சா. ஜே. வே. செல்வநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
| alma_mater = [[யூனியன் கல்லூரி, தெல்லிப்பளை|யூனியன் கல்லூரி]]<br>[[யாழ் பரி யோவான் கல்லூரி|பரி யோவான் கல்லூரி]]<br>[[சாந்த தோமையர் கல்லூரி, கல்கிசை|சாந்த தோமையர் கல்லூரி]]<br>[[லண்டன் பல்கலைக்கழகம்]]<br>[[இலங்கை சட்டக் கல்லூரி]]
}}
'''சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்''' அல்லது '''எஸ். ஜே. வி. செல்வநாயகம்''' (''Samuel James Velupillai Chelvanayagam'', [[மார்ச் 31]], [[1898]] - [[ஏப்ரல் 26]], [[1977]]) அல்லது '''எஸ். ஜே. வி. செல்வநாயகம்''', ''தந்தை செல்வா'' எனப் பலபலராலும் அழைக்கப்படுபவர், [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]]களால் குறிப்பிடப்படுபவர்அரசியல்வாதியாக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர்இவர் இலங்கைத்மூன்று தமிழர்தசாப்தங்களுக்கும் அரசியல்மேலாக வரலாற்றில்இலங்கைத் ஒருதமிழ்ரின் அரசியல் முக்கியமானதலைவராக தலைவராவார்இருந்தவர்.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
செல்வநாயகம் 1898 மார்ச் 31 இல் [[மலேசியா]]வின் [[ஈப்போ]] நகரில் ஜேம்சு விசுவநாதன் வேலுப்பிள்ளை, ஹரியட் அன்னம்மா ஆகியோருக்கு முதலாவது மகவாகப் பிறந்தார். செல்வநாயகத்தின் தந்தை [[யாழ்ப்பாணம்]] [[தொல்புரம்]] என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். மலேசியாவுக்குக் குடிபெயர்ந்து வர்த்தகர் ஆனார். இவரது குடும்பம் பின்னர் [[தைப்பிங்]] நகருக்கு இடம்பெயர்ந்தது. செல்வநாயகத்தின் சகோதரர்கள் ஏர்னெஸ்ட் வேலுப்பிள்ளை பொன்னுத்துரை (பி. 1901), எட்வர்ட் ராஜசுந்தரம் (பி. 1902). தங்கை அற்புதம் இசபெல் இளம் வயதிலேயே இறந்து விட்டார். செல்வநாயகம் 4 வயதாக இருக்கும் போது, தாய், சகோதரர்களுடம் [[பிரித்தானிய இலங்கை|இலங்கை]] திரும்பினார்.
 
செல்வநாயகம் குடும்பத்துடன் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[தெல்லிப்பழை]]யில் வாழ்ந்து வந்தார். செல்வநாயகம் தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் [[பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்|பரி யோவான் கல்லூரி]]யிலும் கற்றார். பின்னர் [[கொழும்பு]] சென்று புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இவருடன் இக்கல்லூரியில் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பின்னாளைய பிரதமர் [[சாலமன் பண்டாரநாயக்கா]] ஆவார். செல்வநாயகம் [[இலண்டன் பல்கலைக்கழகம்|இஅலண்டன் பல்கலைக்கழகத்தில்]] வெளிவாரி மாணவராகப் படித்து தனது 19வது அகவையில் அறிவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார்.
 
பட்டப்படிப்பு முடிந்தவுடன் புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியத் தொழிலில் இணைந்தார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது சகோதரர் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் ஆசிரியப் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கொழும்பு [[உவெசுலி கல்லூரி, கொழும்பு|உவெசுலி கல்லூரி]]யில் ஆசிரியரானார். ஆசிரியப் பணியில் இருந்த போதே [[இலங்கை சட்டக் கல்லூரி]]யில் கல்வி கற்று 1923 இல் சட்ட அறிஞராக வெளியேறினார். 1927 இல் எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சுசிலி என்ற மகளும், செ. சந்திரகாசன், வசீகரன் என இரு மகன்களும் உள்ளனர். உவெசுலி கல்லூரியில் பணியாற்றும் போது அவர் தமிழ்த் தேசிய உடையை அணிகிறார் எனக் குற்றம் சாட்டி அவரை ஆசிரியர் பதவியில் இருந்து விலக்கினர். செல்வநாயகம் பின்னர் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார்.
 
[[File:தந்தை செல்வா.jpg|left|225px|thumb|செல்வநாயகம் சிலை]]
==அரசியலில்==
ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் [[ஜீ. ஜீ. பொன்னம்பலம்]] அவர்களின் தலைமையின்கீழ் இருந்த [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|தமிழரசுக் கட்சி]]யை உருவாக்கினார். இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக [[கூட்டாட்சி]] அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 50 களின் இறுதிப் பகுதியிலும், [[1960கள்|60களிலும்]], [[1970கள்|70களிலும்]], தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர். சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற முழுப்பெயர் கொண்ட கிறித்தவரான செல்வநாயகம், 90%க்கு மேல் [[இந்து சமயம்|இந்து]]க்களைக் கொண்ட [[காங்கேசன்துறை]] நாடாளுமன்றத் தொகுதியில் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுவந்தது அவரது தலைமைத்துவத்தின் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
 
இவருடைய மகன் செ. சந்திரகாசன் தமிழகத்தில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்ற இலங்கை அகதிகளுக்கு அகதிகளால் செயல்படுத்த கூடிய அமைப்பை அமைத்து செயலாற்றி வருகின்றார். இவருடைய மகன் வழிப்பேத்தி [[பூங்கோதை சந்திரஹாசன்]] [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] [[நடிகை]] ஆவார்
இவருடைய மகன் வழிப்பேத்தி [[பூங்கோதை சந்திரஹாசன்]] [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] [[நடிகை]] ஆவார்
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[யாழ்ப்பாண மாவட்டம்]], [[தெல்லிப்பளை]]யைச் சேர்ந்த தந்தை செல்வநாயகம் [[மலேசியா]]வில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் படித்தவர். [[கொழும்பு|கொழும்பில்]] உள்ள புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய புதிதில் செல்வநாயகம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது தாயார் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டது. உடனே அந்த இடத்திலேயே பதவி விலகல் கடிதத்தை கல்லூரி அதிபரிடம் எழுதிக் கொடுத்து விட்டு யாழ்ப்பாணம் பயணமானார். பின்னர் கொழும்பு திரும்பிய அவர் [[இலங்கை சட்டக் கல்லூரி|சட்டக் கல்லூரி]]யில் சேர்ந்து [[சட்டம்]] படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றார். தந்தை செல்வநாயகம் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார்.
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.thinakkural.com/articles/1639-2011-03-29-06-01-24.html தந்தை செல்வாவின் அரசியல் வாழ்க்கை வரலாறு], தினக்குரல், 29 மார்ச் 2011
வரி 66 ⟶ 70:
[[பகுப்பு:இலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள்]]
 
 
{{People-stub}}
"https://ta.wikipedia.org/wiki/சா._ஜே._வே._செல்வநாயகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது