ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு [[ஓய்வூதியம்]] வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பயனாக ஓய்வூதியம் பெற்று வருவோர் திடீரென மரணம் அடையும் நிகழ்வில் அவர்களது குடும்பத்திற்கு உதவிபுரியும் நோக்கில் 01.01.1997 முதல் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தில் இணைய விரும்பும் ஓய்வூதியர்கள் இதற்காக தங்கள் ஓய்வூதியத்திலிருந்து சிறு தொகையை ஒவ்வொரு மாதமும் சந்தாவாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு மாதாந்திர பங்களிப்பு செய்து வரும் ஓய்வூதியர்கள் இறக்க நேரிட்டால் அவருடைய மனைவி/ கணவன் அல்லது நியமிக்கப்பட்டவருக்கு மொத்தமாக ஒரு தொகை இத்திட்டத்தின் கீழ் உதவியாக வழங்கப்படுகிறது. இந்நலத்திட்டமேஓய்வூதியர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களிடமிருந்து பெறப்படும் சந்தாத் தொகையைக் கொண்டு நிறைவேற்றப்படும் சுயநிதி நலத்திட்டமே ஓய்வூதியர் குடும்பப் பாதுகாப்பு நிதிநிதித் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
 
ரூ 25000 ஒட்டு மொத்தத் தொகையாக வழங்கப்படும் என்று துவக்கப்பட்ட இத்திட்டம், பின்னர் ரூ.35000 ஆக மாற்றம் பெற்று தற்பொழுது ரூ.50000 வழங்கப்படுவதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
 
ஓய்வுதியர்களின் மாதாந்திர பங்களிப்புத் தொகை 01.01.1997 முதல் 31.03.1999 வரையிலான காலத்தில் மாதம் 20 ரூபாயாகவும் 01.04.1999 முதல் 31.05.2000 வரையிலான காலத்தில் மாதம் 40 ரூபாயாகவும் 01.06.2000 முதல் 31.10.2001 வரையிலான காலத்தில் 50 ரூபாயாகவும் 01.11.2011 முதல் மாதம் 70 ரூபாயுமாக மாற்றம் பெற்றது. தற்பொழுது இச்சந்தா தொகை 01.06.2013 முதல் மாதம் 80 ரூபாயாக உயர்த்தப்பட்டு பிடித்தம் செய்யப்படுகிறது.
 
துவக்கக் காலத்தில் இத்திட்டத்தின்படி, ஓய்வூதியர் ஒருவர் இறக்கும் நேர்வில், அவர் குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு சந்தா செலுத்தியிருந்தால் மட்டுமே, அவர்தம் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்க ஆணையிடப்பட்டது. இத்திட்டம் சுயநிதித் திட்டமாக நிறைவேற்றப்படுவதாலும் நிதி குறைவின் காரணமாகவும் இந்நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது இந்நிபந்தனையும் நீக்கப்பட்டு ஓய்வூதியர் ஒருவர் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கான சந்தா தொகையை செலுத்தியிருந்தால் கூட அவர் இறக்கும் நேர்வில் அவரது குடும்பத்திற்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று அரசாணை எண் 416,நாள் 18.11.2010 இல் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது..