பூலித்தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Ravi58649 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1653920 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Pulithevan.jpg|250px|thumb|பூலித்தேவன் சிலை]]
'''பூலித்தேவன்''' (1715 - 1767<ref name="மெக்கன்சி" />) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் [[சிப்பாய்க்கலகம்|சிப்பாய்க்கலக]]த்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
{{cquote|
"நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?<br />
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே"}}
என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.
 
==பூழி நாடு==
பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த [[அகநாடுகள்|அகநாடுகளுள்]] ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு [[பாண்டியர்|பாண்டிய]] மன்னனால் ''வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர்'' என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் [ செம்ம நாட்டு மறவர்] வழியில் வந்தவராவார்.http://ta.wikipedia.org/s/zi<ref name="மெக்கன்சி" /> ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். [[நாயக்கர்]] காலத்தில் (1529-64) பாண்டி நாடு 72 [[பாளையம் (ஆட்சி நிர்வாக முறை)|பாளையங்களாக]] பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அதன் தலைநகரம் [[நெற்கட்டாஞ்செவ்வல்|நெற்கட்டாஞ்செவ்வலுக்கு]] மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.[[வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவர்|வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின்]] வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவரார்.<ref>{{cite web | url=http://www.usetamil.com/t9282p5-topic#14727 | title=பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் வைகோவின் உரை | publisher=www.usetamil.com | work=18 திசம்பர் 2008 | date=10 திசம்பர் 2010 | accessdate=சூலை 17, 2012 | author=ஜனனி}}</ref>
===பெயர் காரணம்===
[['''பூலித்தேவன்''']],தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ,அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ,மேல்வாரம் தன்மையிலோ,வரி என்ற பெயரிலோ,ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் '''ஆவுடையாபுரம்''' [[நெற்கட்டுஞ்செவ்வல்]]<ref name="ReferenceA">முனைவர் ந.இராசையா,வரலாற்றாய்வாளர்-பூலித்தேவன் சிந்து-ஆய்வு-பக்கம்-39.</ref> என்றாகியது
===பட்டியல்<ref name="மெக்கன்சி">{{cite web | url=http://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.JPG | title=File:பூழி நாட்டரசர்களின் வரலாறு.JPG | publisher=விக்கி பொது | accessdate=டிசம்பர் 31, 2012 | author=மெக்கன்சி | pages=பட்டியல் டி3134 ஆர் 7992}}</ref>===
{| class="wikitable"
|-
! தலைமுறை !! பெயர் !! ஆட்சியாண்டுகள்
|-
| 1 || வரகுண சிந்தாமணி பூலித்தேவன் || 1378 - 1424
|-
| 2 || வடக்காத்தான் பூலித்தேவன் || 1424 - 1458
|-
| 3 || வரகுண சிந்தாமணி வடக்காத்தான் பூலித்தேவன் || 1513 -1548
|-
| 4 || சமசதி பூலித்தேவன் || 1548 - 1572
|-
| 5 || முதலாம் காத்தப்ப பூலித்தேவன் || 1572 - 1600
|-
| 6 || இரண்டாம் காத்தப்ப பூலித்தேவன் || 1600 - 1610
|-
| 7 || முதலாம் சித்திரபுத்திரத்தேவன் || 1610 - 1638
|-
| 8 || மூன்றாம் காத்தப்ப பூலித்தேவன் || 1638 - 1663
|-
| 9 || இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன் || 1663 - 1726
|-
| 10 || நான்காம் காத்தப்ப பூலித்தேவன் || 1726 - 1767<ref name="மெக்கன்சி" />
|}
வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவரார். இவருக்கு பிறந்த பூலித்தேவன் என்பவரே [[இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்|இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில்]] தொடங்குவதற்கு காரணமாயிருந்த [[பாளையக்காரர் போர்கள்|பாளையக்காரர் போர்களின்]] முன்னோடி.
 
==பிறப்பு==
மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் [[விசுவநாத நாயக்கர்]] முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு ஆறு மண்டலங்கள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டதில் [[மதுரை]],[[திருவில்லிப்புத்தூர்]],[[திருநெல்வேலி]] ஆகிய மண்டலங்களில் 18 மறவர் பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டது.ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு முழுமரியாதையும், தனி அதிகாரங்களும்<ref>Sathiyanatha Iyer,History the Nayakar of Madura.P.No.58</ref> வழங்கப்பட்டன.இத்தகைய பாளையங்களில் ஒன்று [[நெற்கட்டுஞ்செவ்வல்]] பாளையம் ஆகும்.
 
[[பூலித்தேவர்|பூலித்தேவரின்]] பெற்றோர்கள் பெயர் [[சித்திரபுத்திர்ர்|சித்திரபுத்திரத் தேவரும்]] [[சிவஞான நாச்சியார்|சிவஞான நாச்சியாரும்]] ஆவர். [[பூலித்தேவர்]] 1-9-1715 ல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர், [['காத்தப்பப் பூலித்தேவர்']] என்பதாகும். [['பூலித்தேவர்']] என்றும் [['புலித்தேவர்']] என்றும் அழைக்கலாயினர்.<ref name="ReferenceA"/>
 
சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்நத [[சுப்பிரமணிய பிள்ளை]] என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் [[பூலித்தேவர்]] பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.
 
[[பூலித்தேவர்|பூலித்தேவருக்கு]] பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
 
இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது. செம்ம நாட்டு மறவர்கள் செம்ம நாட்டு மறவர்கள்,இவர்களில் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் இவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த செம்ம நாட்டு மறவர் இனத்தை சேர்ந்தவர்.மறவர் இனத்தில் இவர்கள் மிகவும் தொன்மையானவர்கள்.
 
==வாழ்க்கை==
[[படிமம்:Pulithevan tiruchengode copperplate.jpg|thumb|150x150px|இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடு.]]
அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் '''பூலித்தேவர்''' ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.
 
மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது.
இதனால் '''பூலித்தேவரை''' எல்லோரும் '''புலித்தேவர்''' என்றே அழைத்து வந்தனர்.
 
காத்தப்ப பூலித்தேவர்|காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.
 
பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய அக்கா மகள் [[கயல்கண்ணி]] என்கின்ற '''இலட்சுமி நாச்சியார்'''. கயல் கண்ணியின் சகோதரர் [[சவுணத்தேவர்|சவுணத்தேவரும்]], பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு '''கோமதி முத்துத் தலவாச்சி''', '''சித்திரபுத்திரத் தேவன்''' மற்றும் '''சிவஞானப் பாண்டியன்''' என்று மூன்று மக்கள் பிறந்தனர்.
 
பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். சங்கரன்கோயில், '''பால்வண்ணநாதர்''' கோயில், வாசுதேவநல்லூர் '''அர்த்தநாரீசுவரர்''' கோயில், நெல்லை '''வாகையாடி அம்மன்''' கோயில் மற்றும் மதுரை '''சொக்கநாதர்''' கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் '''பூலித்தேவர்''' திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது. இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடுகளும் உள்ளன.
 
==விடுதலைப்போராட்டத்தில் பங்கு==
1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தான். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான் இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது.<ref name="நூல்">{{cite book | title=விடுதலை வேள்வியில் தமிழகம் | pages=40}}</ref> பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.<ref name="இந்து">{{cite press_release | url=http://www.thehindu.com/news/states/tamil-nadu/work-to-restore-17th-century-palace-begins/article104700.ece | title=Work to restore 17th century palace begins | accessdate=சனவரி 02, 2013}}</ref>
 
1755ஆம் ஆண்டு [[கர்னல் கீரோன்]] தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்யைனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.<ref>வீரத்தலைவர் பூலித்தேவர்-பேராசிரியர்- ந. சஞ்சீவி-காவியா பதிப்பகம்-சென்னை-2004</ref>
 
அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.
 
1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு [[கேப்டன் பௌட்சன்]] வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய [[கான்சாகிப்|கான்சாகிப்வால்]] '''பூலித்தேவரை''' ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு அதன் பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார். <ref>விடுதலைப் போரின் வீரமரபு-பக்கம்-36- பூலித்தேவன் -கீழைக்காற்று வெளியீட்டகம்-சென்னை-2010</ref>
 
நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.
 
==அன்னியர் எதிர்ப்பு==
பூலித்தேவர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.
 
பூலித்தேவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராஷ்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது.
 
ஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றோரு முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள்.
 
இத்கு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின் உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர்.
 
பாளையக் காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல் கீரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய் படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.
 
மாபூஸ்கான், கர்னல் கீரானுக்குச் செய்தி அனுப்பி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது . இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார்.
 
ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள்.
 
இதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம் ஒப்படைத்தனர். இந்த [[யூசுப்கான்]] பிறப்பால் [[மருதநாயகம்]] என்ற தமிழன். பின்னர் நாளடைவில் மதம் மாறி ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் சுதேசிப் படைகளின் தலைவன் ஆன இவன், பதவி ஆசைக்காக, அன்னியராட்சியை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாவீரன் பூலித்தேவரை கடுமையாக எதிர்த்தான்.
 
1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது.
 
1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடிம் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.
 
அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவரால் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.
 
ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர், இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார். 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/பூலித்தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது