திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 54:
'''ஆரண்யேஸ்வரர் கோயில்''' [[சம்பந்தர்]], [[நாவுக்கரசர்]] ஆகியோரால் தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[சீர்காழி |சீர்காழி வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் ஆரண்யேஸ்வரர், தாயார் அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தில் பன்னீர் மரம் தலவிருட்சமாகவும், தீர்த்தமாக அமிர்த தீர்த்தமும் உள்ளன. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 12வது தலம் ஆகும். ஆரண்ய முனிவர் இத்தலத்தை வழிபட்டதாக கூறப்படுகிறது.
 
==மூலவர் பெயர்தல வரலாறு==
பிரம்மாவிடம் வரம் பெற்ற [[விருத்தாசுரன்]] என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தம்மைக் காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்வே, விருத்தாசுரனுடன் போரிட்ட [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரன்]], அவனை சம்ஹாரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோக தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க குருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான்.அடர்ந்த வனத்தின் மத்தியில் சிவன், சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக்கண்ட அவன், சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், ""நியாயத்திற்காக செய்யும் செயல் எத்தகையதாக இருப்பினும் அதற்கு பாவபலன் கிடையாது,'' என்று சொல்லி அருள் செய்தார். இதுவே இத்தல வரலாறு ஆகும்.
 
===மூலவர் பெயர் வரலாறு===
ஆரண்ய முனிவர் வழிபட்டதாலேயே, இத்தல மூலவர்க்கு ஆரண்யேஸ்வரர் எனும் திருநாமம் வந்ததாகக் கூறப்படுகின்றது.