கார்கில் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறிய பிழை திருத்தம்
கட்டுரை விரிவாக்கம் செய்யப்பட்டது
வரிசை 1:
{{Infobox Military Conflict
|conflict = கார்கில் போர்<br />Kargil War
|partof =[[ இந்திய-பாகிஸ்தான் போர்கள்|இந்திய-பாகிஸ்தான் போர்களின்]]
|campaign =
|image = [[படிமம்:Kargil Bofors.jpg|300px|]]
|caption = இந்தியாவின் [[பொஃபொர்ஸ்]] துப்பாக்கி பாகிஸ்தான் இராணுவம் இருக்கும் இடத்தை குறி பார்த்துக் கொண்டு இருக்கிறது
|date = மே- &mdash; ஜூலை, 1999
|place = [[கார்கில்]] மாவட்டம், [[ஜம்மு காஷ்மீர்]]
|casus =பாகிஸ்தானின் பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் [[கட்டுப்பாடுக் கோடு|கட்டுப்பாடுக் கோடைகோட்டை]]த் தாண்டி வந்தனர்
|territory = போருக்கு முன்னிருந்த இடங்கள்
|result = பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின;<ref>{{cite web|url=http://www.wsws.org/articles/1999/aug1999/pak-a07.shtml |title=பாகிஸ்தான் எதிர்கட்சிகள் ஷெரீஃபை இராஜினாமா செய்யக் கோரின |publisher=Wsws.org |date=1999-08-07 |accessdate=2012-06-15}}</ref> இந்தியா கார்கிலை மீண்டும் கைப்பற்றியது.<ref>{{cite web|url=http://www.india-today.com/itoday/26071999/cover.html |title=கார்கில் போர்: பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின|publisher=இந்தியா டுடே |date=1999-07-26 |accessdate=2012-06-15}}</ref>
|result=இந்தியா கார்கிலை மீண்டும் கைப்பற்றியது
|combatant1 = {{flag|இந்தியா}}
|combatant2 = {{flag|பாகிஸ்தான்}},<br />காஷ்மீரி போராளிகள் <br />
|commander1 = {{flagicon image|Flag of Indian Army.svg}} வேத் பிரகாஷ் மாலிக்
|commander1=
|commander2 = {{flagicon image|Flag of the Pakistani Army.svg}} பர்வேஸ் முஷாரஃப்
|commander2=
|strength1 = 30,000
|strength2 = 5,000
|casualties1 = '''இந்தியஇந்தியாவின் அரசுஅதிகாரப்பூர்வ குறித்த கணக்குபுள்ளிவிவரம்:'''<br /> 527 பலி<ref>[http://pib.nic.in/feature/feyr2000/fjul2000/f210720001.html Governmentஇந்திய ofஅரசு Indiaஇணையதளத்தில் siteஇழப்புகள் mentioning the Indianகுறித்த casualtiesஅறிவிப்பு], [http://164.100.24.208/lsq/quest.asp?qref=7803 Statewiseநாடாளுமன்றத்தில் breakவெளியிடப்பட்ட upமாநிலவாரியாக ofஉயிரிழந்தவர்கள் Indian casualties statement from Indian Parliamentபட்டியல்]</ref><ref>[http://164.100.24.208/lsq/quest.asp?qref=51302 Breakdownபதவிகளின்படி ofஉயிரிழந்தவர்கள் casualties into Officers, JCOs, and Other Ranksபட்டியல் - Parliament ofஇந்திய Indiaநாடாளுமன்ற Websiteஇணையதளம்]</ref><ref name="rollofhonor">[http://www.indianarmy.nic.in/martyrs/home.jsp?operation=28&hidrecord=10&FormBugs_Page=1#Form Completeவிஜய் Rollநடவடிக்கையில் ofஉயிர் Honourதுறந்தவர்களுக்கு ofசெய்யப்பட்ட Indian Army's Killed in Action during Op Vijayமரியாதைகள்] இந்திய இராணுவ இணையத்தளத்திலிருந்து.</ref> <br /> 1,363 படுகாயம்<ref>[http://164.100.24.219/rsq/quest.asp?qref=3798 Officialபோரில் statementகாயமடைந்தவர்கள் giving breakdown of wounded personnelபட்டியல் - Parliamentஇந்திய ofநாடாளுமன்ற India Websiteஇணையதளம்]</ref><br /> 1 [[போர் கைதி]] <br /> 1 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது <br /> போர் விமானம் விழுந்து நொறுங்கியது <br /> 1 உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது <br /> '''பாகிஸ்தான் இராணுவ கூற்றுகள்:''' <br /> 1600<ref>{{cite news|title=கார்கில் போரில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு பெரும் வெற்றி என்று பர்வேஸ் முஷாரஃப் கூறினார் |url=http://www.greaterkashmir.com/news/2013/Feb/1/musharraf-claims-kargil-was-a-big-success-militarily-for-pak-46.asp|accessdate=ஏப்ரல் 6, 2013|newspaper=கிரேட்டர் கஷ்மீர்|date=பிப்ரவரி 1, 2013}}</ref>
|casualties2 = '''பாகிஸ்தான் இராணுவ கூற்றுகள்:''' <br /> 357-4000 பலி<ref name="Indianexpress">[http://www.indianexpress.com/story/14208.html முஷாரஃபின் புத்தகத்தில் பாகிஸ்தான் படைகளின் இழப்பு பற்றிய குறிப்பு] இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி அறிக்கை</ref><ref name="Hindu Sharif">[http://www.hinduonnet.com/thehindu/2003/08/17/stories/2003081702900800.htm நான்காயிரத்திற்கும் அதிகமான பாகிஸ்தான் வீரர்கள் கார்கில் போரில் உயிரிழந்தனர்: ஷெரீஃப்]</ref><ref>{{cite news|title=கார்கில் போரில் 453 வீரர்கள் இறந்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு|url=http://www.rediff.com/news/slide-show/slide-show-1-pak-quietly-names-453-men-killed-in-kargil-war/20101118.htm|accessdate= 6/4/2013|date=18/11/2010}}</ref><br />(பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்)<br /> 665+ இராணுவ வீரர்கள் படுகாயம்<ref>{{cite web |url=http://www.indianexpress.com/news/musharraf-now-has-paks-kargil-toll-357/14208/ |title=கார்கில் போரில் 357 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு: முஷாரஃப் தெரிவித்தார்|last1= |first1= |last2= |first2= |date= |work= |publisher=இந்தியன் எக்ஸ்பிரஸ் |accessdate=7/10/2006}}</ref><br /> 8 போர் கைதிகள் <ref name="tribpow">[http://www.tribuneindia.com/1999/99aug15/nation.htm#9 பாகிஸ்தான் போர் கைதிகள் குறித்த உயர்மட்ட குழுவின் அறிக்கை]</ref><br /> '''இந்திய அதிகாரப்பூர்வ கூற்றுகள்:''' <br /> 700 பலி <ref>{{cite book |last=அஷோக் கல்யான் வர்மா |first=மேஜர் ஜெனரல் |authorlink= |title=கார்கில்: ப்லட் ஆன் தி ஸ்னோ |url= |accessdate= |year= |publisher= |location= |isbn= |page=126}}</ref><ref>{{cite web |url=http://www.laits.utexas.edu/solvyns-project/kargil.html |title=கார்கில் போர், மே-சூலை (1999)|last1= |first1= |last2= |first2= |date= |work= |publisher=utexas.edu |accessdate=2/2/2013}}</ref><ref>{{cite web |url=http://articles.timesofindia.indiatimes.com/2012-11-28/india/35410583_1_saurabh-kalia-n-k-kalia-pakistani-troops |title=பாகிஸ்தானின் போர் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்: கார்கிலில் உயிர் துறந்த வீரரின் பெற்றோர் கோரிக்கை |last1= |first1= |last2= |first2= |date=20/11/2012 |work= |publisher=இந்தியாடைம்ஸ்.காம் |accessdate=2/2/2013}}</ref>
|casualties2='''பாகிஸ்தானி மதிப்பு:'''{{fn|(II)}}<br />357-4000 பலி<ref name="Indianexpress">[http://www.indianexpress.com/story/14208.html President Musharaffs disclosure on Pakistani Casualties in his book] Indian Express news report</ref><ref name="Hindu Sharif">[http://www.hinduonnet.com/thehindu/2003/08/17/stories/2003081702900800.htm Over 4000 soldier's killed in Kargil: Sharif]</ref><br />(பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்)<br />665+ இராணுவ வீரர்கள் படுகாயம்<ref name="Indianexpress" /><br />
8 போர் கைதிகள்.<ref name="tribpow">[http://www.tribuneindia.com/1999/99aug15/nation.htm#9 Tribune Report on Pakistani POWs]</ref>
}}
 
'''கார்கில் போர்''' ([[ஆங்கிலம்]]: ''Kargil War'') அல்லது '''கார்கில் பிரச்சனை''', [[1999]]இல் மே முதல் ஜூலை வரை [[இந்தியா]]வுக்கும் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுக்கும்]] இடையில், நடந்த போராகும். இந்தப்இந்த போர் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் [[கார்கில்]] நகரின் அருகில் நடந்தது. மேகார்கிலை 1999இல்மீட்க பாகிஸ்தான்இந்திய இராணுவமும்அரசு காஷ்மீரிமேற்கொண்ட போராளிகளும் பாகிஸ்தானிலிருந்துநடவடிக்கையான [[கட்டுப்பாடுக் கோடு|கட்டுப்பாடுக்விஜய் கோடைநடவடிக்கை]]த் தாண்டிஎன்ற இந்தியாவிற்குள்பொயரிலும் நுழைந்தனர்இது வழங்கப்படுகிறது.<ref>கோவாவைக் இரண்டுகைப்பற்ற மாதங்களாகஇந்தியா மிக1961 உயரத்தில்ஆன் நடந்தஆண்டு போரில்மேற்கொண்ட இந்தியவிஜய் ராணுவம்,நடவடிக்கையிலிருந்து இந்தியவேறுபடுத்திக்காட்ட வான்படையின்சில உதவியுடன்,சமயம் அத்துமீறிஇது நுழைந்தவர்கள்'''விஜய் மீதுகார்கில் தாக்குதல்நடவடிக்கை''' நடத்தி அவர்களைக் கட்டுப்பாடுக் கோட்டுக்கு அப்பால் விரட்டினர்.எனவும் வழங்கப்படுகிறது</ref>
 
மே 1999இல் பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து [[கட்டுப்பாடுக் கோடு|கட்டுப்பாடுக் கோடை]]த் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு முக்கிய காரணமாகும்.<ref name = "Globalsecurity">{{cite web| url=http://www.globalsecurity.org/military/world/war/kargil-99.htm|title=1999 Kargil Conflict|work=GlobalSecurity.org|publisher=| accessdate=2009-05-20}}</ref> போரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான், பழியை முற்றிலுமாக காஷ்மீரி போராளிகள் மீது சுமத்தியது. ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், போருக்குப்பின் [[பாக்கித்தான் பிரதமர்|பாகிஸ்தான் பிரதமர்]] மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள்<ref>{{cite book | author=[[டாம் கிளான்சி]], ஜெனரல் டோனி ஜின்னி (ஓய்வு) மற்றும் டோனி கோல்ட்ஸ் | title=பேட்டில் ரெடி | publisher=க்ரோசெட் & டொன்லாப் | year=2004 | isbn=0-399-15176-1}}</ref><ref>{{cite news|url=http://www.indianexpress.com/news/as-spell-binding-as-the-guns-of-navarone/475330/|title=பாகிஸ்தான் தளபதி கார்கில் போரில் பாகிஸ்தானின் சதியை அம்பலப்படுத்தினார் |date=12/6/2009 |accessdate=13/6/2009}}</ref><ref>{{cite news|url=http://www.hindu.com/2007/09/10/stories/2007091059781400.htm|title=கார்கிலில் பாகிஸ்தானின் ஈடுபாட்டை ஷெரீஃப் உறுதி செய்தார்|date= 9/10/2007|accessdate= 6/10/2007|location=சென்னை, இந்தியா|work=தி இந்து}}</ref> மூலமாகவும், பாகிஸ்தான் துணை இராணுவப் படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில்<ref>நவாஸ், ஷுஜா, ''பாகிஸ்தான், அதன் இராணுவம் மற்றும் அதன் போர்கள்'', பக்கம் 420 (2007)</ref> போரில் ஈடுபட்டிருந்தது உறுதியானது. [[இந்திய வான்படை]]யின் துணையோடு, [[இந்தியத் தரைப்படை]], பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போரளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன.
போர் நிகழும்போது பாகிஸ்தான் அரசு போரைச் சேரவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் போர் முடிவுற்ற பிறகு பாகிஸ்தான் படையினர்கள் காஷ்மீரி போராளிகளுக்கு உதவி செய்துள்ள தகவல் வெளிவந்தது. இந்த போர் காரணமாக இந்தியா, இராணுவத்துக்கு ஒதுக்கும் நிதியை அதிகமாக்கியது. பாகிஸ்தானின் பொருளாதாரமும் அரசும் இந்த போர் காரணமாக பலவீனமானது. இந்த போர் முடிந்து அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் [[பர்வேஸ் முஷாரஃப்]], இராணுவ புரட்சி செய்து பிரதமர் [[நவாஸ் செரிப்|நவாஸ் செரிபஃபைப்]] பதவியில் இருந்து அகற்றினார்.
 
இப்போரானது, மிக உயர்ந்த மலைத்தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடந்த போருக்கு சிறந்த உதாரணமாகும். இதுவரை இந்த போர் மட்டுமே, [[அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்]] இரண்டுக்கிடையில் நடந்த நேரடிப் போராகும். இந்தியா [[சிரிக்கும் புத்தர்|முதன்முறையாக]] 1974 இல் வெற்றிகரமாக [[அணு குண்டு|அணு ஆயுதச்]] சோதனை நிகழ்த்தியது. பாகிஸ்தானும் இரகசியமாக அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், 1998 ஆம் ஆண்டு இந்தியா நிகழ்த்திய [[சக்தி நடவடிக்கை|இரண்டாவது அணு ஆயுதச் சோதனைக்குப்]] பிறகு இரண்டு வாரங்கள் கழித்தே பாகிஸ்தான் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நிகழ்த்தியது.
கார்கில் போரில், உலக வரலாற்றில் முதல் முறையாக இரண்டு [[அணு குண்டு|அணு ஆயுதங்கள்]] பெற்றிருந்த நாடுகளுக்கு இடையில் போர் நடந்தது.
 
==அமைவிடம்==
கார்கில் போருக்கு பிறகு இந்த போரை மையமாகக் கொண்டு இந்தியாவி்ல் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தன. என்.ஓ.சி. கார்கில் (2003), லட்சிய (2004) போன்ற இந்தி திரைப்படங்கள் இதுபோன்ற திரைப்படங்கள் ஆகும்.
1947 ஆம் ஆண்டு நடந்த இந்திய பிரிவினைக்கு முன், கார்கில் பகுதி [[லடாக்]]கின் பல்திஸ்தான் மாவட்டத்தோடு இணைந்திருந்தது. உலகின் பல உயர்ந்த மலைகளைக் கொண்ட கார்கில் பகுதி, பல இன, மொழி மற்றும் சமய வேறுபாடுடைய மக்களைக் கொண்டது. முதல் காஷ்மீர் போருக்குப் பின் (1947 - 1948) வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டின் படி, கார்கில் நகரம் இந்திய [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலமான]] [[சம்மு காசுமீர்|ஜம்மூ காஷ்மீரின்]] லடாக் பகுதியுடன் இணைக்கப்பட்டது.<ref name="டான்">{{cite web| url=http://www.dawn.com/2006/10/21/ed.htm#4|first=ஜாவீத் |last=ஹுசைன்|title=கார்கில்: என்ன நடந்திருக்கக்கூடும் |work=டான் |date=21-10-2006 |publisher=| accessdate=20-05-2009}}{{Dead link|date=November 2010|bot=H3llBot}}</ref> [[இந்திய-பாகிஸ்தான் போர், 1971|இந்திய-பாகிஸ்தான் போரில்]] (1971) பாகிஸ்தானின் தோல்விக்குப் பின் இந்தியாவும் பாகிஸ்தனும் செய்துகொண்ட சிம்லா உடன்படிக்கையில், இரு நாடுகளும் கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி இராணுவ மோதல்களில் ஈடுபடக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.<ref>{{cite book | first=பெர்வைஸ் இக்பால் |last=சீமா | title=பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் | publisher= | year=2003 |isbn=}} பக்கம் 4</ref>
 
[[படிமம்:Kargil.map.gif | thumb | போர் நடைபெற்ற கார்கிலின் அமைவிடம்]]
 
கார்கில் நகரம், [[சிறிநகர்|ஸ்ரீநகரில்]] இருந்து 205 கி.மீ. (127 மைல்) தொலைவில்,<ref>[http://kargil.nic.in/profile/profile.htm கார்கில் மாவட்டம் பற்றிய தகவல்கள்] கார்கில் மாவட்டத்தின் இணையதளம்</ref> [[வடக்கு நிலங்கள்|இந்தியாவிற்குட்பட்ட பகுதிகளின் வடக்கு எல்லையில்]] உள்ளது. இமய மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் மிதமான வானிலை கொண்டதாக கார்கில் விளங்குகிறது. கோடை காலங்கள் குளுமையாகவும்; குளிர்காலங்கள் நீண்டதாகவும், மிகவும் குறைந்த வெப்பநிலை (-48 °C வரை) கொண்டதாகவும் இருக்கும்.<ref>{{cite web| url=http://kargil.nic.in/profile/profile.htm|title=Climate & Soil conditions|work=கார்கில் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்|publisher=| accessdate=20-05-2009}}</ref> ஸ்ரீநகரையும் [[லே]]வையும் இணைக்கும் [[இந்தியாவின் நெடுஞ்சாலைகள்|தேசிய நெடுஞ்சாலையான]] NH-1D, கார்கில் வழியாக செல்கிறது.<ref name = "Globalsecurity" /> ஊடுருவல் நடந்தது இந்த சாலைக்கு சிறிது தொலைவில் இருக்கும் முகடுகளில்தான். இப்பகுதியல் உள்ள இராணுவ கண்காணிப்புத் தளங்கள் தரைமட்டத்தில் இருந்து சுமார் 5000 மீட்டர் (16,000 அடி) உயரத்தில் அமைந்துள்ளன.<ref name="Summary">{{cite web| url=http://www.ccc.nps.navy.mil/research/kargil/war_in_kargil.pdf|format=PDF|title=War in Kargil – The CCC's summary on the war|work=|publisher=| accessdate=2009-05-20}}</ref> மாவட்டத் தலைநகரைத் தவிர முஷ்கோ பள்ளத்தாக்கு, திரஸ் எனும் நகரம், படாலிக் பகுதி, கார்கிலின் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர்.
 
கார்கில் நகரம் ஊடுருவப்பட்டதற்கு முக்கிய காரணம், அதன் அருகில் இருந்த காலியான இராணுவ கண்காணிப்புத் தளங்களாகும்.<ref>{{cite web| url=http://acdis.illinois.edu/publications/207/publication-LimitedWarwithPakistanWillItSecureIndiasInterests.html|title=பாகிஸ்தானுடன் குறுகிய போர்: இந்தியாவுக்கு பயனளிக்குமா?|work=|publisher=|first=சுபா |last=சந்திரன்|year=2004|accessdate=20-05-2009}}</ref> இதுபோன்ற இடங்களில், மலை முகடுகளின் உச்சியில் தற்காப்பு நிலைகள் ஏற்படுத்தப்பட்டால், அது [[கோட்டை]]யை போன்ற பாதுகாப்பைத் தரும். உயரத்தில் இருக்கும் இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் படையினருக்கு பன்மடங்கு அதிக பலம் தேவைப்படும்<ref> [http://www.rand.org/pubs/monograph_reports/MR638/ தாக்குதல் நடத்தும் படைகளுக்கு 3:1 என்று ஏறுக்கொள்ளப்பட்ட விகிதாசரத்திற்கு], பதிலாக [http://www.india-today.com/itoday/19990726/cover3.htmlகார்கிலில் 6:1 என்ற விகிதாசாரம் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது] [[இந்தியா டுடே]]</ref> என்பதைத் தவிர நடுங்க வைக்கும் குளிரையும் அப்படையினர் தாக்குப்பிடித்தாக வேண்டும்.<ref>அகோஸ்டா, மார்கஸ், கேப்டன், அமெரிக்க இராணுவம், [http://www.ccc.nps.navy.mil/research/theses/Acosta03.pdf உயரமான களங்களில் போர்: கார்கிலும் அதற்கு பின்னும்], சூன் 2003. [http://www.nps.edu/academics/sigs/nsa/publicationsandresearch/studenttheses/theses/Acosta03.pdf மற்றொரு இணைப்பு]</ref>
 
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்கார்டூ எனும் நகரம் கார்கிலில் இருந்து 173 கி.மீ (107 மைல்) தொலைவில்தான் உள்ளது. அந்நகரம் பாகிஸ்தான் படையினருக்கு, தாக்குதலின் போது தேவையான ஆயுதங்கள் மற்றும் பிற தளவாடங்களை விநியோகிக்கக்கூடியதாக அமைந்தது.
 
==பின்புலம்==
[[படிமம்:Kargil town, India panorama.jpg|thumb|இமய மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள கார்கில் நகரம்]]
 
1971 ஆம் ஆண்டு நடந்த [[இந்திய-பாகிஸ்தான் போர், 1971|இந்திய-பாகிஸ்தான் போருக்குப்]] பின் இரு நாடுகளுக்கிடையே பெரும்பாலும் அமைதியே நிலவியது. ஆனால் [[சியாச்சென் பனியாறு|சியாசென்]] பனிமலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் செய்த முயற்சிகளும் அதன் காரணமாக அமைக்கப்பட்ட இராணுவ கண்காணிப்பு நிலைகளும், சிறிய அளவில் மோதல்கள் ஏற்பட காரணமாக அமைந்தது.<ref>{{cite web| url=http://outside.away.com/outside/features/200302/200302_siachen_7.html|title=உறைந்த போர்|work=|publisher=| accessdate=20-05-2009}}</ref> காஷ்மீரில் 1990 களில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்த பிறிவினைவாத மோதல்களும், இரு நாடுகளும் 1998 இல் மேற்கொண்ட [[அணுகுண்டு சோதனை|அணு ஆயுத சோதனைகளும்]], பதற்றம் அதிகரிக்கக் காரணமாயின. பதற்றத்தைத் தணிக்கவும், காஷ்மீர் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவும் இரு நாடுகளும் பிப்ரவரி 1999 இல், லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
 
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பாகிஸ்தான் இராணுவத்தின் சில பிரிவுகளும் பாகிஸ்தான் துணை இராணுவப் படையினரும் [[முஜாஹிதீன்]] போராளிகளைப்போல இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள [[சம்மு காசுமீர்|காஷ்மீர்]] பகுதிக்குள் 1998-1999 களில் ஊடுருவத் தொடங்கினர். இந்த ஊடுருவல் ''பத்ர் நடவடிக்கை'' என்ற குறியீட்டுப் பெயரால் அறியப்பட்டது.<ref name="VP Malik">[http://www.dailytimes.com.pk/default.asp?page=story_26-7-2002_pg4_12 Kargil: where defence met diplomacy] – India's then Chief of Army Staff of the Indian Army|Chief of Army Staff VP Malik, expressing his views on Operation Vijay. Hosted on ''Daily Times (Pakistan)|Daily Times''; [http://www.stanford.edu/group/sjir/3.1.06_kapur-narang.html The Fate of Kashmir By Vikas Kapur and Vipin Narang] Stanford Journal of International Relations; [http://www.ipcs.org/ipcs/displayReview.jsp?kValue=102 Book review of "The Indian Army: A Brief History by Maj Gen Ian Cardozo"] – Hosted on IPCS</ref> காஷ்மீருக்கும் லடாக்குக்கும் உள்ள இணைப்பைத் துண்டிப்பதும்; சியாசென் பனிமலையில் இருக்கும் இந்தியப் படையினரைப் பின் வாங்க வைத்து காஷ்மீர் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியாவை நிர்பந்திப்பதும் இதன் முக்கிய நோக்கங்களாகக் கருதப்படுகின்றன. காஷ்மீர் பகுதியில் பதற்றம் அதிகரித்தால் சர்வதேச நாடுகள் தலையிடும் என்றும் அதன் மூலம் காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் முடிவு காண முடியும் என்றும் பாகிஸ்தான் நம்பியது. இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் நடந்து வரும் கிளர்ச்சியையும் இதன்மூலம் பெரிதாக்க முடியும் என்பதும் இதன் ஒரு முக்கிய இலக்காக இருந்திருக்கலாம்.
 
பாகிஸ்தான் இராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் சாகித் அஸிஸ் மற்றும் [[சேவைகளிடை உளவுத்துறை|ஐ.எஸ்.ஐ]] யின் கூற்றுகளால் ஊடுருவலில் முஜாகிதீன் ஈடுபடவில்லை என்பதும், ஊடுருவியதும் கார்கில் போரில் ஈடுபட்டதும் பாகிஸ்தான் படையினர்தான் என்பதும் புலனாகிறது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் ''மேக்தூத் நடவடிக்கைக்குப்'' பாகிஸ்தானின் பதிலடி என்றும் நம்பப்படுகிறது.<ref>{{cite book | author=ராபர்ட். ஜி. விர்சிங் | title=போரின் நிழலில் காஷ்மீர்: அணு யுகத்தில் பிராந்திய எதிரிகள் | publisher= | year=2003 |isbn=0-7656-1090-6}} பக்கம் 38</ref>
 
இந்தியாவின் அப்போதைய தரைப்படைத் தளபதியான வேத் பிரகாஷ் மாலிக் மற்றும் பலர்,<ref>{{cite book |title=பத்ர் நடவடிக்கை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் ஆயிரம் வருடப்போரில் முஷாரஃபின் பங்கு |last= லுத்ரா |first=குல்தீப் எஸ். |authorlink= |coauthors= |year=2001 |publisher= |location= |page= |pages=}}</ref><ref>{{cite book |title=இந்தியாவின் மோதல்கள் |last= சந்தா |first=விவேக் |authorlink= |coauthors= |year=2005 |publisher= |location= |page= |pages=}}</ref> இந்த ஊடுருவல் பாகிஸ்தான் இராணுவத்தால் பல காலமாகத் திட்டமிடப்பட்டது என்று கருதுகின்றனர். பல முறை பாகிஸ்தான் இராணுவம் இத்திடத்தை செயல்படுத்தப் பாகிஸ்தான் தலைவர்களிடம் (சியா உல் ஹக் மற்றும் [[பெனசீர் பூட்டோ]]) அனுமதி கேட்டும், இது பெரும் போருக்கு வித்திடக்கூடும் என்ற அச்சத்தால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.<ref name="Hassan Abbas">{{cite book | author=Hassan Abbas | title=Pakistan's Drift Into Extremism: Allah, the Army, and America's War on Terror | publisher=M.E. Sharpe | year=2004|isbn=0-7656-1497-9}}</ref><ref>[http://www.dailytimes.com.pk/default.asp?page=story_2-7-2003_pg7_19 முஷாரஃப் கார்கில் போரை விரும்பவில்லை: பெனாசீர்]</ref><ref>{{cite book |title=குறுக்கு வாட்கள் |last= நவாஸ் |first=ஷுஜா |authorlink= |coauthors= |year=2005 |publisher= |location= |page= |pages=}}</ref>
 
பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதும் தாக்குதலுக்கானத் திட்டங்கள் மீண்டும் வகுக்கப்பட்டன.<ref name="VP Malik" /><ref>{{cite book |title=Dangerous Deterrent |last= கபூர் |first=பவுல் |authorlink= |coauthors= |year=2007 |publisher= |location= |isbn=0-8047-5550-7 |page=118}}</ref> போருக்குப் பின் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் [[நவாஸ் ஷெரீப்|நவாஸ் ஷெரீஃப்]], தனக்குத் தாக்குதல் திட்டங்கள் குறித்து எவ்விதத் தகவல்களும் தெரியாது என்றும் இந்தியப் பிரதமராக விளங்கிய [[அடல் பிகாரி வாஜ்பாய்]] தொலைப்பேசியில் அழைத்து எல்லை நிலவரம் குறித்துப் பேசிய பின்னர்தான் தனக்குத் தாக்குதல் பற்றித் தெரியும் என்றும் கூறியுள்ளார்.<ref>{{cite news| url=http://timesofindia.indiatimes.com/articleshow/1581473.cms|title=Nawaz blames Musharraf for Kargil|work=The Times of India|publisher=|date=2006-05-28 |accessdate=2009-05-20}}</ref> ஷெரீஃப், இத்தாக்குதலுக்கு முழு காரணம், பாகிஸ்தான் இராணுவத் தளபதியாக விளங்கிய பர்வேஸ் முஷாரஃபும் அவரது கூட்டாளிகளான சில தளபதிகளும்தான் என்று கூறியுள்ளார்.<ref name=sharifunaware>{{cite news|url=http://www.dawn.com/2006/05/29/nat1.htm|title=I learnt about Kargil from Vajpayee, says Nawaz|publisher=Dawn|date=2006-05-29|accessdate=2006-05-29}} {{Dead link|date=November 2010|bot=H3llBot}}</ref><ref name="Hassan Abbas" /><ref name="Qadir">{{cite web| url=http://www.ccc.nps.navy.mil/research/kargil/JA00199.pdf|title=An Analysis of the Kargil Conflict 1999|date=April 2002|last=Qadir|first=Shaukat|work= RUSI Journal|publisher=| accessdate=2009-05-20}}</ref> ஆனால் தாக்குதல் திட்டம் குறித்து நவாஸ் ஷெரீஃபுக்கு, வாஜ்பாய் பிப்ரவரி 20 அன்று [[லாகூர்]] வருவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டது என்று பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்.<ref>{{cite web| url=http://www.expressindia.com/fullstory.php?newsid=71008|title=Kargil planned before Vajpayee's visit: Musharraf|work=Indian Express|publisher=|date=2006-07-13 |accessdate=2009-05-20}}</ref>
 
 
==போரின் போக்கு==
===மோதல் சம்பவங்கள்===
 
{| class="wikitable"
|-
! style="width:10%;"| '''தேதி (1999)
! style="width:90%; text-align:center;"| '''சம்பவம்
|-
| மே 3 || கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவியிருப்பது அங்குள்ள மேய்ப்பர்கள் மூலம் அறியப்பட்டது
|-
| மே 5 || [[இந்தியத் தரைப்படை|இந்திய இராணுவம்]] கார்கில் பகுதிக்கு ரோந்துக் குழுவை அனுப்பியது; பாகிஸ்தான் வீரர்கள், ஐந்து இந்திய வீரர்களைச் சிறைபிடித்து சித்திரவதை செய்து கொன்றனர்.
|-
| மே 9 || பாகிஸ்தான் குண்டு வீச்சில் கார்கிலில் இருந்த ஆயுதக் கிடங்கு சேதம் அடைந்தது
|-
| மே 10 || திரஸ், கக்சர் மற்றும் முஷ்கோ பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
|-
| மே மாத மத்தி || இந்திய இராணுவம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து படைகளை கார்கில் பகுதிக்கு அனுப்பியது
|-
| மே 26 || ஊடுருவியவர்களுக்கெதிரான வான்வழித் தாக்குதலை இந்திய வான்படைத் தொடங்கியது
|-
| மே 27 || இந்திய வான்படை மிக்-21 மற்றும் மிக்-27 ஆகிய இரண்டு போர் விமானங்களை இழந்தது; வான்படைலெப்டினன்ட் நசிகேதாவை பாகிஸ்தான் வீரர்கள் போர் கைதியாகப் பிடித்துச் சென்றனர்
|-
| மே 28 || இந்திய வான்படையின் எம்.ஐ-17 என்ற போர் விமானம் பாகிஸ்தான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது; அதனுள் இருந்த நான்கு வீரர்களும் உயிரிழந்தனர்
|-
| சூன் 1 || பாகிஸ்தான் தனது தாக்குதலை பலப்படுத்தியது; இந்தியாவின் NH 1A தேசிய நெடுஞ்சாலை குண்டுவீசித் தாக்கப்பட்டது
|-
| சூன் 5 || ஊடுருவலில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பது, இறந்துபோன பாகிஸ்தான் விரர்களிடமிருந்து இந்திய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியானது
|-
| சூன் 6 || இந்திய இராணுவம் கார்கிலில் பெரும் தாக்குதலைத் தொடங்கியது
|-
| சூன் 9 || படாலிக் பகுதியில் இரு முக்கிய நிலைகளை இந்திய இராணுவம் கைப்பற்றியது
|-
| சூன் 11 || சீனா சென்றிருந்த பாகிஸ்தான் இராணுவ தளபதி [[பெர்வேஸ் முஷாரஃப்|பர்வேஸ் முஷாரஃபுக்கும்]] ராவல்பிண்டியில் இருந்த பாகிஸ்தானின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அஸிஸ் கானுக்கும் நடந்த உரையாடலை இந்தியா இடைமறித்து, ஊடுருவலில் பாகிஸ்தான் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்தது
|-
| சூன் 13 || இந்திய இராணுவம், திரஸிலுள்ள தோலோலிங் பகுதியைக் கைப்பற்றியது
|-
| சூன் 15 || அப்போதைய அமெரிக்க அதிபர் [[பில் கிளின்டன்]], பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கார்கிலில் இருந்து படைகளைத் திரும்பப்பெறுமாறு வலியுருத்தினார்
|-
| சூன் 29 || இந்திய இராணுவம், இரண்டு முக்கிய நிலைகளான புள்ளி 5060 மற்றும் புள்ளி 5100 ஆகியவற்றைக் கைப்பற்றியது
|-
| சூன் 2 || இந்திய இராணுவம் கார்கிலில் மும்முனைத் தாக்குதலைத் தொடங்கியது
|-
| சூன் 4 || இந்திய இராணுவம் பதினோரு மணிநேரப் போராட்டத்திற்குப்பின் டைகர் ஹில் பகுதியை மீட்டது
|-
| சூன் 5 || இந்திய இராணுவம் திரஸ் பகுதியை முழுமையாக மீட்டது. கிளின்டனுடனான சந்திப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெற ஒப்புக்கொண்டார்
|-
| சூன் 7 || இந்திய இராணுவம் படாலிக் பகுதியிலுள்ள ஜுபார் என்ற இடத்தைக் கைப்பற்றியது
|-
| சூன் 11 || பாகிஸ்தான் இராணுவம் கார்கிலில் இருந்துத் திரும்பத் தொடங்கியது; இந்திய இராணுவம் படாலிக் பகுதியில் முக்கிய முகடுகளைக் கைப்பற்றியது
|-
| சூன் 14 || இந்திய பிரதமர் [[அடல் பிகாரி வாஜ்பாய்]], [[விஜய் நடவடிக்கை]] வெற்றி அடைந்ததாக அறிவித்தார்; பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்திய அரசு பல நிபந்தனைகளை முன்வைத்தது
|-
| சூன் 26 || கார்கில் பிரச்சனை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியவர்கள் கார்கிலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது
|}<ref>{{cite web|url=http://www.tribuneindia.com/2011/20110726/edit.htm#6 |title=The Tribune, Chandigarh, India – Opinions |publisher=Tribuneindia.com |date= |accessdate=2012-06-15}}</ref><ref>Kargil War: Need to learn strategic lessons General (Retd) V P Malik, India Tribune article 26/7/2011</ref><ref>{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/387702.stm |title=Kargil conflict timeline |publisher=BBC News |date=1999-07-13 |accessdate=2012-06-15}}</ref>
 
 
கார்கில் போரை மூன்று முக்கிய கட்டங்களாகப் பகுக்கலாம். முதல் கட்டம், பாகிஸ்தான் தனது படை வீரர்களை இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் எல்லைக்குள் அனுப்பி முக்கிய நிலைகளை ஆக்கிரமித்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலை NH1, பாகிஸ்தான் இராணுவத்தால் தாக்கக்கூடிய எல்லைக்குள் வந்தது. இரண்டாம் கட்டம், பாகிஸ்தான் இராணுவம் கார்கிலில் ஊடுருவியிருப்பதை இந்திய இராணுவம் கண்டுபிடித்து அவர்களுக்கெதிராக எல்லையில் படைகளைக் குவித்தது. இறுதிக் கட்டம், இந்திய இராணுவத்தினர் பாகிஸ்தான் படைகளுடன் போரிட்டு அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல முக்கிய நிலைகளைத் தங்கள் வசமாக்கினர். சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் தனது படைகளைக் கார்கிலில் இருந்துத் திரும்பப்பெற்றது.
 
===பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு===
[[படிமம்:Kargil.map.buildup.gif|thumb|போரின் நிகழ்வுகள்]]
 
குளிர் காலங்களில் பனி படர்ந்த மலைகளில் உரைய வைக்கும் குளிர் நிலவும் என்பதால் இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைக் கோட்டுக்கருகில் இருக்கும் தத்தம் இராணுவ நிலைகளைத் தற்காலிகமாக காலி செய்து பின் வாங்கிச் செல்வது வழக்கம். [[குளிர்காலம்]] முடிந்த பின் காலியாக விடப்பட்ட தத்தம் இராணுவ நிலைகளை மீண்டும் உபயோகப்படுத்துவர். ரோந்துப் பணிகள் வழக்கம் போல் தொடரும்.
 
பிப்ரவரி 1999 இல் பாகிஸ்தான் இராணுவம் தனது இராணுவ நிலைகளோடு சேர்த்து, கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் இருந்த இந்தியாவின் இராணுவ நிலைகளையும் சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டது.<ref>{{cite news| url=http://www.time.com/time/printout/0,8816,991457,00.html|title=How I Started A War|date=1999-07-12|work=Time]]|publisher=| accessdate=2009-05-20}}</ref> பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த வடக்குக் காலாட்படைப் பிரிவு மற்றும் சிறப்பு சேவைகள் குழுவைச் சேர்ந்த வீரர்கள்<ref name="Memoirs">{{cite book|author=Pervez Musharraf | title=In the Line of Fire: A Memoir | publisher=Free Press | year=2006 | isbn=0-7432-8344-9}}</ref><ref>{{cite web| url=http://orbat.com/site/history/historical/pakistan/nli_kargil1999.html|title=The Northern Light Infantry in the Kargil Operations|work=|publisher=| accessdate=2009-05-20}} by Ravi Rikhye 1999 August 25, 2002 – ORBAT</ref> இந்திய நிலைகளை ஆக்கிரமித்து அவற்றுக்கருகில் இராணுவ தளங்களை ஏற்படுத்தினர். பாகிஸ்தான் படையினருக்கு காஷ்மீரி [[கரந்தடிப் போர்|கொரில்லாக்களும்]] [[ஆப்கானித்தான்|ஆப்கான்]] [[கூலிப்படை]]யினரும் உதவியதாகக் கூறப்படுகிறது.<ref name="Militant">It is estimated that around 2,000 "Mujahideen" might have been involved as Musharraf stated on July 6, 1999 to Pakistan's ''The News''; [http://www.atimes.com/ind-pak/AG08Df01.html online article] in the Asia Times quoting the General's estimate. An Indian Major General(retd) too puts the [http://www.rediff.com/news/1999/jul/15ashok.htm number of guerrillas at 2,000] apart from the NLI Infantry Regiment.</ref>
 
பாகிஸ்தான் படையினர், முஷ்கோ பள்ளத்தாக்கு, திரஸிலுள்ள மார்ப்போ லா முகடுகள், கார்கிலுக்கு அருகில் உள்ள கக்சர், [[சிந்து ஆறு|சிந்து நதிக்குக்]] கிழக்கில் உள்ள படாலிக் பகுதி, எல்லையோரத்தில் உள்ள சோர்பாட்லா பகுதி மற்றும் [[சியாச்சென் பனியாறு|சியாச்சென்]] பனி மலைக்குத் தெற்கேயுள்ள துர்தோக் ஆகிய பகுதிகளில் ஊடுருவினர்.
 
===எல்லையில் இந்தியப் படைகள் குவிப்பு===
இந்திய ரோந்துப் படையினர் பாகிஸ்தான் ஆக்கிரமித்தப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கவில்லை. பாகிஸ்தானின் குண்டு வீச்சுகள் இந்தியப் படையினரின் கவனத்தை ஈர்த்து, ஊடுருவும் பாகிஸ்தான் படையினருக்குத் திரைமறைவாக செயல்பட்டது. இந்த இரண்டு காரணங்களால் பாகிஸ்தானின் ஊடுருவலை இந்தியப் படையினர் கவனிக்கத் தவறினர். ஆனால் மே மாதத்தின் இரண்டாம் வாரத்தில், ஆடு மேய்ப்பவர்களிடமிருந்து கிடைத்த ஊடுருவல் குறித்தத் தகவலால் படாலிக் எல்லைப்பகுதியில், கேப்டன் சௌரப் காலியா<ref>{{cite web|url=http://www.hindu.com/2009/07/06/stories/2009070655650700.htm |title=Saurabh Kalia's parents waging a lone battle to highlight war crimes |publisher=Hindu.com |date= |accessdate=2012-06-15}}</ref> தலைமையில் இந்தியப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இவர்களை ஊடுருவியிருந்த பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்கினர். இதன்மூலம் எல்லையில் ஊடுருவல் நடந்திருப்பது உறுதிபடுத்தப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் ஊடுருவியவர்கள் [[ஜிகாத்|ஜிகாதிகளாகத்தான்]] இருக்கக்கூடுமெனவும் ஓரிரு நாட்களில் அவர்களை அப்புறப்படுத்திவிட முடியும் எனவும் [[இந்திய இராணுவம்|இந்திய இராணுவத்தினர்]] நினைத்தனர். பின்னர், எல்லைக்கோடு நெடுகவும் ஊடுருவல் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டதும், தாக்குதல் எதிர்பார்க்கப்பட்டதைவிட பல மடங்கு பெரிதாகத் திட்டமிடப்பட்டிருப்பது இந்தியப் படையினருக்குப் புலனானது. ஆக்கிரமிப்பாளர்கள், 130 சதுர கி.மீ முதல் 200 சதுர கி.மீ வரை இந்திய நிலப்பரப்பில் ஊடுருவியதாக அறியப்படுகிறது.<ref name="Qadir" /><ref name="Memoirs" /><ref>[http://www.ccc.nps.navy.mil/research/kargil/war_in_kargil.pdf War in Kargil] (PDF) [http://www.tni.org/archives/bidwai/danger.htm Islamabad Playing with Fire by Praful Bidwai] – The Tribune, 7 June 1999</ref>
 
[[இந்திய அரசு]], ஆக்கிரமிப்புக்காரர்களுக்குப் பதிலடி கொடுக்க [[விஜய் நடவடிக்கை]]யைத் தொடங்கியது. எல்லையில் 2,00,000 இந்திய போர் வீரர்களைக் குவிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் [[கார்கில்]] நகரம் கரடு முரடான மலைப் பகுதியில் அமைந்திருந்ததால் பெரிய படைகளை அங்கு கொன்டு செல்ல முடியாமல் போனது. எனவே இந்திய படையினர் சிறு குழுக்களாக முன்னேறினர். இந்திய இராணுவத்தைச் சேர்ந்த<ref>{{cite web| url=http://www.bharat-rakshak.com/MONITOR/ISSUE4-6/malik.html|last=Gen VP Malik|title=Lessons from Kargil|work=|publisher=| accessdate=2009-05-20}}</ref> 20,000 வீரர்களோடு இணைந்து சில ஆயிரம் [[இந்திய துணை இராணுவப் படைகள்|இந்திய துணை இராணுவ வீரர்களும்]] [[இந்திய வான்படை]]யும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இந்த இராணுவ நடவடிக்கையில் கார்கில்-திரஸ் பகுதிகளில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 30,000 ஆகும். போரின் உச்ச நிலையில் பாகிஸ்தான் படையைச் சேர்ந்த 5,000 வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.<ref name = "Globalsecurity" /><ref name="Qadir" /><ref name="Militant" />
 
[[இந்தியத் தரைப்படை]]யினருக்கு உதவும் வகையில் இந்திய வான்படை, ''சஃபேத் சாகர்'' நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆனால் அப்போது நிலவிய [[வானிலை]] மற்றும் போர் நடைபெற்ற மலைகளின் உயரம் ஆகியவை காரணமாக இந்நடவடிக்கையின் பயன் இந்தியத் தரைப்படையினருக்கு முழுமையாகக் கிட்டவில்லை.
 
====கடற்படைத் தாக்குதல்====
''தல்வார் நடவடிக்கையின்''<ref>{{cite news|title=Sea Power|url=http://www.forceindia.net/SeaPower.aspx|accessdate=17 August 2013|newspaper=Force India}}</ref><ref>{{cite web|last=Azam Khan|first=Cdr (Retd) Muhammad|title=Exercise Seaspark—2001|url=http://www.defencejournal.com/2001/apr/seaspark.htm|publisher=Defence Journal|accessdate=17 August 2013}}</ref><ref>{{cite news|title=Indian Navy celebrates its silent Kargil victory|url=http://www.dnaindia.com/india/12113/report-indian-navy-celebrates-its-silent-kargil-victory|accessdate=17 August 2013|newspaper=DNA India|date=30 November 2005}}</ref><ref>{{cite news|first=General Ashok K Mehta|title=The silent sentinel|url=http://www.rediff.com/news/1999/aug/05ashok.htm|accessdate=17 August 2013|newspaper=Rediff|date=5 August 2005}}</ref> கீழ் [[இந்தியக் கடற்படை]], பாகிஸ்தான் துறைமுகங்களை (முக்கியமாக, [[கராச்சி]] துறைமுகத்தை)<ref>{{cite web| url=http://www.carnegieendowment.org/files/CP65.Grare.FINAL.pdf|title=The Resurgence of Baluch nationalism|first=Frédéric |last=Grare|work=|format=PDF|publisher=Carnegie Endowment for International Peace| accessdate=2009-05-20}}</ref> முற்றுகையிட தயாரானது. இந்தியக் கடற்படையின் கிழக்கு மற்றும் மேற்கு படைப்பிரிவுகள் இனைந்து, வடக்கு [[அரபிக்கடல்|அரபிக்கடலில்]] தீவிரமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டன. பாகிஸ்தானின் கடல் வர்த்தகம் நசியும் அபாயம் ஏற்பட்டது. போரின் போது பாகிஸ்தான் பிரதமாரக இருந்த [[நவாஸ் ஷெரீப்|நவாஸ் ஷெரீஃப்]], பாகிஸ்தானிடம் அப்போது ஆறு நாட்களுக்குத் தேவையான எரிபொருட்கள் மட்டுமே இருந்தன என்று பின்னாளில் கூறினார்.<ref name = "Globalsecurity" /><ref>{{cite book|first=Bruce Riedel|title=Avoiding Armageddon |publisher= HarperCollins |isbn=9350299941 |url = http://www.telegraphindia.com/1130428/jsp/7days/story_16836328.jsp#.Ug7HaZIwemo}}</ref><ref>{{cite book|last=Lambeth|first=Benjamin|title=Airpower at 18,000’: The Indian Air Force in the Kargil War|year=2012|publisher=Carnegie Endowment for International Peace|page=54|url=http://carnegieendowment.org/files/kargil.pdf}}</ref><ref>{{cite book|last=Hiranandani|first=G.M.|title=Transition to Guardianship: The Indian Navy 1991-2000|year=2009|publisher=Lancer Publishers|location=New Delhi|isbn=1935501267|url=http://books.google.co.in/books?id=w2snz5Cfb0gC&pg=PA1924&lpg=PA1924&dq=Transition+to+Guardianship:+The+Indian+Navy+1991-2000,+by+Vice+Adm+GM+Hiranandani&source=bl&ots=et30EfPlkl&sig=dfDQ4lRKtP_CowR6cTw6aw-uaRY&hl=en&sa=X&ei=uudqUtX9EM2Trge_94CYAg&redir_esc=y#v=snippet&q=a%20leander%20class%20frigate%20barrier&f=false}}</ref>
 
===பாகிஸ்தான் நிலைகளின் மீது இந்தியத் தாக்குதல்===
காஷ்மீர் நகரம், [[இமயமலை|இமய மலைத்தொடருக்கு]] மிக அருகில் அமைந்துள்ளதால் அந்நகர் வழியாகச் செல்லும் [[சிறிநகர்|ஸ்ரீநகரையும்]] [[லே]]வையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH 1D கூட இரு வழிச்சாலையாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சாலை பாகிஸ்தான் படையினரால் குண்டு வீசித் தாக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் படைகளை எல்லைப் பகுதிகளுக்குக் கொண்டு செல்வது இந்திய இராணுவத்திற்கு சவாலான காரியமாக அமைந்தது. அவ்வழியாகச் சென்ற இந்திய படையினர் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு உள்ளாயினர்.<ref name="NLI">{{cite web| url=http://www.dailytimes.com.pk/default.asp?page=story_5-5-2003_pg7_14|title=Indian general praises Pakistani valour at Kargil|work=Daily Times, Pakistan|date=2003-05-05|publisher=| accessdate=2009-05-20}}</ref><ref>Kashmir in the Shadow of War By Robert Wirsing Published by M.E. Sharpe, 2003 ISBN 0-7656-1090-6 pp36</ref> NH 1D தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து பாகிஸ்தான் படைகளால் தாக்கப்பட்டு வந்ததால் லே பகுதி மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.
 
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்காரர்கள் கையெறி குண்டுகள், குண்டு எறியும் துப்பாக்கிகள், விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டிருந்தனர். மேலும், பல நிலைகளில் மிதிவெடிகள் பொருத்தப்பட்டிருந்தன. சுமார் 8,000 [[மிதிவெடி]]களை அகற்றியதாக இந்தியா போருக்குப் பின் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.icbl.org/lm/2000/india |title=Landmine monitor – India |publisher=Icbl.org |date= |accessdate=2012-06-15}}</ref> பாகிஸ்தான், இந்தியப் படைகளின் நடமாட்டத்தை ஆளில்லா உளவு விமானங்கள் மூலமாகவும் அமெரிக்காவிடமிருந்து வாங்கிய [[கதிரலைக் கும்பா]]க்கள் மூலமாகவும் கண்காணித்தது.<ref>[http://indiaenews.com/2006-07/15112-indian-army-gets-hostile-weapon-locating-capability.htm Indian Army gets hostile weapon locating capability]{{Dead link|url=http://indiaenews.com/2006-07/15112-indian-army-gets-hostile-weapon-locating-capability.htm|date=November 2010|date=June 2009}}</ref> இந்தியப் படைகளின் முதன்மையான பணி, NH 1D தேசிய நெடுஞ்சாலையைப் பாதுகாப்பதாக இருந்தது. ஏனெனில் இந்தியப் படைகள் முன்னேறவும், உதவிப் படைகள் வந்து சேரவும் அந்த சாலை முக்கியமானதாக இருந்தது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்த பல இராணுவ நிலைகள் அந்த சாலைக்கருகிலேயே அமைந்திருந்தன. எனவே அந்த சாலையைப் பாதுகாக்க அதனருகில் இருந்த நிலைகளை மீட்பது இந்தியப் படைகளுக்கு முக்கியமான பணியாக இருந்தது.
 
நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்த மலை முகடுகளைக் கைப்பற்றுவது இந்திய இரானுவத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது. எனவே இந்தியப் படைகள், டைகர் ஹில், திரஸிலிருந்த தோலோலிங் பகுதி ஆகியவற்றை முதலில் தாக்கின.<ref>Managing Armed Conflicts in the 21st Century By Adekeye Adebajo, Chandra Lekha Sriram Published by Routledge pp192,193</ref> அடுத்ததாக [[சியாச்சென் பனியாறு|சியாசென் பனிமலைக்கு]] அருகில் இருந்த படாலிக்-துர்தோக் பகுதிகளை இந்தியப் படைகள் தாக்கின. NH 1D தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்திருந்த புள்ளி 4590 மற்றும் திரஸ் பகுதியின் மிக உயரமான புள்ளி 5353 ஆகியவை பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்திருந்த முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளாகும். இப்பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் படையினரால் NH 1D தேசிய நெடுஞ்சாலையை எளிதாகத் தாக்க முடிந்தது.<ref>{{cite news|first=Praveen|last=Swami| url=http://www.hindu.com/2004/06/30/stories/2004063006391100.htm|title=Commander ordered capture of Point 5353 in Kargil war|work=The Hindu|publisher=|date=2004-06-30|accessdate=2009-05-20|location=Chennai, India}}</ref> இந்தியப் படையினர், சூன் 14 அன்று புள்ளி 4590 பகுதியைப் பாகிஸ்தான் படையினரிடமிருந்துக் கைப்பற்றினர். இம்முயற்சியில்தான் இந்தியப் படையினர் கார்கில் போரிலேயே மிக அதிகமான உயிரிழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது.<ref>The State at War in South Asia By Pradeep Barua Published by U of Nebraska Press Page 261</ref> சூன் மாத மத்தியில் அநேகமாக அனைத்து நிலைகளையும் இந்தியப் படையினர் கைப்பற்றிவிட்டபோதிலும் போரின் இறுதி வரை திரஸ் பகுதிக்கு அருகில் இருந்த நெடுஞ்சாலையின் சில பகுதிகள் தொடர்ந்து பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு உள்ளானது.
 
[[படிமம்:Sheeju mig21.JPG|thumb|left|கார்கில் போரில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட இந்திய வான்படையின் மிக்-21 ரக போர் விமானம்]]
 
NH 1D தேசிய நெடுஞ்சாலை இந்தியப் படையினர் வசம் வந்த பிறகு, பாகிஸ்தான் படையினரை எல்லைக் கோட்டுக்கு அப்பால் பின்வாங்க வைப்பதில் இந்திய இராணுவத்தின் கவனம் திரும்பியது. தோலோலிங் யுத்தத்தின் முடிவில் இந்தியாவின் கை ஓங்கத்தொடங்கியது. தோலோலிங் யுத்தத்தில் பாகிஸ்தான் படையினருக்குக் காஷ்மீர் போராளிகள் உதவினர். பாகிஸ்தானியரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சில இராணுவ நிலைகள் பலமாக எதிர்த்து நின்றன. டைகர் ஹில் பகுதி (புள்ளி 5140), போரின் இறுதிக் கட்டத்தில்தான் வீழ்ந்தது. டைகர் ஹில்லில் பாகிஸ்தான் வீரர்கள் பதுங்கியிருந்துத் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் பலத்த இழப்புகள் ஏற்பட்டன. இந்தியத் தரப்பில் ஐந்து வீரர்களும், பாகிஸ்தான் தரப்பில் பத்து வீரர்களும் டைகர் ஹில்லில் நடந்த யுத்தத்தில் உயிரிழந்தனர். பல யுத்தங்கள் முன்னர் அறியப்படாத மலைகளின் உச்சியில் நடந்தன. பெயரற்ற அந்த மலைகளை அடையாளப் படுத்த புள்ளி எண்களே பயன்படுத்தப்பட்டன.
 
போரின் உச்சத்தில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற பீரங்கிகளை இந்திய இராணுவம் போர்களத்தினுள் கொண்டு வந்தது. அவ்வகையில் போஃபர்ஸ் பீரங்கிகள் கார்கில் போரில் முக்கியப் பங்காற்றின. இந்தியப் படையினர் போஃபர்ஸ் பீரங்கியைப் பயன்படுத்தித் தங்கள் தாக்குதலை விரிவாக்கினர். ஆனால் பல இடங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக அவற்றை உபயோகப்படுத்த முடியாமல் போனது.
 
இடப்பற்றாக்குரை நிலவிய இடங்களில் இந்திய வான்படை [[வான் போர்|வான்வழித் தாக்குதல்]] நடத்தியது. இந்திய வான்படையைச் சேர்ந்த மிராஜ் 2000எச் ரக போர் விமானங்கள், பாகிஸ்தான் படையினரின் பதுங்குக்குழிகள் மீது குண்டு வீச பயன்படுத்தப்பட்டன.<ref name = "Globalsecurity" /> இந்திய வான்படை, [[மிக்-27]] ரக போர் விமானமொன்றை இயந்திரக் கோளாரால் இழந்தது. இந்திய வான்படையைச் சேர்ந்த [[மிக்-21]] ரக போர் விமானமொன்று பாகிஸ்தான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.<ref name="jet">{{cite news|url=http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/354120.stm |title=India loses two jets |publisher=BBC News |date=1999-05-27 |accessdate=2012-06-15}}</ref> இந்திய வான்படையைச் சேர்ந்த எம்.ஐ-8 ரக உலங்கு வானூர்தி ஒன்று, பாகிஸ்தான் படையினரின் [[நில வான் ஏவுகணை]]த் தாக்குதலுக்குப் பலியானது.
 
[[படிமம்:Dassault Mirage 2000.jpg|thumb|கார்கில் போரில் இந்திய வானபடையால் மிராஜ் 2000எச் ரக விமானங்கள் பாகிஸ்தான் படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டன]]
 
மே 27, 1999 அன்று வான்படை லெப்டினன்ட் நசிகேதா ஓட்டிச் சென்ற விமானம், படாலிக் பகுதியில் இயந்திரக் கோளாரால் வெடித்ததால் அவ்விமானத்திலிருந்து அவர் [[வான்குடை]] மூலம் வெளியேறினார். அவரைத் தேடிச் சென்ற சுகுவாட்ரன் லீடர் அஜய் அஹுஜாவின் விமானம் பாகிஸ்தான் படையினரின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலியானது. விமானத்திலிருந்து அவர் வான்குடை மூலமாகத் தப்பினாலும், அவரை பாகிஸ்தான் வீரர்கள் சிறைபிடித்து, சித்தரவதை செய்து கொன்றனர்.<ref name = "Globalsecurity" />
 
பல முக்கிய இரானுவ நிலைகளில் இந்தியா, பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல் ஆகியவற்றைக் கையாண்டாலும், பாகிஸ்தான் படையினர் தாக்குதல் எல்லைக்கு அப்பால் இருந்ததால் அவர்களை பின்வாங்கச் செய்வது கடினமான காரியமாக அமைந்தது. எனவே, இந்திய இராணுவம் பாகிஸ்தான் படையினருக்கு எதிராக நேரடித் தாக்குதல்களை நடத்தியது. போர்களம் உயரமான மலைகளின் (18,000 அடி) உச்சியில் அமைந்திருந்தமையால் அவ்வகைத் தாக்குதல்களில் இந்தியப் படைகளால் மிக மெதுவாகவே முன்னேற முடிந்தது. பகல் நேர வெளிச்சத்தில் தாக்குவது அபாயகரமானதால், இந்தியப் படையினர் இரவின் இருளில் ஆனால் கடும் குளிரில் தாக்குதல் நடத்தினர். நேரடியாகத் தாக்குவதற்கு பதிலாக, பாகிஸ்தான் படையினரின் போக்குவரத்து வழிகளை அடைத்துக் கொண்டு முற்றுகை இடும் [[போர் உத்தி]]யும் ஆராயப்பட்டது. ஆனால் இதைச் செய்வதானால் இந்தியப் படையினர் எல்லை தாண்டி, பாகிஸ்தான் பகுதிக்குள் செல்ல வேண்டி இருந்தது. போர் மேலும் பெரிதாகும் என்பதாலும் சர்வதேச நாடுகளின் ஆதரவை இழக்க நேரிடும் என்பதாலும் இந்தியா அந்த முறையைக் கையாளவில்லை.
 
போர் ஆரம்பித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியப் படையினர் பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமிப்புக்காரர்களிடமிருந்து மீட்டனர்.<ref>{{cite web| url=http://www.lrb.co.uk/v23/n08/ali_01_.html|title=Bitter Chill of Winter|work=Tariq Ali, London Review of Books|publisher=| accessdate=2009-05-20}}</ref><ref>{{cite book | author=Colonel Ravi Nanda | title=Kargil : A Wake Up Call | publisher=Vedams Books | year=1999 | isbn=81-7095-074-0}} [https://www.vedamsbooks.com/no14953.htm Online summary of the Book]</ref> அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின் படி, 75% முதல் 80% வரையிலான ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் இந்தியாவின் வசம் வந்திருந்தன.<ref name="VP Malik" />
 
===இறுதிக் கட்டம்===
கார்கிலில் மோதல்கள் ஆரம்பமானவுடன், பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வர [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவின்]] உதவியை நாடியது. மிகப்பெரிய அளவில் போர் வெடிக்கும் என்ற அச்சத்தில், பாகிஸ்தான் தனது [[அணு குண்டு|அணு ஆயுதங்களை]] ஆயத்தப்படுத்தியிருக்கிறது என்பதை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்து, அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளின்டனுக்கு அவரது உதவியாளர் புரூஸ் ரீடல் மூலமாகத் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் [[பில் கிளின்டன்]], பாகிஸ்தான் தனது படைகளை இந்தியப் பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளும் வரை இப்பிரச்சனையில் தலையிட மறுத்துவிட்டார்.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1989886.stm |title=Pakistan 'prepared nuclear strike' |publisher=BBC News |date=2002-05-16 |accessdate=2012-06-15}}</ref> வாஷிங்டன் ஒப்பந்தப்படி, சூலை 4 ஆம் தேதி, பாகிஸ்தான் பிரதமர் [[நவாஸ் ஷெரீப்|நவாஸ் ஷெரீஃப்]] தனது படைகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்ட பின் போர் அநேகமாக முடிவுற்ற போதிலும், சில இடங்களில் பாகிஸ்தான் படைகள் இந்தியப் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்ப்ட்ட நிலைகளிலிருந்து வெளியேறாமல் இருந்தனர். மேலும் பாகிஸ்தான் படையினருக்கு ஆதரவாக போரிட்ட [[ஜிகாத்]] அமைப்புகள் பாகிஸ்தானின் பின்வாங்கும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன; அவை போரட்டத்தைத் தொடர்ந்தன.<ref>{{cite news| url=http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/386537.stm|title=Pakistan and the Kashmir militants|work=BBC News|publisher=| accessdate=2009-05-20 | date=1999-07-05}}</ref>
 
இந்திய இராணுவம், தனது இறுதித் தாக்குதலை சூலை மாதத்தின் இறுதி வாரத்தில் தொடங்கியது. திரஸ் பகுதியில் இருந்து பாகிஸ்தான் படையினர் முழுமையாக வெளியேற்றபட்ட பின், சூலை 26 ஆம் தேதி போர் முற்றிலும் முடிவுக்கு வந்தது. அந்த நாள் இந்தியாவில் ''கார்கில் வெற்றி நாள்'' என்று இந்தியாவில் ஆண்டுதோரும் கொண்டாடப்படுகிறது. போரின் முடிவில், 1972 ஆம் ஆண்டு சிம்லா உடன்படிக்கையில் இந்தியாவின் பகுதிகள் என வரையறுக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
 
==உலகத்தின் பார்வையில்==
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை பாகிஸ்தானியப் படைகள் தாண்டி இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்ததால் சர்வதேச நாடுகள் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தன.<ref>{{cite book | author=Hassan Abbas|title=Pakistan's Drift Into Extremism: Allah, The Army, And America's War On Terror|publisher=M.E. Sharpe|year=2004|isbn=0-7656-1497-9}} Pg 173; [http://www.ipcs.org/whatsNewArticle11.jsp?action=showView&kValue=1647&status=article&mod=b Revisiting Kargil: Was it a Failure for Pakistan's Military?, IPCS]</ref> பாகிஸ்தான் அரசு, பழியை காஷ்மீர் போராளிகள் மீது சுமத்த முயன்றாலும் அது பலனளிக்கவில்லை.<ref name="dawn">{{cite web| url=http://www.dawn.com/weekly/cowas/990711.htm|title=Lesson learnt?|work=dawn|date=2006-07-24|publisher=| accessdate=2009-08-02}}</ref> போர் ஆய்வாளர்கள், மிகவும் உயரமான மலைப்பகுதிகளை ஆக்கிரமிப்பது என்பது தேர்ந்த பயிற்சியுடைய இராணுவத்தினரால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று; அதை, மிகக் குறைவான பயிற்சியுடைய போராளிகளால் செய்ய இயலாதது என்று கூறினர். மேலும் பாகிஸ்தான் அரசு கார்கில் பிரச்சனையில் தனது ஈடுபாட்டை மறுத்து வந்தாலும், இரு பாகிஸ்தான் போர் வீரர்களுக்கு, கார்கில் போரில் தீரத்துடன் போரிட்டதற்காக, பாகிஸ்தானின் மிக உயரிய வீர விருதான ''நிஷான்-இ-ஹைதர்'' விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி 90 பாகிஸ்தான் படை வீரர்களுக்கு (பெரும்பான்மையானவர்கள், இறந்தவர்கள்) பல்வேறு வீர விருதுகள், கார்கில் போரில் அவர்களது சிறந்த செயல்பாட்டிற்காக வழங்கப்பட்டது பாகிஸ்தான் கார்கில் போரில் ஈடுபட்டதை உறுதி செய்வதாக அமைந்தது. பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதிக்கும் பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கும் நடந்த [[தொலைபேசி]] உரையாடலை இந்தியா இடைமறித்து பதிவு செய்தது.<ref>{{cite web|url=http://www.india-today.com/kargil/audio.html|title=Transcripts of conversations between Lt Gen Mohammad Aziz, Chief of General Staff and Musharraf|work=India Today|publisher=| accessdate=2009-05-20 |archiveurl = http://web.archive.org/web/20080701220255/http://www.india-today.com/kargil/audio.html |archivedate = July 1, 2008}}</ref> அதில் அவர்கள் பேசியதிலிருந்து கார்கிலை ஆக்கிரமித்திருப்பது பாகிஸ்தான் படையினரே என்பது உறுதியானது. ஆனால் அதையும் பாகிஸ்தான் மறுத்தது. கார்கில் பிரச்சனை குறித்து விமர்சிக்கப்பட்ட போது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடே சர்ச்சைக்குரியது என்று கூறியபோதும், கார்கில் பிரச்சனையை காஷ்மீர் பிரச்சனையோடு இணைத்து சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரியபோதும் பாகிஸ்தான் படைகள்தான் கார்கிலில் ஊடுருவியது என்பது வெட்டவெளிச்சமானது.<ref>{{cite web|url=http://www.atimes.com/ind-pak/AG07Df01.html |title=U.S. brokers Kargil peace but problems remain |publisher=Atimes.com |date=1999-07-07 |accessdate=2012-06-15}}</ref><ref name="ASEAN">{{cite web| url=http://www.tribuneindia.com/1999/99jul25/world.htm#6|title=ASEAN backs India's stand|work=The Tribune|date=2006-07-24|publisher=| accessdate=2009-05-20}}</ref>
 
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்தபோது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அமெரிக்காவின் ஆதரவைக் கோருவதற்காக அமெரிக்க அதிபர் பில் கிளின்டனை சந்தித்தார். ஆனால் கிளின்டன், நவாஸ் ஷெரீஃபை கண்டித்ததோடு, பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெருமாறு வலியுறுத்தினார்.<ref>{{cite book | author=Bill Clinton | title=My Life (Bill Clinton autobiography)|My Life | publisher=Random House | year=2004|isbn=0-375-41457-6}}, Pg 865</ref><ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/399897.stm Dialogue call amid fresh fighting -] – BBC News</ref> பில் கிளின்டன் தனது சுய சரிதையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
 
<blockquote>பாகிஸ்தான் பிரதமரின் செயல்பாடுகள் அதிருப்தியளிப்பதாக இருந்தன. இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக லாகூர் வந்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பிய சில மாதங்களில் பாகிஸ்தான் இந்தியா மீது படையெடுத்தது அந்த அமைதிப் பேச்சுவார்தைகளை அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டது. இருந்தும் கார்கில் பிரச்சனையைக் காரணமாகக் கொண்டு பெரும் போர் தொடங்காமல் விட்டது இந்தியாவின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.</blockquote>
 
கொலோன் மாநாட்டில் [[ஜி8]] நாடுகள், பாகிஸ்தானின் செயலை வன்மையாகக் கண்டித்ததோடு மட்டுமின்றி இந்தியாவுக்கு தங்கள் ஆதரவையும் தெரிவித்தன. [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியமும்]] பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி வந்து இந்திய பகுதிகளை ஆக்கிரமித்ததைக் கண்டித்தது.<ref>{{cite news| url=http://www.cnn.com/WORLD/asiapcf/9907/02/kashmir.pakistan/|title=India encircles rebels on Kashmir mountaintop|work=CNN|publisher=| accessdate=2009-05-20 |archiveurl = http://web.archive.org/web/20080614150423/http://www.cnn.com/WORLD/asiapcf/9907/02/kashmir.pakistan/ |archivedate = June 14, 2008}}CNN</ref> பாகிஸ்தானின் நீண்டகால நட்பு நாடான [[சீனா]]வும், படைகளைத் திரும்பப் பெறுமாரு பாகிஸ்தானை வலியுறுத்தியது. [[ஆசியான்]] போன்ற பல கூட்டமைப்புகள் கார்கில் பிரச்சனையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன.<ref name="ASEAN" />
 
சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டார். பில் கிளின்டனும் நவாஸ் ஷெரீஃபும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அமைதியான முறையில் [[காஷ்மீர் பிரச்சினை|காஷ்மீர் பிரச்சனை]] தீர்க்கப்பட வேண்டுமென்று நவாஸ் ஷெரீஃப் கூறினார்.<ref>{{cite news| url=http://www.cnn.com/WORLD/asiapcf/9907/05/kashmir.02/|title=Text of joint Clinton-Sharif statement|work=CNN|publisher=| accessdate=2009-05-20 |archiveurl = http://web.archive.org/web/20080516134001/http://www.cnn.com/WORLD/asiapcf/9907/05/kashmir.02/ |archivedate = May 16, 2008}}</ref><ref>{{cite web| url=http://www.acronym.org.uk/dd/dd39/39kash.htm|title=Disarmament Diplomacy – Complete texts of Indian and Pakistani statements following Pakistan's decision to withdraw its troops in Kargil|work=|publisher=| accessdate=2009-05-20}}</ref>
 
 
==வீர விருதுகள்==
===இந்தியா===
 
கார்கில் போரில் போரிட்ட பல இந்திய வீரர்கள் வீர விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.<ref>[http://indianarmy.nic.in/PVC/pvc.html Indian Army Param Vir Chakra Winners]{{dead link|date=June 2012}}</ref>
 
* கிரனேடியர் யோகேந்திர சிங் யாதவ், 18 கிரனேடியர் பிரிவு, [[பரம வீர சக்கரம்|பரம் வீர் சக்ரா]]
* லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே, 1/11 கூர்கா ரைஃபில்ஸ், [[பரம வீர சக்கரம்|பரம் வீர் சக்ரா]] (மறைவுக்குப் பின்னர்)
* கேப்டன் விக்ரம் பத்ரா, 13 ஜெ.ஏ.கே ரைஃபில்ஸ், [[பரம வீர சக்கரம்|பரம் வீர் சக்ரா]] (மறைவுக்குப் பின்னர்)
* ரைஃபில்மேன் சஞ்சய் குமார், 13 ஜெ.ஏ.கே ரைஃபில்ஸ், [[பரம வீர சக்கரம்|பரம் வீர் சக்ரா]]
* கேப்டன் அனுஜ் நாயர்,17 ஜெ.எ.டி ரெஜிமென்ட், [[மகா வீர சக்கரம்|மகா வீர் சக்ரா]] (மறைவுக்குப் பின்னர்)
* மேஜர் ராஜேஷ் சிங் அதிகாரி, 18 கிரனேடியர் பிரிவு, [[மகா வீர சக்கரம்|மகா வீர் சக்ரா]] (மறைவுக்குப் பின்னர்)
* மேஜர் சரவணன், 1 பிகார் படைப்பிரிவு, [[வீர சக்கரம்|வீர் சக்ரா]] (மறைவுக்குப் பின்னர்)
* சுகுவாட்ரன் லீடர் அஜய் அஹுஜா, இந்திய வான்படை, [[வீர சக்கரம்|வீர் சக்ரா]] (மறைவுக்குப் பின்னர்)
 
===பாகிஸ்தான்===
 
இரண்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு நிஷான்-இ-ஹைதர் விருது வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.shaheedfoundation.org/NishaneHaider.asp |title=Shaheed Foundation Pakistan |publisher=Shaheedfoundation.org |date= |accessdate=2012-06-15}}</ref>
 
* கேப்டன் கர்னல் ஷேர் கான், நிஷான்-இ-ஹைதர் (மறைவுக்குப் பின்னர்)
* ஹவல்தார் லாலக் ஜன், வடக்கு காலாட்படை, நிஷான்-இ-ஹைதர் (மறைவுக்குப் பின்னர்)
 
==ஊடகங்களின் தாக்கம்==
இரு நாட்டு மக்களின் கருத்துகளிலும் [[ஊடகம்|ஊடகங்கள்]] மிகப்பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின. கார்கில் போர் நடைபெற்ற சமயத்தில் இந்தியாவில் மின்னணு ஊடகவியல் பெருமளவில் வளர்ந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக போர் நடந்த இடங்களிலிருந்து பல காட்சிகள் இந்தியாவில் நேரலையாக [[தொலைக்காட்சி]]களில் ஒளிபரப்பப்பட்டன.<ref>India's Nuclear Bomb By George Perkovich University of California Press, 2002 ISBN 0-520-23210-0, Page 473</ref> பல [[இணையதளம்|இணையதளங்கள்]] போர் குறித்த விரிவான பகுப்பாய்வுகளை வழங்கின. தெற்காசியாவில் நேரடியாகத் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட முதல் போர் கார்கில் போரேயாகும்.<ref>{{cite web| url=http://www.ciaonet.org/olj/sa/sa_00saa01.html|first=A.K. |last=Sachdev|title=Media Related Lessons From Kargil – Strategic Analysis: January 2000 (Vol. XXIII No. 10)|work=|publisher=| accessdate=2009-05-20}}</ref> ஊடகங்களின் ஆழமான தாக்கத்தால் போரின்போது மக்களிடையே [[நாட்டுப்பற்று]] பெருமளவு வளர்ந்தது.
 
ஊடகங்களின் அதீத ஈடுபாட்டால் முரண்பாடான செய்திகள் வெளிவரத் தொடங்கின. இதை கட்டுப்படுத்த இந்திய அரசு, பாகிஸ்தான் ஊடகங்களைத் தற்காலிகமாக தடை செய்தது. பாகிஸ்தான் அரசால் இயக்கப்படும் ஊடகமான ''பிடிவி'' என்ற தொலைகாட்சி நிலையமும்,<ref>{{cite web| url=http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19990603/ige03090.html|title=Centre bans PTV|work=|publisher=| accessdate=2009-05-20}}Indian Express June 3, 1999</ref> ''டான்'' என்ற பாகிஸ்தான் நாளிதழின் இணையவழிப் பதிப்பும்<ref>[http://www.lib.virginia.edu/area-studies/SouthAsia/SAserials/Dawn/1999/17jul99.html#delh Delhi lifts ban on Dawn website, PTV broadcasts] Dawn wire service 17 July 1999</ref> இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இந்தியாவின் இச்செயலை, [[ஊடகச் சுதந்திரம்|ஊடகங்களின் சுதந்திரத்தை]] இந்தியா கட்டுப்படுத்துகிறது என்று சாடின. ஆனால் இந்திய ஊடகங்கள், அவை தேசத்தின் பாதிகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவிகள் என்றன. இந்திய அரசாங்கம், ''[[தி டைம்ஸ்]]'', ''தி வாஷிங்டன் போஸ்ட்'' போன்ற அயல்நாட்டு ஊடகங்களில், பாகிஸ்தான் அரசு காஷ்மீர் போராளிகளுக்கு உதவி வருவது குறித்து விளம்பரம் வெளியிட்டு இந்தியாவிற்கு ஆதரவு திரட்டியது.
 
போர் தீவிரமடைந்த சமயத்தில் ஊடகங்களும் தீவிரமாக போர் குறித்த செய்திகளை வெளியிட்டன.<ref>[http://www.hinduonnet.com/fline/fl1619/16191300.htm A different view of Kargil by Rasheeda Bhagat] Volume 16 – Issue 19, Sep. 11 – 24, 1999 The Frontline</ref> பல இந்திய தொலைகாட்சி நிலையங்கள், [[வளைகுடாப் போர்|வளைகுடா போரில்]] சி.என்.என் தொலைகாட்சியில் வெளியானது போன்ற படங்களை ஒளிபரப்பின. பாகிஸ்தான் படைகளால் வீசப்பட்ட குண்டு ஒன்று, போர்களத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த [[தூர்தர்ஷன்]] தொலைகாட்சியின் ஒளிபரப்பு நிலையத்தையும் தாக்கியது.<ref>[http://www.indiantelevision.com/newsletter/070699/dd070699.htm Pak TV ban gets good response]{{dead link|date=June 2012}}</ref> இந்தியாவின் ஊடகங்கள் பாகிஸ்தான் ஊடகங்களைவிட வெளிப்படையான தன்மையுடையதாக இருந்ததற்கு இந்தியாவில் தனியார் ஊடகங்கள் பெருமளவில் இருந்ததே காரணமாகக் கருதப்படுகிறது. [[கராச்சி]]யில் பாகிஸ்தான் ஊடகவியலாளர்களிடையே நடந்த கூட்டத்தில், இந்திய அரசு தனது நாட்டு மக்களையும் ஊடகங்களையும் நம்பியது, ஆனால் பாகிஸ்தான் அரசு அதை செய்யவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.<ref>[http://www.rediff.com/news/1999/jul/20media.htm Pak media lament lost opportunity] – Editorial statements and news headlines from Pakistan hosted on Rediff.com</ref>
 
சர்வதேச மற்றும் இந்திய ஊடகங்கள் இந்தியாவின் நிலைக்கு ஆதரவாக இருந்தன. பல மேற்கு நாட்டு ஊடகங்கள், போருக்கு பாகிஸ்தானே காரணம் என்ற கருத்தைக் கொண்டிருந்தன. பாகிஸ்தான் ஊடகங்களைவிட அளவில் மிகப் பெரியதாக இருந்த இந்திய ஊடகங்கள், இந்திய மக்களிடையே தேசப்பற்று உணர்ச்சியைப் பன்மடங்கு அதிகமாக்கியது எனவும் அது இந்திய இராணுவ நடவடிக்கைகளின் உறுதியை அதிகரித்தன எனவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.<ref>[http://www.defencejournal.com/2000/aug/role-media-war.htm The role of media in war – Sultan M Hali], [http://pib.nic.in/feature/feyr2000/fjul2000/f210720001.html Press Information Bureau, India]</ref> போர் தீவிரமடைந்தபோது பாகிஸ்தானின் வாதங்கள் சர்வதேச நாடுகளிடையே வலுவிழந்தன. இது இந்தியாவிற்கு உலக நாடுகளின் ஆதரவு கிடைக்க உதவியது.
 
==பேரழிவு ஆயுதக் காரணிகள்==
போரில் ஈடுபட்ட இரண்டு நாடுகளுமே பேரழிவு ஆயுதங்கள் ([[அணு குண்டு|அணு ஆயுதங்கள்]]) கொண்ட நாடுகளாகையால், போர் முற்றி அணு ஆயுதப் போர் மூளக்கூடும் என பல நாடுகள் கவலையடைந்தன. இந்தியாவும் பாகிஸ்தானும் 1999 ஆம் ஆண்டு அணு ஆயுதச் சோதனை நடத்தியிருந்தன (இந்தியா 1974 ஆம் ஆண்டே தனது [[சிரிக்கும் புத்தர்|முதல் அணு ஆயுதச் சோதனையை]] நடத்தி இருந்தாலும் பாகிஸ்தானுக்கு 1999 ஆம் ஆன்டு நடத்தப்பட்ட சோதனையே முதலாவதாகும்). தெற்காசியப் பகுதியில் வளர்ந்து வரும் அமைதியின்மைக்கு கார்கில் போர் ஒரு அறிகுறி பல அரசியல் வல்லுநர்கள் கருதினார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதச் சோதனை செய்த சில மாதங்களிலேயே கார்கில் போர் துவங்கியதால், அதை கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவர பல நாடுகள் விரும்பின.
 
பாகிஸ்தானின் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஷம்ஷாத் அஹ்மெத், மே 31 அன்று, "போர் பெரிதானால் அதை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தன்னிடம் உள்ள எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தத் தயங்காது" என்று கூறியது சர்வதேச அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது.<ref>Quoted in News Desk, “Pakistan May Use Any Weapon,” The News, May 31, 1999.</ref> இதை உலக நாடுகள் பாகிஸ்தான் விடுத்த அணு ஆயுத மிரட்டல் என்றே எண்ணின. பாகிஸ்தான் நாடுளுமன்றத் தலைவர், "ஆயுதங்களைத் தேவைப்படும்போது பயன்படுத்தாவிடில் அவற்றை உருவாக்கியதே அர்த்தமற்றதாகி விடும்" என்று கூறியது உலக நாடுகளின் எண்ணத்தை உறுதிபடுத்தியது.<ref>[http://www.nd.edu/~krocinst/ocpapers/op_18_2.pdf Pakistan's Nuclear Weapons Program] (PDF)</ref> இவ்வாறு இரு நாடுகளிலிருந்தும் பலரால் விடுக்கப்பட்ட மறைமுக அறிக்கைகளை ஆணு ஆயுதப் போருக்கான எச்சரிக்கை என்றே பல நாடுகள் எண்ணின. [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] [[அமெரிக்கா]]வுக்கும் இடையே நிகழ்ந்த [[பனிப்போர்|அணு ஆயுதப் போட்டி]] போல இதுவும் வளரக்கூடும் என உலக நாடுகள் அஞ்சின. பாகிஸ்தான் 1999 ஆம் ஆண்டு நிகழ்த்திய அணு ஆயுதச் சோதனைக்குப் பின்னர் அது பெற்ற அணு ஆயுதத் தற்காப்பின் காரணமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் துணிவுடன் ஈடுபடத் துவங்கியதாக சில வல்லுநர்கள் கருதுகிறார்கள்.<ref>[http://www.carnegieendowment.org/publications/index.cfm?fa=view&id=17967 Options Available to the United States to Counter a Nuclear Iran By George Perkovich] – Testimony by George Perkovich before the House Armed Services Committee, February 1, 2006</ref>
 
பாகிஸ்தான் தனது அணு ஆயுத [[ஏவுகணை]]களை எல்லைப் பகுதிகளுக்கு அருகில் கொண்டு சென்றுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்தபின் பதற்றம் மேலும் அதிகரித்தது. அப்போதைய அமெரிக்க அதிபராக விளங்கிய [[பில் கிளின்டன்]] பாகிஸ்தான் பிரதமரிடம் பாகிஸ்தான் படைகளைப் பின்வாங்கச் செய்யும்படி கூறினார்; மறுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். [[வெள்ளை மாளிகை]] அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப், தனக்கு அணு ஆயுத ஏவுகணைகள் எல்லைக்கருகில் நகர்த்தப்பட்டது குறித்து எதுவும் தெரியாது என்றும் இந்தியாவும் அதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். டாக்டர். சஞ்சய் பத்ரி மகாராஜ், இந்தியா போரின்போது குறைந்தபட்சம் ஐந்து அணு ஆயுத ஏவுகணைகளத் தயார் நிலையில் வைத்திருந்ததாக 2000 ஆம் ஆண்டு மே மாதம் கூறினார். ஆனால் தகுந்த ஆதாரங்களுடன் அவரது கூற்றை உறுதிபடுத்த அவரால் இயலவில்லை.<ref>''India had deployed Agni missile system|Agni during Kargil'', Article from "Indian Express" 19/6/2000</ref>
 
போரில் ஏற்பட்ட இழப்புகள், சர்வதேச அரங்கில் குறைந்து வரும் ஆதரவு மற்றும் போர் முற்றி அணு ஆயுதப் போராக மாறும் அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் பிரதமராக விளங்கிய நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெற்றார். பாகிஸ்தானின் இராணுவத் தளபதியாக விளங்கிய [[பர்வேஸ் முஷாரஃப்]] தனது அனுமதி பெறாமலே அணு ஆயுத ஏவுகணைகளை எல்லையில் நிலை நிறுத்தியதாக தனது சுய சரிதையில் நவாஸ் ஷெரீஃப் குறிப்பிட்டுள்ளார்.<ref>{{cite web|url=http://www.nation.com.pk/daily/july-2006/6/index16.php|archiveurl=http://web.archive.org/web/20071223045736/http://www.nation.com.pk/daily/july-2006/6/index16.php|archivedate=2007-12-23|title=Musharraf moved nuclear weapons in Kargil war|work=The Nation|accessdate=2009-05-27}}</ref> ஆனால், பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணைகள் அப்போது செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படவே இல்லை என்று பர்வேஸ் முஷாரஃப் பின்னர் தெரிவித்தார்.<ref name="Memoirs" /> கார்கில் போர் அணு ஆயுதப் போராக மாறியிருந்தால் பாகிஸ்தானுக்கு அது பெரிய பின்னடைவாக அமைந்திருக்கும்.
 
பேரழிவு ஆயுதங்களின் அபாயம் இரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களையும் உள்ளடக்கியதே ஆகும். இந்தியா தடை செய்யப்பட்ட [[வேதியியல் ஆயுதம்|இரசாயனங்களை]] காஷ்மீர் போராளிகளுக்கு எதிராகப் பயன்படுத்திய ஆயுதங்களில் உபயோகித்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. மற்றொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாயுத் தடுப்பு முகமூடிகளை ஆதாரமாகக் கொண்டு, பாகிஸ்தான் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தத் திட்டமிட்டதாக இந்தியா பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியது. அமெரிக்க அதிகாரிகளும் மற்றும் [[வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு]]ம், இந்தியா மீது பாகிஸ்தான் சுமத்திய இரசாயன ஆயுதம் குறித்த குற்றங்கள் ஆதாரமற்றவை என்று தீர்மானித்தனர்.<ref>[http://www.nti.org/e_research/profiles/India/Chemical/2324_2698.html NTI: Country Overview] – Nuclear Threat Initiative ([http://web.archive.org/web/20080820033051/http://nti.org/e_research/profiles/India/Chemical/2324_2698.html Archive] on the Wayback Machine)</ref>
 
 
==பின்விளைவுகள்==
===இந்தியா===
 
[[படிமம்:Atal Bihari Vajpayee.jpg|thumb|left|கார்கில் போரின்போது இந்தியப் பிரதமராக விளங்கிய அடல் பிகாரி வாஜ்பாய். போரில் இந்தியா மிகப்பெரிய வெற்றி பெற்றதால், 1999 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் [[பா.ஜ.க]] தலைமையிலான [[தே.ஜ.கூ]] மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது|175px]]
 
கார்கில் போர் முடிவடைந்ததிலிருந்து பிப்ரவரி 2000 வரை, இந்திய [[பங்குச்சந்தை|பங்குச் சந்தையில்]] பங்குகளின் மதிப்புகள் 30% வரை அதிகரித்தன. போருக்கு அடுத்த இந்தியாவின் தேசிய [[நிதியறிக்கை]]யில் இராணுவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.
 
போரின்போது நாட்டு மக்களிடையே [[நாட்டுப்பற்று]] பெருமளவு அதிகரித்தது; பல பிரபலங்கள் கார்கில் போரில் இந்திய இராணுவத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.<ref>[http://www.time.com/time/asia/magazine/2000/0410/india.kargil.html The Spoils of War], [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/381006.stm India backs its 'boys']</ref> [[இந்திய வான்படை]]யைச் சேர்ந்த விமானி அஜய் அஹுஜா, பாகிஸ்தான் இராணுவத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட செய்தி வெளியானபோது பாகிஸ்தான் படையினரின் செயலுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய தரப்பில் இழப்புகள் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருந்தது; உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் புதிதாக இராணுவத்தில் இணைந்திருந்த இளம் வீரர்களாவர். போர் முடிந்து ஒரு மாதத்திற்குப் பின் ''அட்லான்டிக் சம்பவத்தில்'' பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த விமானம் ஒன்றை இந்தியா சுட்டு வீழ்த்தியது மீண்டும் பதற்றத்தை உருவாக்கியது.
 
போருக்குப்பின் இந்தியா, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டது; இராணுவத்தின் தயார் நிலையை அதிகப்படுத்தியது. இந்தியா நவீன ஆயுதங்களையும் போர் கருவிகளையும் வாங்குவதற்காக தனது இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகப்படுத்தியது.<ref>[http://www.financialexpress.com/news/Centre-files-second-affidavit-in-Kargil-scam/131793/ Centre files second affidavit in Kargil scam] The Financial Express April 14, 2005</ref> ஊடுருவலை முன்கூட்டியே கண்டறியத் தவறிய உளவுத்துறையை [[ஊடகம்|ஊடகங்கள்]] கடுமையாக சாடின. இந்திய நாளிதழ் ஒன்றில் வெளியான இந்திய இராணுவத்தின் சிய மதிப்பீட்டு அறிக்கையில், "கவனக்குறைவு", "போருக்கு ஆயத்தமற்ற தன்மை", "[[அணு குண்டு|அணு ஆயுதம்]] பெற்றிருப்பதால் போர் எளிதில் ஏற்படாது என்ற எண்ணம்" போன்றவை இந்திய படைத்துறைகளிடமிருந்த பின்னடைவுகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இராணுவத்தின் அதிகாரத்தில் இருந்த இடைவெளிகள், படைவீரர்கள் பற்றாகுறை மற்றும் கனரக ஆயுதங்களின் பற்றாகுறை போன்றவற்றையும் அந்த அறிக்கை சுட்டியது.<ref>''War Against Error'', Cover story on Outlook, February 28, 2005 ([http://www.outlookindia.com/full.asp?fodname=20050228&fname=Cover+Story+%28F%29&sid=1 Online edition])</ref> இந்திய இராணுவம், அரசாங்கத்திடம் ஊடுருவல் பற்றிய முழுமையான தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும் தரைப்படையின் தலைமை தளபதி வேத் பிரகாஷ் மாலிக், விமானப்படையின் உதவியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் உலங்கு வானூர்திகளின் உதவியை மட்டுமே கோரினார் என்றும் ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி ஏ. ஒய். திப்னிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.<ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/2115734.cms Army was reluctant to tell govt about Kargil: Tipnis] 7 October 2006 – The Times of India</ref> போர் முடிவடைந்தவுடன், பாகிஸ்தானால் முடக்கப்பட்ட, எல்லைக்கோடு நெடுகிலும் [[வேலி (எல்லை)|வேலி]] அமைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க இந்தியா முடிவு செய்தது.<ref>[http://www.india-today.com/webexclusive/dispatch/20010421/vinayak.html Fencing Duel] – India Today</ref>
 
போருக்கு அடுத்து நடந்த பதிமூன்றாவது இந்திய மக்களவை பொதுத் தேர்தலில் [[தேசிய ஜனநாயகக் கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயகக் கூட்டணி]] மிகப்பெரிய வெற்றி பெற்றது. [[மக்களவை (இந்தியா)|மக்களவையில்]] மொத்தம் உள்ள 545 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 303 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தது. போருக்குப்பின் இந்திய-அமெரிக்க உறவுகள் வலுவடைந்தன; போரைப் பெரிதாக வளரவிடாத இந்தியாவின் நிலையை [[அமெரிக்கா]] பாராட்டியது.<ref>India Changes Course By Paul R. Dettman Published by Greenwood Publishing Group, 2001, ISBN 0-275-97308-5, Page 117-118</ref> போரின்போது, [[பீரங்கி வண்டி|பீரங்கி]]கள், [[செயற்கைக்கோள்]] புகைப்படங்கள், ஆளில்லா விமானங்கள், குண்டுகள் போன்றவற்றை அளித்து உதவிய [[இஸ்ரேல்|இஸ்ரேலுடனான]] உறவையும் இந்தியா பலப்படுத்திக் கொண்டது.<ref>[http://www.dailytimes.com.pk/default.asp?page=story_30-7-2002_pg7_37 News reports from ''Daily Times'' (Pakistan)] and [http://news.bbc.co.uk/2/hi/south_asia/3088780.stm BBC] mentioning the Israeli military support to India during the conflict.</ref>
 
===கார்கில் ஆய்வுக் குழு===
போரின் முடிவில் [[அடல் பிகாரி வாஜ்பாய்|அடல் பிகாரி வாஜ்பாயின்]] அரசாங்கம், போருக்கான காரணங்களையும் இந்திய உளவுத்துறையின் தோல்விக்கான காரணங்களையும் விசாரிக்க உத்தரவிட்டது. உயர் அதிகாரம் கொண்ட குழு ஒன்று, கே. சுப்பிரமண்யம் தலைமையில் உருவாக்கப்பட்டு, முன்னாள் பிரதமர்கள் மற்றும் பாதுகாப்புத்துறையுடன் சம்பந்தப்பட்ட எவரையும் விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. ''சுப்பிரமண்யம் அறிக்கை'' என்று அறியப்படும்<ref>{{cite web|url=http://news.indiamart.com/news-analysis/kargil-subrahmanyam--6975.html|title=Kargil : Subrahmanyam Committee's Report|work=Indian News|publisher=|accessdate=2009-10-20}}</ref> அக்குழுவின் அறிக்கையில் செய்யப்பட்டிருந்த பரிந்துரைகள் காரணமாக இந்திய உளவுத்துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.<ref>{{cite web|url=http://www.indianexpress.com/ie/daily/20000320/ied20064.html|title=Kargil report shows the way|work=Indian Express|publisher=|accessdate=2009-10-20}}</ref> ஆனால் கார்கில் பிரச்சனையை முன்கூட்டியே கண்டறியத் தவறியதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை அந்த அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.<ref>{{cite book|url=http://books.google.co.in/books?id=XnzRttnqExUC |title=Pg 56–60 Dixit, JN, "India-Pakistan in War & Peace", Routledge, 2002 |publisher=Books.google.co.in |date= |accessdate=2012-06-15}}</ref> மேலும் அந்த அறிக்கை, பிரிகேடியர் சுரிந்தர் சிங் மீது, கார்கில் ஊடுருவல் குறித்து சரியான நேரத்தில் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டியது. ஆனால் ஊடகங்கள், சுரிந்தர் சிங் தனது உயர் அதிகாரிகளிடம் கார்கில் ஊடுருவல் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவித்திருந்தார் எனவும், ஆனால் அவர் அளித்த தகவல்கள் இராணுவ மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளால் அலட்சியம் செய்யப்பட்டது என்றும் கூறின.<ref>{{cite web|url=http://www.hinduonnet.com/fline/fl1813/18130410.htm|title=The sacking of a Brigadier|work=Frontline|publisher=|accessdate=2009-10-20}}</ref><ref>{{cite news|url=http://www.hindu.com/2001/07/01/stories/05011344.htm|title=Scapegoat for the system|work=The Hindu|publisher=|accessdate=2009-10-20|location=Chennai, India|date=2001-07-01}}</ref><ref>{{cite web|url=http://www.rediff.com/news/2000/feb/16kargil.htm|title=Army's Kargil inquiry indicts Brig Surinder Singh|work=Rediff|publisher=|accessdate=2009-10-20}}</ref>
 
 
அரசாங்க வழக்கத்திற்கு மாறாக, ''சுப்பிரமண்யம் அறிக்கை'' பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது.<ref>{{cite web|url=http://www.hinduonnet.com/fline/fl1722/17220240.htm|title=THE KARGIL STORY|work=The Hindu|publisher=|accessdate=2009-10-20}}</ref> ஆனால், அந்த அறிக்கையின் சில பாகங்கள் மட்டும் அரசாங்க இரகசியங்களைப் பற்றியது என்ற காரணத்திற்காக இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. குழுவின் தலைவர் சுப்பிரமண்யம், "அந்த பாகங்கள் இந்தியாவின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் அத்திட்டத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர்களின் பங்குகள் பற்றிய தகவல்கள் அடங்கியவை" என்று பின்னாளில் கூறினார்.<ref>{{cite web|url=http://www.tribuneindia.com/2004/20041229/edit.htm#6|title=P.V. Narasimha Rao and the Bomb|work=The Tribune|publisher=|accessdate=2009-10-20}}</ref><ref>{{cite web|url=http://www.informaworld.com/smpp/content~content=a791915926~db=all|title=Narasimha Rao and the Bomb|work=informaworld|publisher=|accessdate=2009-10-20}}</ref>
 
 
===பாகிஸ்தான்===
[[படிமம்: Nawaz Sharif1.jpg|thumb|right|கார்கில் போரின் போது பாகிஸ்தான் பிரதமராக விளங்கிய [[நவாஸ் ஷெரீப்|நவாஸ் ஷெரீஃப்]]. போர் முடிந்த சில மாதங்களில் இராணுவப் புரட்சி செய்து இவரது அரசைக் கவிழ்த்து, அதிகாரத்தை பர்வேஸ் முஷாரஃப் கைப்பற்றிக்கொண்டார்.]]
சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படும் அபாயம் காரணமாக பலவீனமான பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் நலிவடைந்தது.<ref name="Samina Ahmed">[http://belfercenter.ksg.harvard.edu/publication/1209/diplomatic_fiasco.html Samina Ahmed. "Diplomatic Fiasco: Pakistan's Failure on the Diplomatic Front Nullifies its Gains on the Battlefield"] (Belfer Center for International Affairs, Kennedy School of Government)</ref><ref>[http://www.salon.com/news/feature/1999/10/13/reacts/print.html Multiple views and opinions on the state of Pakistan's economy, the Kashmir crisis and the military coup], [http://www.acdis.uiuc.edu/Research/S&Ps/2003-04-Wi/S&P-Wi-2003/promise_pakistan.html The Promise of Contemporary Pakistan by Faisal Cheema]</ref> பாகிஸ்தான் படையைச் சேர்ந்த வடக்கு காலாட்படைப்பிரிவு அதீத இழப்புகளைச் சந்தித்ததால் பாகிஸ்தான் படைகளின் மனஉறுதி குலைந்தது.<ref name="Summary" /><ref>[http://belfercenter.ksg.harvard.edu/publication/1002/friend_for_all_seasons.html Samina Ahmed. "A Friend for all Seasons."] (Belfer Center for International Affairs, Kennedy School of Government)</ref> உயிரிழந்த பாகிஸ்தான் போர் வீரர்களின் சடலங்களை வாங்கிக்கொள்ள பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.<ref>{{cite web|url=http://www.rediff.com/news/1999/jul/11karg1.htm |title=Pakistan refuses to take even officers' bodies |publisher=Rediff.com |date=1999-07-11 |accessdate=2012-06-15}}</ref><ref>[http://www.indianembassy.org/pic/PR_1999/July_1999/PR_July_15_1999.html "press release issued in New Delhi regarding bodies of two Pakistan Army Officers"]</ref> இதன் காரணமாக பாகிஸ்தானின் வடபகுதிகளில், மக்கள் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.<ref>Second-Class Citizens by M. Ilyas Khan, The Herald (Pakistan), July 2000. [http://www.warbirds.in/downloads/HeraldKargil.pdf Online scanned version of the article](PDF)</ref><ref>[http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2006092505001100.htm&date=2006/09/25/&prd=th& Musharraf and the truth about Kargil] – The Hindu 25 September 2006</ref> ஆரம்பத்தில் பாகிஸ்தான் படைகளுக்கு ஏற்பட்ட பெரும்பான்மையான இழப்புகளை பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் [[நவாஸ் ஷெரீப்|நவாஸ் ஷெரீஃப்]], குறைந்தபட்சம் 4000 பாகிஸ்தான் வீரர்கள் அப்போரில் உயிரிழந்ததாகக் கூறினார்.<ref name="Hindu Sharif">{{cite web| url=http://www.hinduonnet.com/thehindu/2003/08/17/stories/2003081702900800.htm|title=Over soldier's killed in Kargil: Sharif|work=The Hindu|publisher=| accessdate=2009-05-20}}</ref> இதற்கு பதிலளிக்கும் விதமாக [[பர்வேஸ் முஷாரஃப்]], "ஒரு முன்னாள் பிரதமரே தனது படைகளை குறைத்து மதிப்பிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது" என்று கூறினார். இந்தியத் தரப்பு இழப்புகள் பாகிஸ்தானுடையதைவிட பன்மடங்கு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.<ref>{{cite web|author=Press Trust of India |url=http://expressindia.indianexpress.com/news/fullstory.php?newsid=34665 |title=India suffered more casualties in Kargil than Pakistan, claims Musharraf |publisher=Expressindia.com |date=2004-08-05 |accessdate=August 28, 2013}}</ref> பாகிஸ்தான் ஊடகங்கள் முஷாரஃபால் நியாயப்படுத்தப்பட்ட கார்கில் போர் குறித்து இன்றளவும் விவாதம் செய்கின்றன.<ref name="ARY News TV">{{cite news|last=Badmi|first=Vaseem|title=11th Hour|url=http://www.youtube.com/watch?v=-7G5GDa_jE8|accessdate=30 January 2013|newspaper=ARY News TV|date=30 January 2013}}</ref><ref name="Dunya News">{{cite news|last=Bacha|first=Sana|title=Top Story|url=http://www.thenewstribe.com/2013/01/30/some-people-trying-to-scandalize-pakistan-army-over-kargil-war-pervez-musharraf/|accessdate=30 January 2013|newspaper=Dunya News|date=30 January 2013}}</ref>
 
பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் வாயிலாக, பாகிஸ்தான் படைகள் கார்கிலில் வெற்றி பெரும் என்று பாகிஸ்தான் மக்கள் எதிர்பார்த்தனர்.<ref name="Samina Ahmed" /> ஆனால் பாகிஸ்தான் பிரதமர், படைகளைப் பின்வாங்க உத்தரவிட்டபோது பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.<ref name="Hassan Abbas" /><ref>[http://www.wsws.org/articles/1999/aug1999/pak-a07.shtml Pakistani opposition presses for Sharif's resignation By K. Ratnayake 7 August 1999], [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/389884.stm Can Sharif deliver?], [http://www.stimson.org/southasia/?SN=SA20041217738 Michael Krepon. "The Stability-Instability Paradox in South Asia"] – Hosted on Henry L. Stimson Centre.</ref> பாகிஸ்தான் படைத் தலைவர்களும் பிரதமரின் முடிவால் ஏமாற்றமடைந்தனர். ஆனால் செண்ட்காமின் முன்னாள் படைத் தளபதியும் முஷாரஃபின் நண்பருமான அந்தோனி சின்னியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும், பாகிஸ்தான் படைகளைப் பின்வாங்க உத்தரவிடுமாறு முஷாரஃப்தான் கோரியதாகக் கூறியுள்ளனர்.<ref>{{cite book | author=Tom Clancy, Gen. Tony Zinni (Retd) and Tony Koltz | title=Battle Ready | publisher=Grosset & Dunlap | year=2004 | isbn=0-399-15176-1}}</ref><ref>[http://www.weeklyvoice.com/site/index.php?option=com_content&task=view&id=1443&Itemid=66 Musharraf Vs. Sharif: Who's Lying?]{{dead link|date=June 2012}}</ref> முஷாரஃபின் மூத்த அதிகாரியும் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியுமான அப்துல் மஜீத் மாலிக், கார்கில் போர் குறித்து, "பிசககான காரியம்" என்று கூறியதோடு, முஷாரஃபையும் கடுமையாக சாடினார். இந்தியாவுடன் அப்பகுதியில் போரிடும் நிலைமையில் பாகிஸ்தான் படைகள் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், நவாஸ் ஷெரீஃபின் அரசுதான் [[அமெரிக்கா]]வுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாகிஸ்தானை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றியது என்றும் கூறியுள்ளார்.<ref name="The News International, 2012">{{cite news|last=Tariq Butt|title=Kargil was a total disaster|url=http://www.thenews.com.pk/Todays-News-2-142768-Kargil-war-was-a-total-disaster-claims-Gen-Majeed-Malik|accessdate=30 January 2013|newspaper=The News International, 2012|date=November 14, 2012}}</ref> மேலும், கார்கிலில் ஊடுருவியவர்கள் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் படையைச் சேர்ந்தவர்களே என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.<ref name="The News International, 2012"/>
 
[[படிமம்:Pakistan Air Force General Dynamics F-16A Fighting Falcon (401) Bidini.jpg|thumb|left|கார்கில் போரில் பாகிஸ்தான் வான்படையைச் சேர்ந்த எஃப்-16 ரக போர் விமானங்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. எனினும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமானங்களைப் பயன்படுத்தவில்லை.]]
பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையில் கூட்டுத் தலைமையகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் கூட்டத்தில், பர்வேஸ் முஷாரஃப், அவர் மீது இராணுவ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய பாகிஸ்தான் வான்படைத் தலைமை தளபதி அட்மிரல் ஃபஸி பொகாரியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.<ref name="Daily Times">{{cite news|last=Daily Times Report|title=Musharraf planned coup much before Oct 12: Fasih Bokhari|url=http://www.antisystemic.org/satribune/www.satribune.com/archives/oct7_13_02/DTimes_fasihoct9.htm|accessdate=18 May 2012|newspaper=Daily Times|date=October 9, 2002|quote=Navy chief says the general feared court martial for masterminding Kargil}}</ref> கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வான்படையின் தலைமை தளபதி பி. க்யூ. மேதி, "கடற்படையும் வான்படையும் கார்கில் விவகாரத்தில் தலையிட்டிருந்தால் அது போரை பெரிதாக்கியிருக்கும்" என்று கூறியுள்ளார்.<ref name="Air Forces Monthly (UK)">{{cite news|last=Tufail, PAF|first=Brigadier Kaisar|title=Himalayan Showdown|url=http://kaiser-aeronaut.blogspot.com/2009/01/kargil-conflict-and-pakistan-air-force.html|accessdate=18 May 2012|newspaper=Air Forces Monthly (UK)|date=January 28, 2009}}</ref> இதை முஷாரஃப் கடுமையாக விமர்சித்ததை அடுத்து, அவர் விமானப்படை விமானங்களை ஸ்கார்டு பள்ளத்தாக்கில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தினார்.<ref name="Kaisar Tufail at Air Force Monthly">{{cite web|last=Tufail|first=Kaisar|title=Kargil Conflict and Pakistan Air Force|url=http://kaiser-aeronaut.blogspot.com/2009/01/kargil-conflict-and-pakistan-air-force.html|publisher=Kaisar Tufail at Air Force Monthly|accessdate=30 January 2013}}</ref><ref name="AuthorHouse (October 20, 2006)">{{cite book|last=Admiral Mohammad Anwer|title=Stolen Stripes and Broken Medals: Autobiography of a Senior Naval Officer|year=2006|publisher=AuthorHouse (October 20, 2006)|location=Karachi Pakistan|isbn=9781425900205|page=252|url=http://books.google.com/books?id=U2IQ7bkak5wC&printsec=frontcover&dq=Stolen+Stripes+and+Broken+Medals:+Autobiography+of+a+Senior+Naval+Officer&hl=en&sa=X&ei=po4IUe-uOcT72QX2qYGYAQ&ved=0CDAQ6AEwAA}}</ref> கார்கில் போரின்போது பாகிஸ்தான் கடற்படை பெரும்பாலும் விலகியே இருந்தது; நீர்மூழ்கிக் கப்பல்கள் மட்டும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. போருக்கான முழு பழியையும் பாகிஸ்தான் பிரதமர், பர்வேஸ் முஷாரஃப் மீது சுமத்தியதால் அவர்கள் இருவருக்குமிடையே இணக்கமற்ற சூழ்நிலையே நிலவியது. அக்டோபர் 12, 1999 அன்று பர்வேஸ் முஷாரஃப், இராணுவப் புரட்சி செய்து நவாஸ் ஷெரீஃபிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.
 
பாகிஸ்தானின் நாடுளுமன்றத் தலைவரும் முன்னாள் பிரதமருமான [[பெனசீர் பூட்டோ]], கார்கில் போர் பாகிஸ்தானின் மிகப்பெரிய பிசகு என்று கூறியுள்ளார்.<ref>{{cite web|url=http://farjinews.blogspot.com/2009/07/kargil-was-success-only-for-pervez-only.html |title=Kargil Was Success Only For Pervez |publisher=Farjinews.blogspot.com |date=2009-07-24 |accessdate=2012-06-15}}</ref> பாகிஸ்தான் இராணும் மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள், "நேர விரயம்", "கார்கில் போரால் எவ்வித நன்மையும் விளைந்திருக்க முடியாது",<ref>[http://www.ipcs.org/PakMedia05-UAug04.pdf Select Media Reports from Urdu Media in Pakistan] (PDF)</ref> "கிழக்கு பாகிஸ்தான் சோகத்தைவிட கார்கில் போர் மிகப்பெரிய துக்கம்",<ref name="kuli">[http://www.dnaindia.com/report.asp?NewsID=1056536 Kargil was a bigger disaster than 1971] – Interview of Lt Gen Ali Kuli Khan Khattak.</ref> "சரிவரத் திட்டமிடப்படாத கார்கில் தாக்குதல் பல பாகிஸ்தான் படை வீரர்களின் உயிரை பலி வாங்கியது"<ref name="kuli" /><ref>[http://jang.com.pk/thenews/oct2006-weekly/books&people-19-10-2006/index.html Review of Musharraf's memoirs by S. A. Haleem] Jang, October 19, 2006</ref> என்று பலவாறாக கார்கில் போர் குறித்து விமர்சித்துள்ளனர். கார்கில் ஆக்கிரப்பு பாகிஸ்தானுக்கு இழப்புகளை மட்டுமே ஏற்படுத்தியதால், பாகிஸ்தான் ஊடகம் அதை கடுமையாக விமர்சித்தது.<ref>[http://www.dawn.com/weekly/ayaz/990709.htm Victory in reverse: the great climbdown], [http://www.dawn.com/weekly/ayaz/990723.htm For this submission what gain?] by Ayaz Amir – Dawn (newspaper)</ref>
 
கார்கில் போருக்குக் காரணமானவர்களை விசாரிக்க குழு அமைக்கப்பட வேண்டும் என்று பலர் கோரினாலும் அது நிறைவேற்றப்படவில்லை. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் கூற்றுப்படி, நவாஸ் ஷெரீஃப் கார்கில் போர் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார்; ஆனால், முஷாரஃபின் மீது இராணுவ விசாரணைக்குப் பரிந்துரைத்திருந்த அக்குழுவின் அறிக்கை முஷாரஃபால் மறைக்கப்பட்டுவிட்டது.<ref>[http://www.thenews.com.pk/top_story_detail.asp?Id=2382 PML-N issues white paper on Kargil operation] – The News International</ref> கார்கில் ஆக்கிரமிக்கப்படப்போகும் செய்தி ஆக்கிரமிப்புத் தொடங்குவதற்கு 11 மாதங்கள் முன்னரே இந்தியாவிற்குத் தெரியும் என்றும் அதனால் இந்தியா எளிதாக பாகிஸ்தான் படைகளைக் கார்கிலில் தோற்கடித்து விட்டது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>[http://www.paktribune.com/news/index.shtml?151668 Ill-conceived planning by Musharraf led to second major military defeat in Kargil: PML-N] Pak Tribune, August 6, 2006</ref> பாகிஸ்தான் படையின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஜம்ஷெத் குல்சர் கியானி, "பாகிஸ்தான் பிரதமருக்கு கார்கில் மீது தாக்குதல் நடத்தப்படப் போகும் செய்தி தெரிவிக்கப்படவில்லை"<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/7434427.stm Call for Musharraf treason trial By M Ilyas Khan] BBC NewsJune 3, 2008</ref> என்று கூறியதால் போரின் மீது விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்தன.<ref>[http://www.app.com.pk/en_/index.php?option=com_content&task=view&id=40288&Itemid=2 Lawmakers demand probe into Kargil debacle] Associated Press of Pakistan June 3, 2008</ref><ref>[http://www.nation.com.pk/pakistan-news-newspaper-daily-english-online/Politics/04-Jun-2008/MNAs-seek-probe-into-Kargil-debacle MNAs seek probe into Kargil debacle By Naveed Butt] The Nation</ref>
 
[[காஷ்மீர் பிரச்சினை|காஷ்மீர் விவகாரத்தை]] உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பாகிஸ்தானின் விருப்பம் கார்கில் போர் மூலம் நிறைவேறினாலும், இரு நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் போர் நடைபெற்றதால், அது பாகிஸ்தானை எதிர்மறையாக பாதித்ததோடு பாகிஸ்தானின் நம்பகத்தன்மையையும் உலக நாடுகளிடையே குறைத்து விட்டது. சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை அங்கீகரித்தன. அமெரிக்க அதிபர், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியது, பாகிஸ்தானுடனான உறவுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்பட்டது.<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/371945.stm Analysis: Shift in US Kashmir stance?], BBC 1999-06-17</ref>
 
போருக்குப் பின் பாகிஸ்தான் படைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. போரில் வெகு சிறப்பாக போரிட்ட வடக்குக் காலாட்படைப்பிரிவு இராணுவத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்ளப்பட்டது. போர் மிக நன்றாகத் திட்டமிடப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களை அது அலட்சியம் செய்தது.<ref>[http://www.dawn.com/weekly/mazdak/20000429.htm Kargil: the morning after By Irfan Husain] 29 April 2000 Dawn</ref> பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்டு தோல்வியடைந்த பல நடவடிக்கைகளில் காணப்பட்டது போலவே இப்போரிலும் பாகிஸ்தான் படைப்பிரிவுகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் என்பது மிகவும் மோசமாக இருந்தது. முன்னர் நடந்த போர்களில் செய்த அதே தவறுகளை கார்கிலிலும் பாகிஸ்தான் செய்ததாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..<ref>[http://www.dailytimes.com.pk/default.asp?page=story_19-7-2004_pg3_1 EDITORIAL: Kargil: a blessing in disguise?] July 19, 2004 Daily Times, Pakistan</ref> கார்கில் போர் இந்திய உளவுத்துறையின் கவனக்குறைவாலும் பாகிஸ்தானின் தவறானத் திட்டமிடலாலும் விளைந்தது என்றும் கார்கில் ஆக்கிரமிப்பு குறித்து முஷாரஃபுக்கும் அவரது நான்கு நெருக்கிய கூட்டாளிகளுக்கு மட்டுமே தெரியும் என்றும் முஷாரஃபின் நம்பிக்கைக்குரிய ஓய்வுபெற்ற பாகிஸ்தான் தளபதியான ஷாகித் அசீஸ் கூறியுள்ளார்.<ref name="National Turk English">{{cite news|last=APP|title=Kargil adventure was India's intelligence failure, Pakistan's miscalculated move: Ex-Pak General|url=http://www.nationalturk.com/en/kargil-adventure-was-indias-intelligence-failure-pakistans-miscalculated-move-ex-pak-general-33029|accessdate=30 January 2013|newspaper=National Turk English|date=30 January 2013}}</ref><ref name="GEO News">{{cite news|title=Ex General reveals details about Kargil fiasco|url=http://www.geo.tv/GeoDetail.aspx?ID=85798|accessdate=30 January 2013|newspaper=GEO News|date=29 January 2013}}</ref><ref name="Dawn News">{{cite news|last=Khalid Kaikani|title=Kargil adventure was four-man show: general|url=http://dawn.com/2013/01/29/kargil-adventure-was-four-man-show-general/|accessdate=30 January 2013|newspaper=Dawn News|date=29 January 2013}}</ref>
 
==இழப்புகள்==
[[படிமம்:KargilWarMemorial2.JPG|thumb|right|விஜய் நடவடிக்கையின் நினைவுச் சின்னம்]]
பாகிஸ்தான் இராணுவத்தின் மொத்த இழப்புகள் சரிவர மதிப்பீடு செய்யப்படவில்லை. பாகிஸ்தான் தரப்பில் 453 வீரைகள் பலியானதாக பாகிஸ்தான் அரசு கூறியது. அமெரிக்க உளவுத்துறை, குறைந்தபட்சம் 700 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக மதிப்பிட்டுள்ளது. நவாஸ் ஷெரீஃப், 4000 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். அவரது கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் 3000 முஜாஹிதீன் போரளிகள், அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>[http://www.paktribune.com/news/index.shtml?151668 Ill-conceived planning by Musharraf led to second major military defeat in Kargil: PML-N] August 6, 2006, PakTribune</ref> பாகிஸ்தானின் மற்றொரு முக்கிய அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி, ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாகக் கூறியுள்ளது.<ref>{{cite web|url=http://ppp.org.pk/articles/article30.htm|archiveurl=http://web.archive.org/web/20071012153208/http://ppp.org.pk/articles/article30.htm|archivedate=2007-10-12|title=Indo-Pak summit 2001|date=2007-10-12|accessdate=2009-05-27|work=Pakistan Peoples Party}}</ref> இந்தியா, 1,042 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக கணித்துள்ளது.<ref name="ht">[http://www.hindustantimes.com/news/181_1805833,0008.htm Indian Army rubbishes Musharraf's Kargil claims]{{Dead link|url=http://www.hindustantimes.com/news/181_1805833,0008.htm|date=November 2010|date=June 2009}}</ref> முஷாரஃப் தனது குறிப்புகளில், 357 வீரர்கள் மரணமடைந்ததாகவும் 665 வீரர்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.<ref name="Indianexpress">{{cite web| url=http://www.indianexpress.com/story/14208.html|title=President Musharaffs disclosure on Pakistani Casualties in his book|work=Indian Express|publisher=| accessdate=2009-05-20}}</ref> பாகிஸ்தான் இராணுவ இணையதளத்தில், 400 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref name="Shuhadas Corner">[http://www.pakistanarmy.gov.pk/modules/shuhadascorner/embed_shuhada_list.aspx Pakistan army publishes list of army regulars who died in various conflicts], November 2010</ref> இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி ஒருவர் பாகிஸ்தான் படைகளால் சிறை பிடிக்கப்பட்டார். பாகிஸ்தான் வீரர்கள் எட்டு பேரை இந்திய வீரர்கள் சிறை பிடித்தனர். அந்த எட்டு வீரர்களையும் இந்தியா, 13 ஆகஸ்டு, 1999 அன்று பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது.<ref name="tribpow">{{cite web| url=http://www.tribuneindia.com/1999/99aug15/nation.htm#9|title=Tribune Report on Pakistani POWs|work=|publisher=| accessdate=2009-05-20}}</ref>
 
இந்தியா, தனது தரப்பில் 527 வீரர்கள் உயிரிழந்ததாகவும் 1,363 வீரர்கள் காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
 
==இந்தியாவின் கார்கில் நினைவுச் சின்னம்==
[[படிமம்:KargilWarMemorial main gate.JPG|thumb|right|இந்திய இராணுவத்தால் திரஸில் நிறுவப்பட்டுள்ள கார்கில் நினைவுச் சின்னத்தின் பிரதான நுழைவாயில்]]
திரஸ் பகுதியிலுள்ள தோலோலிங் மலையடிவாரத்தில் இந்திய இராணுவம், போர் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்துள்ளது. டைகர் ஹில் பகுதியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த நினைவிடம், போரில் உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டதாகும். பாலிவுட் நடிகர் [[அமிதாப் பச்சன்|அமிதாப் பச்சனின்]] தந்தை ஹரிவன்ஷ் பச்சன் எழுதிய கவிதை இந்நினைவுச் சின்னத்தின் நுழைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்திற்க்கு அருகில், [[விஜய் நடவடிக்கை]]யின் வெற்றியைக் கொண்டாட ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, போர் வீரர்களின் படங்கள், போர் குறித்த ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள், பாகிஸ்தான் படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியவை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
 
கார்கில் போர் வெற்றியின் பதிமூன்றாவது ஆண்டுவிழாவின் நினைவாக, 15 கிலோ எடையுடைய [[இந்திய தேசியக் கொடி]] கார்கில் நினைவுச் சின்னத்தில் நிறுவப்பட்டது.<ref>[http://ibnlive.in.com/videos/274490/15kg-tricolour-hoisted-at-kargil-war-memorial.html 15-kg Tricolour hoisted at Kargil war memorial Jammu and Kashmir Videos-IBNLive]. Ibnlive.in.com (2012-07-25). Retrieved on 2013-07-12.</ref>
 
==கலைகளில் கார்கில் போர்==
[[படிமம்:KargilWarMemorial.JPG|thumb|right|கார்கில் போர் நினைவிடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்திய தேசியக் கொடி]]
[[படிமம்:KargilWarMemorial3.JPG|thumb|right|கார்கில் போர் நினைவுச் சின்னம்]][[படிமம்:Pakbunker.JPG|thumb|right|கார்கில் போரில் இந்தியப் படையினரால் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் பயன்படுத்திய பதுங்கு குழி]]
கார்கில் போர் மூலம், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் சிறந்த கரு கிடைத்தது. கார்கில் போர் குறித்து எடுக்கப்பட்ட சில ஆவணப்படங்கள், [[பாரதிய ஜனதா கட்சி]]யின் தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்பட்டன. கார்கில் போர் குறித்து எடுக்கப்பட்ட [[திரைப்படம்|திரைப்படங்கள்]] மற்றும் நாடகங்களின் பட்டியல் பின்வருமாறு:
 
* ''லார்டு ஜான் மார்பரி (த வெஸ்டு விங்)'' (1999), முதல் பாகத்தில் 11 வது அத்தியாயம் கற்பனை கலந்த கார்கில் போரை சித்தரிக்கிறது.
* 1999 ஆம் ஆண்டு வெளியான பென்டகிராமின் ''பிரைஸ் ஆஃப் புல்லட்ஸ்'' என்ற பாடல் கார்கில் போர் பற்றியதாகும்.
* கார்கில் போரிலிருந்து பல சம்பவங்களை சித்தரித்த, 2003 ஆம் ஆண்டு வெளியான ''எல்.ஓ.சி. கார்கில்'' என்ற இந்தி திரைப்படம், இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே மிக நீளமான திரைப்படமாகும்.<ref>[http://www.imdb.com/title/tt0347416/ LOC: Kargil main page on] the website The Internet Movie Database|IMDb.</ref>
* ''லட்சியா'' (2004) என்ற மற்றொரு இந்தி திரைப்படம், கார்கில் போரை ககற்பனை கலந்து விவரிக்கிறது.<ref>[http://www.rottentomatoes.com/m/lakshya/?show=all A collection of some reviews on the movie "Lakshya" at] Rotten Tomatoes</ref> இத்திரைப்படம், இரு தரப்பையும் நியாயமாகச் சித்தரித்ததால், பாகிஸ்தானிலும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.<ref>[http://www.dailytimes.com.pk/print.asp?page=2004%5C06%5C24%5Cstory_24-6-2004_pg3_3 Bollywood's Kargil —Ihsan Aslam] Daily Times</ref>
* ''சைனிகா'' (2002),<ref>{{cite web|url=http://www.kannadaaudio.com/Songs/FilmStories/home/Sainika.php |title=Sainika Film Story |publisher=KannadaAudio.com |date= |accessdate=2012-06-15}}</ref> என்ற கன்னட திரைப்படம், கார்கில் போரில் போரிடும் வீரன் ஒருவனின் வாழ்வை ஒரு சம்பவமாகக் கொண்டிருந்தது.
* தேசிய விருது பெற்ற அஷ்வினி சவுத்ரியால் 2003 ஆம் ஆண்டு இயக்கப்பட்ட, ''தூப்''<ref>{{IMDb title|id=0387164|title=Dhoop}}</ref> என்ற இந்தி திரைப்படம், இந்திய இராணுவ கேப்டன் அனுஜ் நாயரின் மறைவுக்குப்பின் அவரது பெற்றோரின் வாழ்வைப்பற்றி கூறுகிறது. அனுஜ் நாயர், கார்கில் போரில் உயிர்துறந்த இந்திய இராணுவ வீரர் ஆவார். அவரது மறைவுக்குப்பின் அவருக்கு மகா வீர் சக்ரா வ்ருது வழங்கப்பட்டது.
* ''மிஷன் ஃபதே'' என்பது சகாரா தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட, இந்திய இராணுவம் கார்கிலில் நடத்திய போர் குறித்த நிகழ்ச்சியாகும்.
* ''பிப்டீ டே வார்'' என்பது கார்கில் போர் நிகழ்வுகளைக் கொண்டு அமீர் ராஸா ஹுசைனால் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். விமானங்கள் மற்றும் குண்டுகள் என்று அனைத்தும் உண்மையாகவே அமைக்கப்பட்டு இப்படம் தயாரிக்கப்பட்டது.<ref>{{cite news |title=The larger than life director|url=http://www.financialexpress.com/old/fe/daily/20000219/fle13016.html |publisher=Financial Express |date=February 19, 2000 }}</ref>
* ஓய்வுபெற்ற இந்திய இராணுவ மேஜர் ரவி, போரில் அவரது அனுபவங்களை மையமாகக் கொண்டு ''குருக்‌ஷேத்ரா'' என்ற மலையாள திரைப்படம் ஒன்றை 2008 ஆம் ஆண்டு தயாரித்தார்.
* ''லாக்'' என்ற பாகிஸ்தானிய திரைப்படம், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு மற்றும் போர் முனையில் பாகிஸ்தான் வீரர்களின் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட திரைப்படமாகும்.
 
''டேங்கோ சார்லி'' போன்ற பல திரைப்படங்கள் கார்கில் சம்பவம் குறித்த நிகழ்வுகளைக் கொண்டுள்ளன.<ref>{{IMDb title|id=0444913|title=Tango Charlie}}</ref> இன்றும் கார்கில் தொடர்பான கதைகளுடைய ''கீர்த்தி சக்ரா'' போன்ற திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.<ref>{{IMDb title|id=0485922|title=Keerthi Chakra}}</ref>
 
கார்கில் போர் நடந்த முடிந்த சமயத்தில் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] உலகக் கோப்பைப் போட்டிகள் துவங்கின. அதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போது போரின் தாக்கத்தை வெகுவாக உணர முடிந்தது. அப்போட்டிகள் அந்த உலகக் கோப்பைத் தொடரிலேயே மிகவும் அதிகமாகப் பார்க்கப்பட்ட போட்டிகளாக அமைந்தன.
 
== மேற்கோள்கள் ==
வரி 33 ⟶ 283:
 
{{இந்திய இராணுவம்}}
 
{{stub}}
 
[[பகுப்பு:இந்திய-பாகிஸ்தான் போர்கள்]]
வரி 41 ⟶ 291:
{{Link FA|en}}
{{Link FA|ml}}
{{Link FA|mr}}
"https://ta.wikipedia.org/wiki/கார்கில்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது