முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
பண்டைக்காலத்தில் [[அசிரியர்]]கள் பெருமளவிலான மனித வலுவைப் பயன்படுத்தி [[அரண்மனை]]களையும், [[கோயில்]]களையும், [[பாதுகாப்பு மதில்]]களையும் கட்டினர்.{{sfn|Fletcher|Cruickshank|1996|p=20}} [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகத்திலும்]] சில [[குடியிருப்பு]]க்கள் [[அரண்]] செய்யப்பட்டு இருந்தன. கிமு 3500 அளவில், நூற்றுக்கணக்கான சிறிய [[வேளாண்மை]] சார்ந்த ஊர்கள் சிந்து ஆற்றின் வடிநிலங்களில் காணப்பட்டன. இவற்றுட் பல திட்டமிட்டு அமைக்கப்பட்ட வீதி அமைப்புக் கொண்டவையாகவும், அரண் செய்யப்படவாகவும் இருந்தன. சிந்துவெளி நாகரிகத்தின் முன்னோடிக் குடியேற்றங்களுள் ஒன்றான, [[பாகிசுத்தான்|பாகிசுத்தானில்]] உள்ள [[கொட் டிசி]]யில், கற்களாலும், மண் கற்களாலும் கட்டப்பட்ட வீடுகளின் தொகுதிகள் பெரும் வெள்ளத் தடுப்பு அணைகளாலும், பாதுகாப்பு மதில்களாலும் சூழப்பட்டு இருந்ததன. வேளாண்மை நிலங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அயல் குடியிருப்பக்களிடையே அடிக்கடி [[பிணக்கு]]கள் இருந்ததாலேயே இவ்வாறான பாதுகாப்புத் தேவையாக இருந்தது.{{sfn|Stearns|2001|p=17}} தென்கிழக்கு [[ஆப்கானிசுத்தான்|ஆப்கானிசுத்தானில்]] உள்ளதும், கிமு 2500 காலப்பகுதியைச் சேர்ந்ததுமான ''முண்டிகக்'' என்னும் இடத்தில் பாதுகாப்பு மதிலும், சதுர வடிவிலான [[கொத்தளம்|கொத்தளமும்]] இருந்தன.{{sfn|Fletcher|Cruickshank|1996|p=20}}
 
பண்டைய அண்மைக் கிழக்கில் உருவான முதல் நகரங்களில் நகர மதில்களும், அரண்களும் அவசியமாக இருந்தன. உள்ளூரில் கிடைப்பதைப் பொறுத்து மதில்கள் மண் கற்கள், கற்கள், மரம் அல்லது இவை எல்லாமே மதில்கள் அமைப்பதற்குப் பயன்பட்டன. இவ்வரண்கள், தாக்கும் போது பாதுகாப்பு அளிப்பது மட்டுமன்றி, எதிரிகளுக்குத் தமது வலிமையையும், ஆற்றலையும் காட்டுவனவாகவும் இவை பயன்பட்டன. சுமேரிய நகரமான [[ஊருக்]]கைச் சுற்றியிருந்த மதில் பரவலான மதிப்பைப் பெற்றிருந்தது. இம்மதில் 9.5 கிமீ (5.9 மைல்) நீளமும், 12 மீட்டர் (39 அடி) உயரமும் கொண்டிருந்தது. பின்னர், காவற் கோபுரங்கள், அகழிகள் ஆகியவற்றோடு கூடிய பபிலோனின் மதில்களும் இதுபோலவே பெயர் பெற்று விளங்கின.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/முற்றுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது