'''அவுரங்கசீப்ஔரங்கசீப்'''(1618-1707)[[முகலாயப் பேரரசு|முகலாய பேரரசின்]] ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். [[ஷாஜகான்]] மற்றும் [[மும்தாஜ் மஹால்|மும்தாஜின்]] தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ''ஆலம்கீர்'' (பாரசீக மொழியில் ’ஆலம்கீர்’ எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள்) என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. [[1658]] இலிருந்து கி.பி. [[1707]] வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு [[காபுல்|காபுலில்]] இருந்து [[தமிழ்நாடு]] வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை [[ஒருங்கிணைப்பு (செயற்திட்ட மேலாண்மை)|ஒருங்கிணைத்து]], திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.