பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ref
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
info added
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 57:
 
சூரியன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
==சூரிய கிரணங்கள்==
சித்திரை மாதம் முதல் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்கு கருவறையிலிருக்கும் சிவலிங்கத்திருமேனியின் மீதும், சத்யாம்பிகை அம்பாள் மீதும் சூரியக் கதிர்கள் படுமாறு அமைக்கப்பட்ட சிறப்பான கட்டடக்கலைக் கொண்ட திருத்தலம்.<ref name="கோயில்"/>
 
==நேத்ரோதாரகேஸ்வர சுவாமி==
கண் பார்வையைக் காப்பவர் என்ற பொருளில் இத்தல இறைவனார் ’நேத்ரோதாரகேஸ்வர சுவாமி’ என்ற திருப்பெயர் பெற்றுள்ளார். <ref name="கோயில்"/>
 
==அரச குடும்பத் திருப்பணிகளும் பெயர்க்காரணமும்==
கல்வெட்டுகள் மூலம் இரண்டாம் ராஜேந்திர சோழ மன்னனின் (கி.பி 1052-1064) தேவியான பரவை நங்கை இத்தல இறைவனார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்ததால் ஏராளம் கொடையளித்தது தெரியவருகின்றது. இவரது பெயராலேயே ’பரவைபுரம்’ என்றழைக்கப்பட்டு பின்னர் பனையபுரம் என்றானது.<ref name="கோயில்"/>
 
==தேசிய நெடுஞ்சாலை==
சில ஆண்டு முன்பு, 45C தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக, 1300 ஆண்டு பழைமையான இத்திருக்கோயிலின் முக்கிய பகுதிகள் எடுத்துக்கொள்ளப்பட குறிக்கப்பட்டு, பின்னர் ஊர் மக்கள், வெளியூர் பக்தர்கள், சிவனடியார்கள், பத்திரிக்கைகள் ஆகியோர் எதிர்ப்பை பதிவு செய்ததை அடுத்தும், ஊர் மக்கள் சுப்பிரமணிய சுவாமியை அணுகி உதவி வேண்டியதையடுத்தும் நெடுஞ்சாலைத்துறை வேண்டுகோளுக்கு செவிசாய்த்தது. மக்கள் எதிர்ப்பையடுத்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட நில எடுப்பு அலுவலர் ஆகியோர் மாற்று வழியை பரிந்துரைத்ததையடுத்தும் கோயில் பகுதியை இடிக்காமல் மதில் சுவரை ஒட்டி சாலையிட நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்தது. <ref name="கோயில்"/>
 
==அமைவிடம்==
சென்னையிலிருந்து 150 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்திற்கு 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.<ref name="கோயில்"/>
 
==இவற்றையும் பார்க்க==