கள்ளில் ஆத்திரையனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
கள்ளில் ஆத்திரையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. 175, 389 எண் கொண்ட இவரது புறநானூற்றுப் பாடல்கள் ஆதனுங்கள் என்னும் வள்ளலைப் போற்றுகின்றன. குறுந்தொகை 293 எண் கொண்ட இவரது பாடலில் ஆதி அருமன் என்னும் மன்னன் குறிப்பிடப்பட்டுள்ளான். இவரது குறுந்தொகைப் பாடல் ''கள்ளில்'' என்னும் சொல்லுடன் தொடங்குகிறது. இதனால் இந்தப் புலவர் கள்ளில் என்னும் அடைமொழி பெற்றார் ஆதல் கூடும். அல்லது கள்ளில் என்னும் ஊரினர் ஆதலும் கூடும்.
==குறுந்தொகை 293==
குளத்தில் பூத்த ஆம்பலால் செய்த தழையாடை இடையிடையே விலகி கால் தொடை தெரியுமாறு உடுத்திக்கொண்டு கொழுநனைக் காண்பதற்கு அவள் (பரத்தை) அவ்வப்போது வருவாள். (அவள் முன்) நான் எளியவள் – என்கிறாள் அவன் மனைவி. அரசன் ஆதி அருமன் நாட்டில் கள்ளைத் தந்து உறவினர்க்கு ஊட்டிய பனைமரம் பின்னர் நுங்கு தந்து உதவும். அதுபோல அவள் ஊட்ட வருவாளே! என்று மனைவி கூறுகிறாள். இப்படி இவரது இந்தப் பாடல் தெரிவிக்கிறது. <ref>
<poem>கள்ளின்(ல்) கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப்
பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
|