'''ஆண்டியப்பனூர்'''(''ANDIAPPANUR'')''अनडियप्पुर''வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வட்டத்தில் சந்தனம் மணக்கும் சவ்வாது மலைக்கும் ஏலகிரி மலைக்கும் இடையே அமைந்துள்ள அழகிய கிராமம் ஆண்டியப்பனூர்.திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் பதினெட்டாம் கிலோமீட்டரில் அமைந்துள்ளது.எழில் கொஞ்சும் ஜவ்வாது மலை ஊரின் கிழக்கு மற்றும் தெற்கு அரண்களாக விளங்குகின்றன.ஏலகிரிமலை ஊரின் மேற்கே பெரும் பாறைகளால் நிமிர்ந்து காட்சி அளிக்கிறது.இவ்வூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாப்பாத்தியம்மன் ஆலயம் சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.எங்கும் கண்டிறாத விதமாக கோவிலில் வறட்சியிலும் வற்றாத கிணறு அமைந்துள்ளது.