பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →போத்துக்கீசக் குடியேற்றம்: *திருத்தம்* |
|||
வரிசை 85:
== வரலாறு ==
=== போத்துக்கீசக் குடியேற்றம் ===
தற்போது பிரேசில் என அழைக்கப்படும் தென்னமெரிக்கப் பகுதியை 1500 ஆம் ஆண்டில் [[பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால்]] தலைமையிலான போத்துக்கீசக் கப்பல்கள் அடைந்ததில் இருந்து, அப்பகுதி போத்துக்கீசர் வசமானது.<ref name="Boxer, p. 98">Boxer, p. 98.</ref> அப்போது, அங்கே கற்காலப் பண்பாட்டைக் கொண்ட தாயக மக்கள் பல்வேறு இனக் குழுக்களாகப் பிரிந்து காணப்பட்டனர். தூப்பி-குவாரானி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசிய அவர்கள் எப்பொழுதும் தமக்குள் சண்டையிட்டபடி இருந்தனர்.<ref name="Boxer, p. 100">Boxer, p. 100.</ref>
[[படிமம்:Meirelles-primeiramissa2.jpg|thumb|left|பிரேசிலில் முதலாவது [[கிறித்தவம்|கிறித்தவ வழிபாடு]], 1500.]]
முதலாவது குடியிருப்பு 1532 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட போதும், 1534 ஆம் ஆண்டில், [[போர்த்துகலின் மூன்றாம் யோவான்|டொம் யோவான் III]]
பிரான்சுடனான போர்களின் மூலம் போத்துக்கீசர் மெதுவாகத் தமது ஆட்சிப் பகுதியை விரிவாக்கிக் கொண்டனர். 1567ல் தென்கிழக்குத் திசையிலான விரிவாக்கத்தின் மூலம் ரியோ டி செனரோவையும், 1615ல் வடமேற்குத் திசை விரிவாக்கத்தின் மூலம் [[சாவோ லூயிசு|சாவோ லூயிசையும்]] கைப்பற்றினர்.<ref>Bueno, pp. 80–81.</ref> [[அமேசான் மழைக்காடு|அமேசான் மழைக்காட்டுப்]] பகுதிக்குப் படையெடுத்துச் சென்று பிரித்தானியருக்கும் ஒல்லாந்தருக்கும் உரிய பகுதிகளைக் கைப்பற்றி,<ref>[http://www.s4ulanguages.com/wic.html Facsimiles of multiple original documents] relating about the events in Brazil in the 17th century that led to a Dutch influence and their final defeat</ref> 1669 ஆம் ஆண்டிலிருந்து அப் பகுதியில் ஊர்களை உருவாக்கிக் கோட்டைகளையும் அமைத்தனர்.<ref>Calmon, p. 294.</ref> 1680 ஆம் ஆண்டில் தெற்குக் கோடியை எட்டிய போத்துக்கீசர், கிழக்குக் கரையோரப் பகுதியில் (தற்கால [[உருகுவே]]), ரியோ டி லா பிளாட்டா ஆற்றங்கரையில் [[சக்ராமென்டோ]] என்னும் நகரை நிறுவினர்.<ref>Bueno, p. 86.</ref>
17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சர்க்கரை
1494 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின்படி தமக்கு உரியதான பகுதிகளுக்குள் போத்துக்கீசர் விரிவாக்கம் செய்வதை எசுப்பானியர் தடுக்க முயன்றனர். 1777ல் கிழக்குக் கரையோரத்தைக் கைப்பற்றுவதிலும் வெற்றி பெற்றனர். ஆனாலும், அதே ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட [[சான் இல்டிபொன்சோ ஒப்பந்தம்|சான் இல்டிபொன்சோ ஒப்பந்தப்படி]] போத்துக்கீசர் கைப்பற்றிக்கொண்ட பகுதிகளில் அவர்களது இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இம் முயற்சி வீணாயிற்று. இதன்மூலம், இன்றைய பிரேசிலின் எல்லைகள் பெரும்பாலும் நிலை நிறுத்தப்பட்டன.<ref>Boxer, p. 207.</ref>
|