சிவகாமியின் சபதம் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
இப்புதினம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
===
பரஞ்சோதியாரின் காஞ்சி வருகையுடன் இக்கதை தொடங்குகிறது. வழியில் எதிர்படும் சமணர்களினால் காஞ்சியில் ஏற்பட்ட மதமாற்றத்தை பற்றியும் நாம் அறியலாம். சமயக் குறவர் நால்வருள் ஒருவரான [[திருநாவுக்கரசர்|திருநாவுக்கரசரின்]] தாள்பணிந்து இறைதொண்டாற்ற நினைத்து காஞ்சி வந்தவர் விதிவசத்தால் ஆடலரிசியும் பேரழகியுமான சிவகாமியையும் அவள் தந்தையும் தலைமை சிற்பியுமான ஆயனார் அவர்களையும் மதம்கொண்ட யானையின் பிடியிலிருந்து மீட்கிறார். இதனால் ஏற்பட்ட கலவரத்தை முன்னிட்டு பரஞ்சோதியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பின்னர் தான் அவருக்கு காஞ்சியை நோக்கி சாளுக்ய மன்னன் புலிகேசி படையெடுத்து வருவதும் மன்னர் தன்னை நேரில் பார்த்து தன் வீரத்தை பாராட்டவே சிறையில் வைத்திருப்பதும் தெரிந்து கொள்கிறார். ஆனால, அதற்கு முன்பாகவே தன்னுடன் காஞ்சி வந்த நாகநந்தி அடிகல் என்னும் புத்த துறவியின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிக்கிறார்.
|