திருவோவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி LanguageTool: typo fix |
||
வரிசை 6:
== திருவோவியங்களின் சமயப் பின்னணி ==
உலகில் உள்ள பல சமயங்களில் கடவுளரையும் சமயம் தொடர்பான பொருள்களையும் சாயலாகவும் உருவமாகவும் படைப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.<ref>''The Meaning of Icons'', by Vladimir Lossky with Léonid Ouspensky, SVS Press, 1999. (ISBN 0-913836-99-0)</ref> மக்களின் உள்ளத்தில் பக்தியைத் தூண்டி எழுப்பவும், கடவுளருக்கு வழிபாடு
== கிறித்தவ கீழைத் திருச்சபைகளில் திருவோவிய மரபு ==
[[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிறித்தவ கீழைத் திருச்சபை]]த் திருவோவியங்கள் பெரும்பாலும் மூவொரு கடவுள், [[இயேசு]], [[மரியா (இயேசுவின் தாய்)|அன்னை மரியா]], [[புனிதர்]]கள், [[வானதூதர்]]கள், [[திருச்சிலுவை]] போன்ற பொருள்களைச் சித்தரித்தன. அவை பொதுவாகத் தட்டையான மரப் பலகையில் எழுதப்பட்டன. சில சமயங்களில் உலோகம், கல், துணி, தாள் போன்றவற்றிலும் பதிக்கப்பட்டன. கற்பதிகை முறையில் அமைந்த திருவோவியங்களும் உண்டு.
முப்பரிமாணத்தில் கல், பளிங்கு, உலோகம் போன்றவற்றில் திருச்சிலைகள் செய்வது பண்டைய கிறித்தவ வழக்கில் இல்லை. உருவமற்ற கடவுளுக்கு மனிதர் உருவம்
== கிறித்தவ ஓவியம் தோன்றல் ==
[[படிமம்:St. Theodor.jpg|thumb|200px|புனித தியடோர். அரிய நிறக்கல் திருவோவியம். காலம்: கிபி 900. காப்பிடம்: ப்ரெஸ்லாவ், புல்கேரியா.]]
"கிறித்தவக்"
புனித கிளமெண்ட், அக்காலக் கிறித்தவர்கள் ஆவணங்களில் அடையாளம் இடப் பயன்படுத்திய முத்திரை மோதிரங்களில் கிறித்தவ
மேலே குறிப்பிட்ட எல்லா அடையாளங்களும் புற சமயமாகிய கிரேக்க-உரோமைச் சமயத்தில் வழக்கத்தில் இருந்தவை. [[கிறித்தவம்]] அந்த அடையாளங்களில் சிலவற்றை ஏற்றுத் தன் கொள்கைக்கு ஏற்பத் தழுவியமைத்துக் கொண்டது. [[ஹெர்மீஸ்]] என்னும் கிரேக்க கடவுளின் அடையாளமாகிய "நல்ல ஆயர்" (''ஆடு சுமப்பவர்'') உருவகம் [[இயேசு|இயேசுவுக்குப்]] பொருத்தி உரைக்கப்பட்டது
வரிசை 30:
[[படிமம்:Ushakov Nerukotvorniy.jpg|thumb|left|200px|''மீட்பர் இயேசுவின் திருவோவியம்.'' - "கையால் செய்யப்படாத சாயல்" - மரபுவழி திருச்சபைப் பாணி. எழுதியவர்: சீமோன் உஷாக்கோவ். காலம்: 1658.]]
பிலாத்து [[இயேசு|இயேசுவின்]] உருவத்தை ஓவியமாக வரைந்தார் என்னும் கதை தவிர, வேறொரு நிகழ்ச்சியை நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த செசரியா நகர் யூசேபியஸ் என்னும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எதேஸ்ஸா நகர் அரசர் ஆப்கார் (King Abgar of Edessa), நோய்வாய்ப்பட்ட தம் மகனைக் குணப்படுத்த [[இயேசு]]
மேலும், யூசேபியஸ் "திருச்சபை வரலாறு" என்னும் தம் நூலில், [[இயேசு]], [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]], [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] ஆகியோரின் ஓவியங்களைப் பார்த்ததாகவும், செசரியாவில் பான் (''Pan'') என்னும் கிரேக்க கடவுளின் வெண்கலச் சிலை இருந்ததாகவும், சிலர் அச்சிலை இயேசுவின் சாயல் என்று கூறியதாகவும் எழுதுகிறார். பான் சிலைத் தொகுதியில் இரட்டைப் போர்வை அணிந்த ஒருவர் நின்றுகொண்டு தம் கைகளை நீட்டிய நிலையில் இருந்தார் எனவும் அவர்முன் ஒரு பெண் முழந்தாட்படியிட்டு இருந்ததாகவும் அப்பெண்ணே [[லூக்கா|லூக்கா நற்செய்தியில்]] (லூக் 8:43-48) வருகின்ற நோய்வாய்ப்பட்ட பெண் என்று மக்கள் கருதுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.<ref>Eusebius of Caesarea, ''Church History'' 7:18</ref>
வரிசை 53:
[[படிமம்:Menas.jpg|thumb|250px|இயேசு கிறித்துவும் புனித மேனாசும். எகிப்திலிருந்து வந்த கோப்து திருச்சபையின் திருவோவியம். காலம்: கிபி 6ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: லூவெர் காட்சியகம், பிரான்சு]]
[[காண்ஸ்டண்டைன்]] மன்னன் காலத்திற்குப் பிறகு, மன்னன் முதலாம் தியோடோசியுஸ்
இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. 1) முதல் முறையாக, கிறித்தவர்கள் எந்தவொரு தடையுமின்றி, அரசியல்
இதன் விளைவாக, புனிதர்களைச் சித்தரித்த திருவோவியங்களும், மறைச்சாட்சிகளாக இறந்தோரின் சாதனைகளைப் போற்றிய திருவோவியங்களும் பெருமளவில் தோன்றின.
திருவோவியங்கள் உயிர்த்துடிப்புள்ளவையாக உருவாக்கப்பட்டன. கிரேக்க-உரோமைக் கடவுளரின் உருவங்கள் சிலை வழிபாட்டுக்கு இட்டுச் சென்றன என்று முன்னாட்களில் குறைகூறப்பட்டதைத் தொடர்ந்து, கிறித்தவர் பெரும்பாலும்,
== ஓவியத்திலிருந்து ஆளை அடையாளம் காணுதல் ==
சீனாய் நகர நீலுஸ் (Nilus of Sinai) என்பவர் ஒரு புதுமையைக் குறிப்பிடுகிறார். ஆங்கிரா நகர் புனித பிளேட்டோ (St. Plato of Ankyra) ஒரு கிறித்தவ பக்தருக்குக் கனவில் தோன்றினார். கனவில் தோன்றியது யார் என்று தெரியாததால்
இவ்வாறு ஓவியத்திலிருந்து ஆளை அடையாளம் காணுதல் கிரேக்க-உரோமை மதங்களிலும் ஏற்கெனவே நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு
மற்றுமொரு நிகழ்ச்சியில், ஆப்பிரிக்க ஆயர் ஒருவர் அரபு நாட்டவரால் அடிமையாக விற்கப்பட்டு, பின்னர் தெமேத்ரியுஸ் என்னும் ஓர் இளம் போர்வீரரால் மீட்கப்பட்டார். தான் பிறந்த இடமாகிய தெசலோனிக்கா செல்லுமாறு அந்த இளைஞர் ஆயரிடம் கூறினார். ஆயர் தெசலோனிக்கா சென்று தெமேத்ரியுஸ் யார் என்று விசாரித்தபோது அந்நகரில் ஏறக்குறைய எல்லாப் போர்வீரர்களுமே "தெமேத்ரியுஸ்" என்னும் பெயர் கொண்டிருந்ததைக் கண்டு மலைத்துப் போனார். ஏமாற்றத்துடன் அந்த ஆயர் நகரிலிருந்த மிகப் பெரிய கோவிலுக்குள் நுழைந்தார். அங்கே ஓர் அதிசயம் அவருக்காகக் காத்திருந்தது. கோவில் சுவர் ஒன்றில் தொங்கிய ஒரு திருவோவியம் ஆயரின் கவனத்தை ஈர்த்தது. அருகே சென்று பார்த்தபோது அந்தத் திருவோவியத்தில் கண்ட அதே முகம் கொண்ட இளைஞர் தான் தன்னை அடிமைத்தனத்திலிருந்து மீட்டார் என்றும் அவர் ஒரு பெரிய புனிதர் என்றும் ஆயர் கண்டுகொண்டார்<ref name="RC">Robin Cormack, "Writing in Gold, Byzantine Society and its Icons", 1985, George Philip, London, ISBN 0-540-01085-5</ref>
[[படிமம்:Spas vsederzhitel sinay.jpg|thumb|left|[[இயேசு கிறித்து]] "எல்லாம் வல்ல ஆண்டராக" சித்தரிக்கப்பட்ட மிகப் பழமையான திருவோவியம். தேன்மெழுகுக் கலைப்பாணி. [[இயேசு]] கடவுளும் மனிதருமாக
சமயம் சார்ந்த திருவோவியங்களும், அரசரின் ஓவியமும், புரவலர்களின் ஓவியங்களும் தவிர வேறு மனித சாயலைக் காட்டும் ஓவியங்கள் வரையப்படலாகாது என்னும் ஒழுங்கு அக்காலத்தில் நிலவியது.
வரிசை 89:
மோந்தேவேர்ஜினே கோவிலில் உள்ள திருவோவியம் கடந்த நூற்றாண்டுகளில் பலமுறை மீண்டும் மீண்டும் வரையப்பட்டதால், [[லூக்கா நற்செய்தி|புனித லூக்காவால்]] வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற மரியாவின் முகத்தின் அசல் தோற்றம் எவ்வாறு இருந்தது என்பதை வரையறுக்க இயலவில்லை.
இருப்பினும், அறிஞர் குவார்தூச்சி இன்னொரு தகவலைத் தருகிறார். அதாவது, [[உரோமை|உரோமை நகரில்]] புனித உரோமை பிரான்சிஸ்கா (Saint Francesca Romana) கோவிலில் மரியாவின் மிகப் பழங்காலத் திருவோவியம் ஒன்று உள்ளது. அதை 1950இல் ஆய்வுசெய்தபோது,
பிற்காலத்தில், புனித லூக்காவால் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற மரியா திருவோவியங்கள் பலவாகப் பெருகின.<ref>James Hall, ''A History of Ideas and Images in Italian Art'', p.111, 1983, John Murray, London, ISBN 0-7195-3971-4</ref> எடுத்துக்காட்டாக,
வரிசை 107:
எத்தியோப்பியா நாட்டில் பழங்கால மரியா திருவோவியங்கள் பல உள்ளன. அவற்றுள் குறைந்தது ஏழாவது புனித லூக்காவால் எழுதப்பட்டன என்றொரு மரபு உள்ளது.<ref>{{cite book|last=Cormack|first=Robin|title=Painting the Soul; Icons, Death Masks and Shrouds|page=46|year=1997 | publisher=Reaktion Books, London}} எத்தியோப்பியா மரியா திருவோவியங்கள்</ref>
== மனிதரால் வரையப்படாத
சில திருவோவியங்கள் மனிதரால் வரையப்படாமல், இறையருளால் அதிசயமாகத் தோன்றின என்றொரு மரபு உள்ளது. இவ்வகை ஓவியங்கள் [[கிரேக்க மொழி|கிரேக்க மொழியி்ல்]] "ஆக்கைரோப்போயேத்தா" (αχειροποίητα = acheiropoieta) என்று அழைக்கப்படுகின்றன. இச்சொல்லின் நேரடிப் பொருள் "கையால் செய்யப்படாத" என்பதாகும். கடவுளைச் சார்ந்தவற்றை மனிதர் முழுமையாக எடுத்துரைப்பது கடினம் என்னும் தத்துவத்தின் அடிப்படையில், மனிதரால் வரையப்படாதவை என்னும் திருவோவியங்கள் சிறப்பு வணக்கத்துக்கு உரியவை ஆயின. அவை மீபொருளாகவும் (relic) கருதப்பட்டன. அத்தகைய ஓவியங்களை மாதிரியாகக் கொண்டு பிற ஓவியங்கள் எழுதப்பட்டன.
வரிசை 118:
== திருவோவியங்கள் கூறும் இறையியல் ==
கிறித்தவ மரபில் திருவோவியங்கள் ஆழ்ந்த [[இறையியல்]] உண்மைகளை உள்ளடக்கியிருப்பதை அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். [[கிறித்தவம்|கிறித்தவ]] நம்பிக்கைப்படி, கடவுள்
[[யோவான் நற்செய்தி]] கூறுவதுபோல,
வரிசை 156:
[[இயேசு]], [[மரியா (இயேசுவின் தாய்)|அன்னை மரியா]], புனிதர்கள் ஆகியோரைச் சித்தரிக்கும் பண்டைக் காலக் கலைப்படைப்புகள் சுவர் ஓவியமாக, கற்பதிகை ஓவியமாக, செதுக்கிய ஓவியமாக இருந்தன. அவ்வகை ஓவியங்கள் தத்ரூபமாக இருந்தன; பின்னரே இறுகிய கலைப்பாணிகள் எழுந்தன. 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இவ்வோவியங்கள் ஃபாயூம் மம்மி ஆளோவியங்களை (Fayum mummy portraits)<ref>[http://en.wikipedia.org/wiki/Fayum_mummy_portraits ஃபாயூம் மம்மி ஆளோவியங்கள்]</ref> ஒத்திருந்தாலும் அவற்றைவிட தரத்தில் சிறப்பாய் இருந்தன. அவை "தேன்மெழுகுப் பாணியில்" (encaustic paintings)<ref>[http://en.wikipedia.org/wiki/Encaustic_painting தேன்மெழுகுப் பாணி ஓவியம்]</ref> அமைந்த ஓவியங்கள்.
[[இயேசு|இயேசுவைச்]] சித்தரித்த பண்டைய ஓவியங்கள் பொதுப் பாணியில் இருந்தன. அவற்றில் இயேசு இளமைப்
இயேசுவும் மரியாவும் உண்மையிலேயே எவ்வாறு தோற்றமளித்தனர் என்பது யாருக்கும் தெரியாது என்று [[ஹிப்போவின் அகஸ்டீன்|புனித அகுஸ்தீன்]] கூறியதை இவண் கருதலாம்.<ref>St. Augustine, ''De Trinitatis'' 8:4-5.</ref> ஆனால் அகுஸ்தீன் [[இயேசு]] பிறந்து, வளர்ந்த [[திருநாடு|திருநாட்டில்]] வாழ்ந்தவரல்ல. எனவே, அப்பகுதி மக்களின் பழக்கங்களையும் வாய்மொழி மரபுகளையும் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இயேசுவைச் சித்தரித்த ஆளோவியம் முதலில் ஒரே பாணியில் இருக்கவில்லை. செமித்திய பாணி இயேசுவைச் சிறிது சுருள்முடி கொண்டவராகச் சித்தரித்தது. கிரேக்க பாணி இயேசுவைத் தாடியுடையவராகவும், (கிரேக்க கடவுள் [[சூசு|சூஸ்]] போல) தலையில் நடுப்பகுதி வகிடு கொண்டவராகவும் சித்தரித்தது. இவற்றுள், சிறிது சுருள்முடி கொண்ட [[இயேசு]] ஓவியமே மிக இயல்பானது என்று பண்டைக்கால எழுத்தாளர் தெயதோருஸ் லெக்டோர் என்பவர் கூறினார்<ref>Theodorus Lector, ''Church History 1:15.</ref> அவர் கூறிய ஒரு வரலாற்று
கிறித்தவத் திருவோவியங்கள் திருச்சபையின் அங்கீகாரத்தைப் பெற்றது 6ஆம் நூற்றாண்டில்தான் என்று தெரிகிறது.<ref>Belting, ''Likeness and Presence'', [[University of Chicago Press]], 1994.</ref> அவை வழிபாட்டின்போது பயன்படுத்தப்பட்டன. அவை புதுமைகள் புரிந்ததாகவும் மக்கள் ஏற்றனர்.<ref>Patricia Karlin-Hayter, The Oxford History of Byzantium, Oxford, 2002.</ref> 6ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து, திருவோவியங்கள் புரிந்த புதுமைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.<ref>Mango, ''The Art of the Byzantine Empire 312-1453'', [[University of Toronto Press]], 1986.</ref>
வரிசை 172:
திருவோவியங்களை வணக்கத்துக்குரிய பொருள்களாகக் கருதலாமா என்பது பற்றிய விவாதம் கிபி 4ஆம் நூற்றாண்டிலிருந்தே அவ்வப்போது எழுந்ததுண்டு.<ref>Belting, ''Likeness and Presence'', Chicago and London, 1994.</ref> ஆயினும் பொதுமக்கள் நடுவே திருவோவியங்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன.<ref>Ernst Kitzinger, ''The Cult of Images in the Age before Iconoclasm'', Dumbarton Oaks, 1954, quoted by Pelikan, Jaroslav; ''The Spirit of Eastern Christendom'' 600-1700, University of Chicago Press, 1974.</ref>
[[காண்ஸ்டாண்டிநோபுள்|காண்ஸ்டாண்டிநோபுளை]] மையமாகக் கொண்டிருந்த பிசான்சியப் பேரரசின் ஆட்சியாளர்கள்<ref>[http://en.wikipedia.org/wiki/Byzantine_Empire பிசான்சியப் பேரரசு]</ref> திருவோவியங்களின்
கிபி 726-730 காலத்தில் பிசான்சிய பேரரசர் மூன்றாம் லியோ (ஆட்சிக்காலம்: 717-741)திருவோவியங்கள் வணக்கத்திற்குத் தடை விதித்தார். பல நூற்றாண்டுகளாக மக்களிடையே விரிவாகப் பரவியிருந்த திருவோவிய வணக்கத்தை லியோ தடை செய்தது மக்களிடையே பலத்த எதிர்ப்பைக் கிளப்பியது.
வரிசை 178:
லியோ இயற்றிய திருவோவிய வணக்க சட்டத்திற்கு அரசு அதிகாரிகளின் ஆதரவு இருந்தது. திருச்சபைத் தலைவர்கள் சிலரும் ஆதரவு அளித்தனர். ஆனால் மிகப் பெரும்பான்மையான கிறித்தவ இறையியலாரும், துறவியரும் ஆயர்களும் அரச ஆணையைத் தீவிரமாக எதிர்த்தனர். பேரரசின் மேற்குப் பகுதிகள் அரச ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்தன.
கிரேக்க நாட்டில் ஒரு கலவரமே வெடித்தது. இதை அரச படைகள் 727இல் வன்முறையால் அடக்கின. 730இல் காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவர் முதலாம் ஜெர்மானோஸ் திருவோவிய எதிர்ப்பு ஆணையை ஏற்க
பிசான்சிய (உரோமை) பேரரசின் கீழ் இருந்த இத்தாலிய தீபகற்பத்தில் திருத்தந்தை இரண்டாம் கிரகோரியும் அவருக்குப் பின் திருத்தந்தை மூன்றாம் கிரகோரியும் அரச ஆணையைக் கடுமையாக எதிர்த்தார்கள். திருத்தந்தை இரண்டாம் கிரகோரி உரோமையில் சங்கம் கூட்டி, திருவோவிய உடைப்பாளர்களைச் சபைநீக்கம் செய்தார்.
இதற்கு
அதே நேரத்தில் நடு இத்தாலியில் ரவேன்னா நகரில் மக்கள் ஆயுதம்
தென் இத்தாலியில் திருவோவிய வணக்கம் அரச ஆணையை
பேரரசர் லியோவின் மகன் ஐந்தாம் காண்ஸ்டண்டைன் என்பவரும் திருவோவிய வணக்க எதிர்ப்பாளராகவே இருந்தார். ஆனால் பேரரசி ஐரீன் ஆட்சிக்காலத்தில் (797-802)திருவோவிய வணக்கத்துக்கு எதிரான சட்டங்கள் இரத்து செய்யப்பட்டன.<ref>[http://en.wikipedia.org/wiki/Empress_Irene பேரரசி ஐரீன்]</ref>
வரிசை 196:
== திருவோவியங்களில் உள்ள குறியீடுகளுக்கு விளக்கம் ==
பிசான்சியத்தில் உருவாக்கப்பட்ட திருவோவியங்கள் 11ஆம் நூற்றாண்டையும் அதற்குப் பிற்பட்ட காலத்தையும் சார்ந்தவை. இதற்கு முக்கிய காரணம் திருவோவியங்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்த 8-9 நூற்றாண்டுக் காலத்தில் நூற்றுக்கணக்கான திருவோவியங்கள் அடித்து நொறுக்கப்பட்டதே ஆகும். மேலும் 1204இல் நான்காம் [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போரின்]]
திருவோவிய வணக்கம் 11-12 நூற்றாண்டுகளில் ஆழமாக வேரூன்றியது. திருவோவியங்களை வணக்கத்திற்கு வைப்பதற்கென்று ஒரு தனித் திரை அறிமுகம் செய்யப்பட்டதும் இதற்குக் காரணம் ஆகும். அக்காலத் திருவோவியங்கள் மிகவும் இறுக்கமான பாணியில் எழுதப்பட்டன.
|