கீசகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கீசகன்''', மத்சய நாட்டு அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:21, 15 மே 2014 இல் நிலவும் திருத்தம்

கீசகன், மத்சய நாட்டு அரசன் விராடனின் பட்டத்து ராணி சுதேசனாவின் தம்பியும் அந்நாட்டின் தலைமைப் படைத்தலைவனும் ஆவான். துரியோதனுடன் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்களும் திரௌபதியும், சூதாட்ட விதியின்படி, விராட நாட்டு அரசவையில் பல பணிகளில் அமர்ந்து ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு வந்தனர். திரௌபதி, சைரந்திரி எனும் பெயரில் விராட அரசனின் மனைவி சுதோசானவிற்கு பணிபெண்னாக ஏவல் செய்யும் பணி மேற்கொண்டாள். அவ்வமயம் திரௌபதியின் பேரழகை கண்ட கீசகன். சைரந்திரி எனும் திரௌபதியை தன்னிடம் ஒப்படைக்கும்படி தன் தங்கை சுதோசானவிடம் அடம் பிடித்தான்.

வேறு வழியறியாத விராட நாட்டு ராணி சைரந்திரியை கீசகன் மாளிகைக்குச் சென்று மதுபானம் எடுத்து வர ஆணையிட்டாள்.

தான் விரும்பிய பெண் தன் அரண்மனைக்குள் வருவது கண்டதும் இன்ப உணர்வு மேலிட கீசகன் தன்னை மறந்து அவளைக் கட்டி அணைக்க முயன்றான். மிக நளினமாக அவன் பிடியிலிருந்து தப்பினாள் சைரந்திரி.

விராட நாட்டு அரசவை சமையற்கூடத்தில் வல்லாளன் எனும் பெயரில் பணிபுரியும் பீமனை சைரந்திரி ரகசியமாகச் சந்தித்துத் கீசகன் பற்றிய விஷயத்தை கூறி அவனை கொல்லும்படி கேட்டுக் கொண்டாள்.

வல்லாளனாக இருந்த பீமன் வகுத்த திட்டப்படி, திரெளபதி எனும் சைரந்திரி கீசகனிடம் சென்று நாளை இரவு அரசவையில் உள்ள நாட்டியச்சாலையில் தன்னை சந்திக்கச் சொன்னாள். நாட்டியசாலையில் பெண் வேடமணிந்து கட்டிலில் உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த பீமனை, சைரந்திரி என எண்ணி கீசகன் காமவெறியுடன் அணைத்தான். பெண் வேடமணிந்திருந்த பீமன் உடனே எழுந்து கீசகனுடன் கடும் போரிட்டு கொன்று சைரந்திரி எனும் திரௌபதியை மீட்டார்.

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீசகன்&oldid=1660192" இலிருந்து மீள்விக்கப்பட்டது