மு. நவரத்தினசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = முருகுப்பிள்ளை நவரத்தினசாமி
|image = MuNavaratnasamy.jpg
|imagesize = 150px
|caption =
|birth_name =
வரி 25 ⟶ 26:
|}}
 
'''முருகுப்பிள்ளை நவரத்தினசாமி''' (''Murugupillai Navaratnasamy'', பெப்ரவரி 16, 1909 - சூன் 30, 1969)<ref name="thondaimanaru">{{cite web | url=http://thondaimanaru.org/index.php?option=com_content&view=article&id=36:the-first-human-to-swim-across-the-palk-strait&catid=1:history-of-thondaimanaru&Itemid=2 | title=The first human to swim across the Palk Strait | accessdate=25 மே 2014}}</ref> [[இலங்கை]]யின் [[நீச்சல்]] வீரர் ஆவார். [[பாக்குநீரிணை]]யை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்றவர். தனது 44வது அகவையில் 1954 மார்ச் 25 இல் இவர் இச்சாதனையைப் புரிந்தார்.<ref name="islanddnews">{{cite web | url=http://wwwarchives.islanddailynews.lk/index2004/03/24/spo08.php?page_cat=article-details&page=article-details&code_title=103854html | title=Murugupillai Navaratnasamy – the maestro swimmer | publisher=திடெய்லி ஐலண்டுநியூஸ் | date=2524 மேமார்ச் 20142004 | accessdate=25 மே 2014 | author=சிவரத்தினம்மகாலிங்கம், என்ஏ. ஆர். எஸ்.}}</ref>
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
நவரத்தினசாமி [[யாழ்ப்பாண மாவட்டம்]], தொண்டமனாறு என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.<ref name="utube1">{{cite web | url=https://www.youtube.com/watch?v=ApyDZRE8Gio | title=Murugupillai Navaratnasamy Palk Straight Swimmer | accessdate=25 மே 2014}}</ref> [[பருத்தித்துறை]], [[ஹாட்லிக் கல்லூரி]]யில் கல்வி பயின்றார். படிப்பை முடித்த பின்னர் அரச சேவையில் இணைந்து வேளாண்மை பயிற்றுனராகப் பணியாற்றினார். தனது ஊரிலேயே லீலாவதி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள். இளம் வயதிலேயே மனைவி இறந்து விட்டார்.<ref name="islanddnews"/>
 
==நீச்சல் சாதனை==
பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே நீந்துவதில் விருப்பம் கொண்டிருந்தார். பத்து வயதில் 10 மைல்களுக்கும் மேலாக நீந்திச் சாதனை புரிந்தவர்.<ref name="ut2">{{cite web | url=https://www.youtube.com/watch?v=QbN1HsY2iqc | title=Murugupillai Navaratnasamy (Neechchal veran) Palk Straight Swimmer | date=24 மார்ச் 2014 | accessdate=25 மே 2014}}</ref> [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயை]] ஆங்கிலேயர் ஒருவர் நீந்திக் கடந்தார் எனற செய்தியைப் படித்த போதே, அருகில் உள்ள [[பாக்குநீரிணை]]யை நீந்திக் கடக்க வேண்டுமென ஆவல் கொண்டார். அதற்காகக் கடுமையான பயிற்சிகளை எடுத்துக் கொண்டார்.<ref name="ut2"/>
 
1954 மார்ச் 16 இல் பாக்குநீரிணையில் [[வல்வெட்டித்துறை]]யில் இருந்து [[கோடியக்கரை]] வரையான 34 மைல் தூரத்தைக் கடக்க முயன்று கடுமையான கடல் கொந்தளிப்பினால் தோல்வியடைய நேர்ந்தது. கோடியக்கரையை அடைவதற்கு 7 மைல்கள் இருக்கையில் அவரால் தொடர்ந்து நீந்த முடியவில்லை. இதனால் 9 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் முயற்சி செய்ய முடிவு செய்தார்.<ref name="islanddnews"/>
 
1954 மார்ச் 25 மாலை 4:10 மணிக்கு<ref name="thondaimanaru"/> அவர் தனது இரண்டாவது பயணத்தை ஆரம்பித்தார். பல இடர்களுக்கு மத்தியில் 1954 மார்ச் 26 மாலை 7 மணிக்கு 27 மணி நேரம் நீந்திய பின்னர் வேதாரண்யத்தை வந்தடைந்தார்.<ref name="islanddnews"/>
 
அடுத்த நாள் காலையின் கோடியக்கரை, வேதாரண்யம், திருநெல்வேலி மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். நவரத்தினசாமி மார்ச் 28 மாலை 6:30 இற்கு வல்வெட்டித்துறை வந்தடைந்தார். சேர் [[கந்தையா வைத்தியநாதன்]], நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரி. இராமலிங்கம், [[வ. நல்லையா]], [[என். எம். பெரேரா]] உட்பட பெருமளவு மக்கள் இவரை வல்வெட்டித்துறையில் வரவேற்றனர்.<ref name="thondaimanaru"/> [[யாழ்ப்பாணக் குடாநாடு]] விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்திய, இலங்கை ஊடகங்கள் இச்சாதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருந்தன. [[இந்தியப் பிரதமர்]] [[ஜவகர்லால் நேரு]], இலங்கைப் பிரதமர் சேர் [[ஜோன் கொத்தலாவலை]] ஆகியோர் வாழ்த்துச் செய்திகள் அனுப்பியிருந்தனர். கொழும்பில் காலிமுகத்திடலில் 1954 ஏப்ரல் 9ல் நடந்த ஒரு பாராட்டு நிகழ்வில் பிரதமர் இவருக்கு ஒரு வெள்ளிக் கேடயத்தைப் பரிசாகக் கொடுத்தார். [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|எலிசபெத் மகாராணி]] தனது பிறந்தாள் நாள் நினைவாக இவருக்கு British Empire Medal (BEM) வழங்கிக் கௌரவித்தார்.<ref name="islanddnews"/> இவ்விருது கொழும்பில் உள்ள குயீன்சு மாளிகையில் 1955 சனவரி 15 இல் நவரத்தினசாமிக்கு வழங்கப்பட்டது.<ref name="thondaimanaru"/>
 
==இறுதிக் காலம்==
தனது 60வது அகவையில் 1965 ஆம் ஆண்டில் அரச சேவையில் இருந்து இளைப்பாறினார். இளைப்பாறிய பின்னர் இவர் இலங்கையை கட்டுமரம் ஒன்றில் 760 மைல்கள் தூரம் கடலில் சுற்றி வருவதற்குப் பயிற்சி கொடுத்தார்.<ref name="islanddnews"/> 1969 சூன் 30 இல் இவர் காலமானார்.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/மு._நவரத்தினசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது