இப்ராஹிம் நபி இருதாரங்களை மணம் கொண்டிருந்தார். மூத்த மனையாள் சாரா என்பார் நெடுங்காலம் பிள்ளைப் பேறில்லாமல் இருந்தார். இளையநங்கை ஹாஜிரா என்பார் இஸ்மாயில் என்னும் மகனைப் பெற்றார். 16 ஆண்டுகள் கழிந்த பின்னர், மூத்தவரான சாரா, இஸ்ஹாக் என்னும் ஆண் மகனைப் பெற்றார். இஸ்ஹாக்கின் மகன் யாக்கூப்; யாக்கூபின் பிள்ளை லேவி என்பாரின் வழியில் இஸ்ரேலிய மார்க்கத்தை நிறுவிய மூசா (மோசஸ்) நபியும், இன்னொரு பிள்ளையான யூதாவின் வழியில் யூத, கிறித்தவ மார்க்கங்களை நிறுவிய தாவுது (தாவீது ராசன்), ஈசா (இயேசு நாதர்) நபியைப் பெற்ற அன்னையாரும் தோன்றினர். தலைமகனான இஸ்மாயில் நபியின் மரபில் இஸ்லாம் சமயத்தைக் காட்டிய நபிகள் நாயகமும் பிறந்தார்.
== இதையும் பார்க்கவும் ==
*[[ஆபிரகாம்|கிருத்துவ பார்வையில் இப்ராகிம் (அலை)]]