இமயமலைவாசி களானஇமயமலைவாசிகளான கிராதர்களின் மலைக்கோட்டைகளை, ’புரங்கள்’ என்றும் நகரங்களை ‘புரி’ என்றும் அழைப்பர். இந்த புரங்களையும், புரிகளைகளையும் ஆரியர்கள் கைப்பற்றி அழித்த சான்றுகளை ரிக்வேதத்தில் அதிகமான செய்யுட்களில் விவரிக்கப்படுகிறது. ரிக்வேத கால முனிவர்களான [[பரத்துவாசர்]], [[வசிட்டர்]], [[விசுவாமித்திரர்]] போன்றவர்கள் கிராதர்களை போரில் வெல்ல ஆரிய அரசர்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவி புரிந்தனர். மேலும் கிராதர்களை போரில் வெல்ல ஆரிய அரசர்கள் ரிக்வேத கால கடவுளர்களிடத்திடம் வேண்டிக் கொண்டனர். ஆரிய அரசர்கள் வெற்றி கொள்ள முடியாத, நூறு கற்கோட்டைகளுடைய நகரங்கள் கொண்ட சம்பரான் என்ற கிராதர் இன அரசனை, புரு வம்சத்து ‘திவோதசு’ என்ற ஆரிய அரசன் அழித்தான். திவோதசு புரு வம்சத்தை சார்ந்த கிளை இனமான ‘பரத’ வம்சத்தை சார்ந்தவன். திவோதசு ஆண்ட பகுதி மேற்கில் இராவி நதி, கிழக்கில் யமுனை நதிக்கரை வரை.