார்ந்த, உள்ளத்துள் முக்கிய ஊக்குவிக்கும் முக்கிய சக்தியாகும்" என முன்மொழிந்தார். இவர்தம் கூற்றின்படி பாலுணர்வு இரண்டு பரந்த குழுக்களாக்கப்பட்டது. அவை ஈரோஸ் (பிறப்பு)- இது அனைத்து சுய பாதுகாத்தல், வாழ்வூக்கங்கள் மற்றும் சிற்றின்ப உணர்வுகளை உள்ளடக்கியது. தனடோஸ் (மரண உள்ளுணர்வு) என்பது ஆக்கிரமிப்பு , சுய அழிவு, கொடு உணர்வு ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். பிராய்டின் கூற்றின்படி பாலுணர்வு என்பது உடலின் சிற்றின்பங்களைச் சார்ந்ததாகும்.