கிழக்கு மாகாணம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி fixing dead links |
No edit summary |
||
வரிசை 124:
[[File:பெரு வெள்ளத்தின் போது மட்டு வாவி.jpg|thumb|right|260px|பெரு வெள்ளத்தின் போது மட்டு வாவி]]
[[இலங்கை]]யின் '''கிழக்கு மாகாணம்''' (''Eastern province'') [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை]], [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]], [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை]] ஆகிய மூன்று [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டங்களை]] உள்ளடக்கியுள்ளது.
இலங்கை [[பிரித்தானிய இலங்கை|பிரித்தானியரிடமிருந்து]] அரசியல் விடுதலை பெற்ற பின்னர் உருவான இன அரசியலில் கிழக்கு மாகாணம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் நடைமுறைப் படுத்தப்பட்ட அரசுசார்புக் குடியேற்றத்திட்டங்கள், தமிழ்ப் பெரும்பான்மை மாகாணமாக இருந்துவந்த கீழ் மாகாணத்தின் இனப்பரம்பலில் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குச் சார்பான நிலையைக் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறித் தமிழ் மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்தது. [[1987]] இல் ஏற்படுத்தப்பட்ட [[இலங்கை - இந்திய ஒப்பந்தம்]] கிழக்கு மாகாணத்தை, வட மாகாணத்துடன் தற்காலிகமாக இணைத்து [[வடக்கு கிழக்கு மாகாண சபை]] என்ற ஒரே மாகாணசபை நிவாகத்தின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் இணைந்த மாகாணங்களின் நிர்வாக மையமும், கிழக்கு மாகாணத்திலுள்ள [[திருகோணமலை]]யிலேயே அமைக்கப்பட்டது. இந்தத் தற்காலிக இணைப்பு [[2006]] [[அக்டோபர் 16]] ஆம் நாள் இலங்கை உச்சநீதிமன்றத்தினால் நீக்கப்பட்டு இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன.
|