கருவறையில் மூலவர் வேங்கட கிருஷ்ணர் தவிர ருக்மிணி பிராட்டி, பலராமன், சத்யகி, அனிருத்தன், பிரத்யும்னன் என குடும்ப சமேதராகசமேதகராக காட்சித்தருகிறார்காட்சி தருகிறார். இவர்கள் தவிர பிற சன்னதிகளில் ஸ்ரீ வேதவல்லி தாயார், ஸ்ரீ மன்னாதர் (ரங்கநாதர், ஸ்ரீ [[ராமர்]], ஸ்ரீ கரிவரதர் (வரதராஜர் சுவாமி), துலசிங்கப் பெருமாள் [[(நரசிம்மர்)]], ஸ்ரீ [[ஆண்டாள்]], ஸ்ரீ [[ஆஞ்சநேயர்]], [[ஆழ்வார்கள்]], [[ராமானுஜர்]] , [[மணவாள மாமுனிகள்]] மற்றும் வேதாந்தாசாரியர் ஆகியோரும் காட்சித்தருகின்றனர்காட்சி தருகின்றனர். இங்கே பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் கொண்டு தனித்தனி கோயில்கள் போல் திகழ்கின்றன. இங்கே கோபுரங்களும் மண்டபங்களும் [[தென்னிந்தியா|தென்னிந்திய]]க் கோவில் கட்டிட கலைக்கே உரிய நுட்பமான சிற்பக் கலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.