வீரபத்திரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 18:
| கிரகம் =
}}
 
'''வீரபத்திரர்''' [[சிவன்|சிவபெருமானது]] நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாக கருதப்படுகிறார்.
சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தக்கன் சிவனை மதியாமலும் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமலும் யாகத்தை நிகழ்த்தினான். நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்காமல் கூற தாட்சாயனி யாகத்தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனைய, ருத்திர தாண்டவடிய சிவனின் உடலெங்கும் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி பின் அவை ஒன்றாகியதென்றும், கடுங்கோபத்துடன் யாகசாலை சென்று அங்கிருந்த தேவர், முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார் என்றும் ஈற்றில் தக்கனின் சிரசை தம் கைவாளினால் அறுக்க அவன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரனிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான் எனவும் புராணங்கள் கூறும்.
வீரபத்திரருக்கு “வீரம்” என்பதற்கு “அழகு” என்றும், “பத்திரம்” என்பதற்கு “காப்பவன்” என்றும் பொருள் கொண்டு “வீரம் காக்கும் கடவுள்” என்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு தனிக் கோயில்களில் வழிபடப்படுகிறார். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[திருவண்ணாமலை]], [[சென்னை]]யிலுள்ள [[மயிலாப்பூர்]], [[தாராசுரம்]], [[கும்பகோணம்]], [[திருக்கடையூர்|திருக்கடவூர்]] போன்ற இடங்களிலும், [[இலங்கை]] [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[கோப்பாய்_வீரபத்திர_சுவாமி_ஆலயம்|கோப்பாய்]], கல்வியங்காடு, வியாபாரிமூலை ஆகிய இடங்களிலும் வீரபத்திரர் கோயில்கள் உள்ளன.
 
{{சைவ சமயம்}}
 
திருச்செந்தூர்ப் புராணத்தில்
<blockquote>“ஆளுடைத் தனி ஆதியை நீத்தொரு
வேள்வி முற்ற விரும்பிய தக்கனோர்
நீள் சிரத்தை நிலத்திடை வீட்டிய
வாள் படைத்த மதலையைப் போற்றுவாம்”</blockquote>{{சைவ சமயம்}}
என வீரபத்திரக் கடவுள் போற்றப்படுகிறார்.
 
<blockquote>"மரகத மணிநீலம் கிண்கிணீ ஜாலபத்தம்
ப்ரகடித ஸமுகேச’ம் பானு ஸோமாக்னி நேத்ரம்
… சூல தண்டோக்ர ஹஸ்தம்
விருதல மஹிபூஷம் வீரபத்ரம் நமாமி" </blockquote>
என்று வீரபத்திரர் பற்றிய ஒரு தியானஸ்லோகம் சொல்கிறது.
 
வட மாநிலத்தில் [[ஹரித்துவாரம்|ஹரித்வாரில்]] தான் [[தக்கன்|தக்ஷன்]] யாகம் செய்ததும் [[தாக்ஷாயணி]] யாக குண்டத்தில் விழுந்ததும் நடந்ததாய்க் கூறுகின்றனர். கங்கால் என்ற பெயரில் உள்ள இடத்தில் [[தக்ஷேஸ்வர மஹாதேவர்]] என்ற பெயரில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார்.
 
இங்கே தான் வீரபத்திரரும் [[காளி|காளியும்]] தக்ஷனையும் அவன் கூட்டத்தாரையும் அழித்ததாயும் கூறுகின்றனர். தக்ஷன் சாகாவரம் பெற்றிருந்ததால் அவன் தலையை வெட்டி அதற்குப் பதிலாக ஆட்டுத் தலையை வைத்ததாகவும் கூறுவார்கள். மேலும் இங்கே சதிகுண்டம் என்ற பெயரிலேயே குண்டம் ஒன்றும் இருக்கிறது.
 
 
==தோற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/வீரபத்திரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது