இறைவாக்கினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
[[இசுரவேலர்|இஸ்ரயேலரின்]] வரலாற்றில், மக்களை கடவுளின் வழியில் நடத்திய பலரும் இறைவாக்கினராக கருதப்படுகின்றனர். எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து இஸ்ரயேலரை மீட்டுக் கொண்டு வந்த [[மோசே]] முதன்மையான இறைவாக்கினராக போற்றப்படுகின்றார். அவருக்கு பின் கடவுளின் பெயரால் இறைவாக்குரைத்த சிலரும் இறைவாக்கினராக கருதப்படுகின்றனர். அரசர் [[தாவீது அரசர்|தாவீது]]ம் இறைவாக்கினர்களுள் ஒருவராக மதிக்கப்படுகின்றார்.
 
[[எலியா]], [[நாத்தான்]], [[ஆமோஸ்]], [[ஏசாயா|எசாயா]], [[எரேமியா]], [[எசேக்கியேல்]], [[தானியேல்]], [[ஒசேயா|ஓசேயா]], [[யோவேல்]], [[ஒபதியா]], [[யோனா]], [[மீக்கா]], [[அபகூக்கு]], [[செப்பனியா]], [[ஆகாய்]], [[செக்கரியா]], [[மலாக்கி]] போன்றோர் பல்வேறு காலக் கட்டங்களில் தோன்றிய இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் ஆவர். இவர்களில் பலர் பெயரால் [[விவிலியம்|விவிலியத்தில்]] நூல்களும் இடம்பெற்றுள்ளன.
 
இஸ்ரயேலின் இறைவாக்கினர்களுள் இறுதியானவராக கருதப்படுபவர் [[திருமுழுக்கு யோவான்]] ஆவார். கடவுளின் மீட்புத் திட்டத்தின் நிறைவில், "[[மகனாகிய கடவுள்|இறைமகன்]] இயேசுவே உலகின் பாவங்களைப் போக்க வந்த செம்மறி"<ref>[[யோவான் நற்செய்தி|யோவான்]] 1:29 'இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்" என்றார்.'</ref> என்பதைச் சுட்டிக்காட்ட மீட்பரின் முன்னோடியாக யோவான் வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/இறைவாக்கினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது