ஐந்நூற்றுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி LanguageTool: typo fix
வரிசை 1:
[[File:Badami-chalukya-empire-map.svg|right|150px|thumb|சாளுக்கியர் தலைநகரன் வாதாபி]]
'''ஐந்நூற்றுவர்''' எனப்படுவோர் முற்காலத்தில் [[சாளுக்கியர்|சாளுக்கியத்]] தலைநகராகிய [[வாதாபி]]யில் உள்ள [[ஐகோலே]] என்னுமிடத்தில் அமையப் பெற்றிருந்த ஒரு வணிகக் கழகத்தினர் ஆவர். இன்றைய இந்தியாவின் [[தமிழகம்]], [[கருநாடகம்]] ஆகிய பகுதிகளுக்கிடையில் இவர்களின் வணிகம் சிறந்து விளங்கியது. இவர்களைப் பற்றிபற்றிப் பொ.கா. 9 ஆம் நூற்றாண்டிலிருந்துள்ள கல்வெட்டுக்கள் சில குறிப்பிடுகின்றன.<ref>''A History of India'', by Burton Stein and David Arnold, p.120</ref> சாளுக்கியத் தலைநகரில் இருந்த ஏராளமான கோயில்களிற் பணியாற்றிய பிராமணர்களிற் சிலர் ஐந்நூற்றுவருடனான வர்த்தகத்திலீடுபட்டதாகத் தெரிய வருகிறது.<ref>''A History of India'', by Burton Stein and David Arnold, p.120</ref> எனினும் ஐந்நூற்றுவரிற் பெரும்பாலானோர் தொலை தூர வணிகத்திலீடுபட்ட வணிகர்களாவர். பொ.கா. 9 ஆம் நூற்றாண்டுக்கும் 14 ஆம் நூற்றாண்டுக்குமிடைப்பட்ட காலப் பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் இவர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றியும் இவர்களின் வணிக நடவடிக்கைகளையும் வணிகப் பொருட்களையும் பற்றியும் தெளிவுறுத்துகின்றன.<ref>''A History of India'', by Burton Stein and David Arnold, p.120</ref>
 
[[தென்னிந்தியா]]விலும் [[தென்கிழக்காசியா]]விலும் செயற்பட்ட இவ் வணிகக் கழகம் [[கன்னடம்|கன்னடத்தில்]] ஐயவோலே என்றும் [[தெலுங்கு|தெலுங்கில்]] ஐயவோலு என்றும் [[வடமொழி]]யில் ஆரியரூபா என்றும் தமிழில் ஐந்நூற்றுவர் என்றும் அறியப்படுகிறது. [[சோழர்]]களின் கடுமையான கட்டுப்பாடு காரணமாக இவர்களின் சொந்தப் பண்பாட்டு நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டாலும் சோழர்களின் கீழ் இவர்கள் மிக்க வலிமை பெற்றனர்.<ref>''Nagapattinam to Suvarnadwipa: reflections on Chola naval expeditions to Southeast Asia'' by Hermann Kulke, K. Kesavapany and Vijay Sakhuja, p.xviii and p.181</ref> இவர்கள் வீர வளஞ்சிய தர்மம் எனப்பட்ட வீர தீர அல்லது உயர் மரபு வணிகச் சட்டத்தின் காவலர்களாயிருந்தனர். இவர்களின் கொடியிற் காணப்பட்ட காளை மாட்டைச் சின்னமாகக் கொண்டிருந்த இவர்கள் தீரமிக்க வணிகர்களாப் புகழ் பெற்றிருந்தனர்.<ref>''Peranakan Indians of Singapore and Melaka: Indian Babas and Nonyas--Chitty Melaka'', by Samuel Dhoraisingam, p.3</ref>
வரிசை 12:
 
==தோற்றமும் நடவடிக்கைகளும்==
இடத்துக்கிடம் மாறி மாறி இடம் பெயர்ந்து வணிகம் செய்த இவர்களின் நடவடிக்கைகளே இவர்கள் ஒரு வணிகக் கழகத்தினராக ஆகக் காரணமாகின.<ref>''A History of India'', by Burton Stein, p. 126</ref> ஏனைய வணிகக் கழகங்களுடன் ஒப்பிடும் போது, இவர்களே ஆகவும் கவர்ச்சியுடையோராகத் திகழ்ந்தனர். [[மணிக்கிராமம்]] எனப்பட்ட மற்றுமொரு வணிகக் கழகத்தைச் சேர்ந்தோரும் இவர்களும் பல்வேறு துறைமுகங்களிலும் வணிக மையங்களிலும் காணப்பட்டனர். இவர்கள் கோயில்களுக்குக் கொடையளித்தல், பிராமணர்களுக்கு உணவளித்தல், நீர்ப்பாசன வசதிகளைப் பராமரித்தலில் பங்கு பெறல் முதலிய செயற்பாடுகளில் ஈடுபட்டனர். தென்னிந்தியாவில் காணப்பட்ட இவர்களின் கல்வெட்டுக்கள் இவர்களின் உண்ணாட்டு, வெளி நாட்டு வணிக நடவடிக்கைகளுக்குச் சான்றுகளாக அமைகின்றன. இவ்வணிகர்களில் சிலர் "''நானாதேசி''" (அல்லது "வெவ்வேறு நாட்டினர்) என்றும், வேறு சிலர் "''சுவதேசி''" (அல்லது "சொந்த நாட்டினர்") என்றும் அறியப்பட்டனர். இவர்கள் தென்கிழக்காசியாவில் இந்தியப் பண்பாட்டைபண்பாட்டைப் பரப்பும் செயலிலும் ஈடுபட்டனர்.<ref>''A History of India'', by Burton Stein and David Arnold, p.121</ref>
 
கோயில்களையும் சிலைகளையும் எழுப்புவது மன்னர்களினதும் கோயிற்கட்டுமானங்களுக்குத் துணை புரிந்த ஐந்நூற்றுவர், [[நகரத்தார்]], [[கோமதியர்]] போன்ற வணிகக் கழகங்களினதும் கொடைகளின் மூலமே நிகழ்ந்ததென்பதை கிடைக்கப் பெறும் சான்றுகள் காட்டுகின்றன. அவ்வாறே, புவியியல் அடிப்படையில் தங்களுக்குள் கழகம் அமைத்துக் கொண்டிருந்த [[விசுவகர்ம குலம்]] (சாதி) போன்ற ஆச்சாரிகளின், அஃதாவது கட்டிடக் கலைஞர்களின் பங்களிப்பும் கோயிற்கட்டுமானங்களுக்குக் கிடைத்தது.<ref>''Art of South India'', Andhra Pradesh, by B. Rajendra Prasad, p.85</ref>
 
===வீர வளஞ்சியர்===
ஐந்நூற்றுவர் கழக வணிகர்கள் கன்னடத்தில் வீர பலஞ்சா என்றும் தமிழில் வீர வளஞ்சியர் என்றும் தெலுங்கில் வீர பலிஜா என்றும் "தீரமிக்க வணிகர்கள்" என்ற பொருளில் அழைக்கப்பட்டனர்.<ref>''Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh'', Volume 100, by SS Shashi, p.86</ref> வீர வளஞ்சிய தருமத்தின் காவலர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்ட இவ்வணிகர்களைப் பற்றி நடுக்கால [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரத்துக்]] கல்வெட்டுக்கள் பலவும் குறித்துரைக்கின்றன.<ref>''Studies in economic and social conditions of medieval Andhra'', by K.Sundaram, p.69-76</ref> வீர வளஞ்சியர் பற்றிக் காணப்படும் கல்வெட்டுக்கள் நிறையவே உள்ளன. எடுத்துக் காட்டாக, ஆந்திராவின் [[கடப்பா]] மாவட்டத்திலுள்ள அனிலமை எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பொ.கா. 1531 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று அக்கிராமத்திலிருந்த சங்கமேசுவரர் கோயிலுக்கு ஐந்நூற்றுவர் வணிகக் கழகத்தின் வீர வளஞ்சியர்களால் கொடையளிக்கப்பட்ட விளக்கின் காரணமாககாரணமாகப் பருத்தி, நூல், துணிமணிகள் போன்ற வணிகப் பொருட்களுக்கான தீர்வை நீக்கம் பற்றிக் குறிப்பிடுகிறது.<ref>''Hindu and Muslim religious institutions, Andhra Desa, 1300-1600'', by Ravula Soma Reddy, p.110</ref>
 
ஐந்நூற்றுவர் அல்லது ''ஐயவோலா-எனும்பாரு-சுவாமிகளு'' எனப்பட்டோர் வீர வளஞ்சிய தருமத்தின் காவலர்களாகவும் வீர வளஞ்சிய சமயத்தைப் பின்பற்றுவோராகவும் இருந்தனரென்று [[நெல்லூர்]]ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.<ref>''The quarterly journal of the Mythic society (Bangalore)'', Volume 82, p.88-91</ref> [[குண்டூர்]] மாவட்டத்தின் சிந்தப்பள்ளியில் காணப்பட்ட பொ.கா. 1240 ஐச் சேர்ந்த கல்வெட்டொன்று வீர வளஞ்சிய சமயத்தில் (வணிகக் கழகத்தில்) உபயநானாதேசிகளும் கவரர்களும் மும்முறி தண்டர்களும் இருந்ததாகவும் ஐந்நூறு வீரர்களைத் தம்முடன் வைத்திருக்கும் உரித்துடையோராக இருந்ததாகவும் குறிப்பிடுகிறது.<ref>''A study of the history and culture of the Andhras'', Volume 2, by Kambhampati Satyanarayana, p.52</ref> இவர்களில் உபயநானாதேசிகள் எனப்படுவோர் பல்வேறு பகுதிகளையும் நாடுகளையும் சேர்ந்த தேசிகளும் பரதேசிகளும் நானாதேசிகளுமாக இருந்த அதே வேளை, கவரர்கள் எனப்படுவோர் கவரேசுவரர் எனப்பட்ட கடவுளை வழிபடும் வணிகர்களாக இருந்தனர்.
 
நகரேசுவரரை வழிபட்ட வைசியர்களைக் கொண்ட நகரத்தார் சமூகத்தையும் (''சிறீ கவரேசுவர திவ்ய தேவ சிறீபாத பதுமராதக் குழு'') எனப்பட்ட கவரேசுவரரை வழிபட்ட [[பலிஜா|வளஞ்சியர்]] சமூகத்தின் கவரர்களையும் போலபோலச் சில வணிகக் கழகங்கள் சமய அடையாளங்களின் அடிப்படையில் அமையப் பெற்றிருந்தன.<ref>''Cultural heritage of the Kakatiyas: a medieval kingdom of south India'', by S.Nagabhushan Rao, p.59</ref> மும்முறி தண்டர்கள் எனப்படுவோர் முதலில் போர் வீரர்களாயிருந்து பின்னர் வணிகர்களாக மாறியோராவர். [[பெல்லாரி]] மாவட்டத்தின் குருகோடு என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொ.கா. 1177 ஆம் ஆண்டின் கல்வெட்டொன்று மும்முறி தண்டர் எனப்படுவோர் ஆரியபுரம் அல்லது ஐகோலே என்ற நகரின் ஐந்நூற்றுவர் வணிகக் கழகத்தின் ஒரு பிரிவினர் எனக் குறிப்பிடுகிறது.<ref>''Brahma sri: Researches in archaeology, history, and culture in the new millennium'' : Dr. P.V. Parabrahma Sastry felicitation volume, Volume 1, p.169</ref> போர்களும் படையெடுப்புக்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், வீர வளஞ்சிய சமயம் போன்ற வணிகக் கழகங்கள் பல்வேறு பேரரசுகளின் கீழும் வள மிக்கனவாகவே திகழ்ந்தன.<ref>''A study of the history and culture of the Andhras'', Volume 2, by Kambhampati Satyanarayana, p.125</ref>
 
==தொடர்புடைய தமிழ் ஆவணங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐந்நூற்றுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது