உத்தராகண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கேதார்நாத் கோயில் பக்தர்கள் வழிபாட்டிற்கு திறப்பு
சி உத்தரகண்ட் நிவாரணப் பணிகள்
வரிசை 52:
==2013ஆம் ஆண்டு பெருமழை வெள்ள அழிவுகள்==
சூன் மாதம், 2013ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் பெய்த தொடர் பெருமழையால் இம்மாநில ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடியதால், ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும், ருத்ரபிரயாக்,பத்ரிநாத் மற்றும் கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி போன்ற புனித இடங்களில் இருந்த பக்தர்களில் பலரும் இறந்தனர். மேலும் [[கேதார்நாத்துக் கோயில்]] முக்கிய கோயில் தவிர அதன் சுற்றுபுறக் கட்டிடங்கள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. நான்கு புனித இடங்கள் என்று சொல்லக்கூடிய [[பத்ரிநாத் கோயில்]], [[கேதார்நாத்துக் கோயில்]], கங்கோத்திரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு செல்லும் தரைவழிச் சாலைகள் நிலச்சரிவுகளால் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதால், இனி பக்தர்கள் இப்புனித கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபட செய்ய இன்னும் மூன்று ஆண்டு காலம் ஆகும் என உத்தர்காண்ட் மாநில அரசு நிர்வாகம் அறிவித்தது.
இந்திய அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் பேலூர் மடத்தை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டது. தலைமை மடத்தின் வழிகாட்டுதலுடன் ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமம், கங்கல் (ஹரித்வார்) பரந்த நிவாரணப் பணிகளை ஜூன் 21 லிருந்து, ஆகஸ்டு 4 வரை மேற்கொண்டது.<ref>[www.rkmkankhal.org/Report-on-Relief-Operations-at-Uttarakhand.pdf உத்தரகண்ட் நிவாரணப் பணிகள்]</ref>
 
கேதார்நாத் சிவபெருமான் கோயில் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு, 2014 மே மாதத்தில் திறக்கப்பட்டது.<ref>{{cite news|title=கேதார்நாத் சிவன் கோவில் வழிபாட்டிற்கு திறப்பு | url=http://temple.dinamalar.com/news_detail.php?id=30810}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/உத்தராகண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது