செம்பியன் மாதேவி சித்திரை மாதம் [[கேட்டை]] நட்சத்திரத்தில் சோழர்[[மழவர்]] குடும்பத்தில் பிறந்தவர். சோழப் பேரரசர் [[கண்டராதித்தர்|கண்டராத்தினாரை]] மணந்தார். அவரைப் போல தேவியாரும் சிறந்த சிவத்தொண்டராக விளங்கினார். தன் மகன் [[மதுராந்தகன்]], தன் கொழுந்தனார் [[சுந்தர சோழன்|சுந்தர சோழரின்]] மகன்களான [[ஆதித்த கரிகாலன்]], [[அருள்மொழிவர்மன்]], மற்றும் சுந்தர சோழரின் மகளான [[குந்தவை]]ப் பிராட்டியையும் பொறுப்புடன் வளர்த்தவர். சோழப் பேரரசுகளில் கண்டராத்தினார் மறைந்த பிறகும், ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகும் ஏற்பட்ட சங்கட சூழலில் பட்டத்திற்கு உரியவர் யாரென ஆலோசனை கூறியவர் இவர். ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மன் சிறந்த சிவபக்தனாக இருந்தமைக்கும், தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டுவதற்கு பெரும் காரணமாக இருந்தவர் செம்பியன் மாதேவியார்.<ref>[http://www.tamilindru.com/2010/10/blog-post_02.html பெண்களை மதித்த பேரரசன்]</ref>