கோச்சடையான் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4,309 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 23:
 
==கதை சுருக்கம்==
கோட்டையபட்டினம் தேசத்து மன்னன் நாசர். இந்நாட்டில் தலைமை படைத்தளபதியாக இருப்பவர் கோச்சடையான். இவருக்கு ராணா, சேனா என இரு மகன்கள். கோச்சடையான் சிவபக்தர். சிறந்த வீரரும்கூட. அதனால் நாட்டு மக்கள் அவர் மேல் அளவு கடந்த அன்பு வைக்கின்றனர். இது நாசருக்கு பிடிக்கவில்லை. ஆகையால் கோச்சடையானை எப்படியாவது அழிக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார். இந்நிலையில் ஒருநாள் கோச்சடையான், தனது போர் வீரர்களை அழைத்துக்கொண்டு வேறு நாடுகளுக்கு சென்று போருக்கு தேவையான குதிரைகளை வாங்கி கப்பலில் கொண்டு வருகிறார்.
தன் தந்தை கோச்சடையானின் மரணத்திற்கு காரணமான மன்னன் ரிஷிகோடகனை, மகன் ராணா பழிவாங்குவதுதான் ‘கோச்சடையான்’ படத்தின் கதை.
 
அப்போது கோட்டையபட்டினத்தின் எதிரி நாடான கலிங்கபுரியை ஆட்சி புரியும் ஜாக்கி ஷெராப்பின் படை வீரர்கள் மறைந்திருந்து கோச்சடையான் கப்பல்கள் மீது பாய்ந்து சண்டையிடுகிறார்கள். அப்போது நடக்கும் சண்டையில் அனைவரையும் விரட்டியடிக்கிறார் கோச்சடையான். கலிங்கபுரி வீரர்கள் தப்பித்து செல்லும் செல்லும்போது கோச்சடையானின் கப்பல்களில் இருக்கும் உணவுகளில் விஷத்தை கலந்துவிட்டு செல்கிறார்கள். அதை உண்ணும் கோச்சடையானின் வீரர்கள் உயிருக்கு போராடுகிறார்கள்.
கோட்டைப் பட்டிணத்தின் படைத் தளபதி கோச்சடையானின் (ரஜினி) வீரதீர செயல்களால் அண்டை நாடுகள் பலவற்றை கைப்பற்றுகிறான் மன்னன் ரிஷிகோடகன். ஆனால், மக்களும் அரசவை மந்திரிகளும் மன்னனைவிட கோச்சடையானையே அதிகம் புகழ்வதால், ரிஷிகோடகனுக்கு கோச்சடையான் மீது பொறாமை ஏற்படுகிறது.
 
இவர்களை காப்பாற்றுவதற்காக கோச்சடையான் அருகிலிருக்கும் கலிங்கபுரிக்கு சென்று அரசர் ஜாக்கி ஷெராப்பை சந்தித்து, தன் போர் வீரர்களை காப்பாற்றும்படி கேட்கிறார். அதற்கு, ஜாக்கி ஷெராப் அவர்களை காப்பாற்றுவதென்றால், நீ கொண்டு வந்த வீரர்களையும், குதிரைகளையும் என்னிடமே கொடுத்துவிட்டு செல்லவேண்டும் என்று கூறுகிறார். அதற்கு கோச்சடையானும் சம்மதித்து அவரிடமே அனைத்தையும் விட்டுவிட்டு தனது சொந்த நாட்டுக்கு திரும்புகிறார். இருப்பினும், எப்படியாவது தனது வீரர்களை தன்னுடைய நாட்டுக்கு திரும்ப அழைத்துச் செல்வேன் என்று ஜாக்கி ஷெராப்பிடம் சூளுரைத்துவிட்டு வருகிறார்.
ஒரு சமயம் பாரசீக நாட்டிற்குச் சென்று ஏராளமான குதிரைகளையும், போர்க்கருவிகளையும் வாங்கிவிட்டு கடல்வழியாகத் திரும்பி வந்துகொண்டிருக்கும் கோச்சடையான் படை மீது எதிரி நாடான கலிங்கபுரி வீரர்கள் ரகசியத் தாக்குதல் தொடுக்கிறார்கள். கோச்சடையான் படை அவர்களை விரட்டியடித்தாலும், அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் உணவுப் பொருட்களில் விஷத்தை கலந்துவிட்டுப் போகிறார்கள் கலிங்கபுரி வீரர்கள். இது தெரியாமல் அதை உண்ணும் ஏராளமான படைவீரர்கள் உயிருக்குப் போராட, வேறு வழியில்லாமல், கலிங்கபுரி மன்னனிடமே தஞ்சமடைகிறான் கோச்சடையான். போர் வீரர்களையும், குதிரைகளையும், போர்க் கருவிகளையும் தன் நாட்டிலேயே விட்டுச்செல்வதாக இருந்தால், விஷத்தை முறிப்பதற்கு உதவி செய்வதாக மன்னன் வாக்குறுதி தருகிறான். தன் வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு வெறுங்கையுடன் தன் கோட்டைப் பட்டிணத்திற்கு திரும்புகிறான் கோச்சடையான்.
 
ஆனால், கோட்டையபட்டின அரசர் நாசரோ கோச்சடையானை பழிவாங்க இதுதான் சரியான தருணம் என்று அவர்மீது தேசத்துரோக குற்றம் சுமத்தி அவரை கொல்ல உத்தரவிடுகிறார். இவை அனைத்தையும் அறியும் கோச்சடையானின் இளைய மகனான ராணா தனது அப்பாவின் கனவை நிறைவேற்ற முடிவெடுக்கிறார். அதன்படி, கலிங்கபுரிக்கு செல்கிறார். அங்குள்ள படையில் சேர்ந்து வீரதீர சாகசங்கள் செய்து மன்னன் மனதில் இடம் பிடிக்கிறார். அந்நாட்டுக்கு படைத்தளதியாகவும் உயர்கிறார். கோட்டையபட்டினம் நாட்டு வீரர்கள் அங்கு அடிமைகளாக நடத்தப்படுவதை அறியும் ராணா, அவர்களை காப்பாற்றுவதற்காக ஜாக்கி ஷெராப்பின் மகனான ஆதியிடம், அடிமைகளாக இருக்கும் கோட்டையபட்டின வீரர்களை நம்முடைய படையில் சேர்த்து எதிரி நாடுகளிடம் போரிட்டால் அவர்களை எளிதில் வென்று நமக்கு சொந்தமாக்கி கொள்ளலாம் என்று ஆசை காட்டுகிறான்.
நீண்ட நாட்களாக பொறாமை கொண்டிருக்கும் மன்னன் ரிஷிகோடகன் இந்த தருணத்தைப் பயன்படுத்தி கோச்சடையான் மீது தேச துரோகப் பழியைச் சுமத்தி அவனுக்கு மரண தண்டனை கொடுக்கிறான். சாவதற்கு முன் தன் இரண்டு பிள்ளைகளான ராணா, சேனாவிடம் கலிங்கபுரியில் விட்டுவிட்டு வந்த தன் நாட்டு வீரர்களை நீங்கள்தான் திரும்பக் கூட்டிக் கொண்டு வரவேண்டும் என தன் கடைசி ஆசையை சொல்லிவிட்டு உயிரை விடுகிறார் கோச்சடையான். தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றி அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோகப் பழியை ராணா எப்படி போக்குகிறார் என்பதுதான் ‘கோச்சடையான்’ படத்தின் வரலாற்று கதை!
 
ஆதியும் ராணாவின் சூழ்ச்சி தெரியாமல் இதற்கு சம்மதிக்கிறான். பிறகு அடிமைகளை தங்களது படையில் சேர்த்து, அவர்களை அழைத்து கொண்டு கோட்டையபட்டினம் மேல் படை எடுக்கிறான். ராணாவை கோட்டையபட்டின நாட்டின் இளவரசர் சரத்குமார் தலைமையில் படைகள் எதிர் கொள்கின்றன. களத்தில் சண்டை போடுவதற்கு பதில் ராணாவும் சரத்குமாரும் கட்டிப் பிடிக்கின்றனர். இருவரும் சிறு வயது நண்பர்கள் என்கிறார்கள். இதற்கிடையில், ராணாவின் தங்கை ருக்மணியை சரத்குமார் விரும்புகிறார். சரத்குமாரின் தங்கை இளவரசி தீபிகா படுகோனேவுக்கும் ராணாவுக்கும் காதல் மலர்கிறது. இந்த காதல் விவகாரம் மன்னர் நாசரை கோபப்பட வைக்கிறது.
 
ஒரு கட்டத்தில் முகமூடி அணிந்த ஒருவன் அரண்மனைக்குள் புகுந்து நாசரை கொல்ல முயற்சிக்கிறான். அவனை வீரர்கள் பிடித்து முகமூடியை கழற்றும்போது அது ராணா என்பதை கண்டு அதிர்கின்றனர். தந்தையை கொன்றதற்காக பழி வாங்க வந்ததாக ராணா சொல்கிறான். அவனை சிறையில் அடைக்கின்றனர். அங்கிருந்து ராணா தப்பிக்கிறான். இதற்கிடையே, தீபிகா படுகோனேவுக்கும் ஜாக்கி ஷெராப் மகன் ஆதிக்கும் அவசர அவசரமாக நாசர் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். இறுதியில் தனது தந்தையை நயவஞ்சகத்துடன் கொன்ற நாசரை ராணா பழிவாங்கினாரா? தீபிகா படுகோனேவை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
 
==நடிகர்கள்==
25,281

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1664538" இலிருந்து மீள்விக்கப்பட்டது